என் மலர்

    நீங்கள் தேடியது "Ganesha Chaturthi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எஸ்.பி.கே. பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
    • விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே. பள்ளிகளில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விநாயகருக்கு பூஜைகள் செய்து உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமையில் பள்ளிச் செயலாளர் மணி முருகன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

    இதில் உறவின்முறை நிர்வாகிகள், தலைமையாசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் கொண்டாடப்பட்ட நிகழ்வில் பள்ளி செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் ஜெயவேல் பாண்டியன் உறவின்முறை செயலாளர் முத்துசாமி, முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தானில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 22 வகையான திரவ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன.

    சோழவந்தான்

    சோழவந்தான்-வாடிப்பட்டி சாலையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி பூசாரி சேகர் தலைமையில் மூலவருக்கு பால் தயிர் இளநீர் உள்ளிட்ட 22 வகையான திரவ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. சந்தனகாப்பு அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் மேற்கு பகுதியில் பழமை வாய்ந்த சதுர்வேத மஹாகணபதி கோவிலில் உள்ள மூலவருக்கு அர்ச்சகர் கணேசன் தலைமையில் அபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி திருப்பதி, வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    கோவை 

    கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகம் நடைபெற்றது. பின்னர் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிரதம் உள்பட 11 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முந்தி விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர். இந்த விநாயகர் 19½ அடி உயரம், 11½ அகலம், 190 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட ஆசியாவிலேயே முதல் சிலையாகும்.

    கோவை அருகேயுள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சதுர்த்தியை யொட்டி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று கோவை ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி காலை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. வடவள்ளி ஆபத்சகாய சுந்தர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

    இதேபோல், ரேஸ்கோர்ஸ் விநாயகர் கோவில், காந்திபுரம் சித்தி விநாயகர் கோவில், பேரூர் படித்துறை விநாயகர் கோவில்களிலும், நகரின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதுதவிர வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். விநாயகருக்கு பிடித்தமான கொலுக்கட்டை, சுண்டல் பொரி கடலை படைத்து வழிபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.
    • களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை 31ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.

    பக்தர்கள் வீடுகளில், களி மண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வைத்து மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், அவல் பொரி உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து வழிபடுவார்கள். வழிபாட்டுக்கு வைக்கப்படும் மண் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக எளிதில் கரையும் வகையிலான களிமண் சிலைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.இதையடுத்து களிமண் விநாயகர் சிலைகள் திருப்பூரில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சதுர்த்தி வழிபாட்டுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கான வழிபாட்டு பொருட்கள், சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,2ஆண்டுகளாக, ஊரடங்கால் விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந் தாண்டு உற்சாகத்துடன் கொண்டாட தயாராகிவிட்டனர். களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.கலர் செய்யப்படாத மண் சிலைகள், இயற்கையான காவி பூசிய சிலைகள், விதை விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன என்றனர். திருப்பூர் கொங்கு மெயின்ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பலர் கடைகளில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். அலகுமலை பகுதியில் தயாரிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பூஜைக்கு தேவையான வெற்றிலை, பாக்கு, இலை, பிரசாதம் செய்வதற்கான பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் பலர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் குவிந்தனர். இது மட்டுமின்றி பூக்களும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 3 தினங்களுக்கு முன் கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முல்லை கிலோ 400, அரளி 200, செவ்வந்தி 120, சம்பங்கி 150 ரூபாய்க்கு விற்கிறது. பூ வியாபாரிகள் கூறுகையில், பூ வரத்து அதிகமாகி, சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், அவ்வப்போது மழை மிரட்டுவதால் பூக்களை வாங்கி இருப்பு வைக்க தயக்கமாக உள்ளது. இருப்பினும் நாளை (31ந் தேதி) விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினம் இணைந்து வருவதால், பூ விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

    வருகிற 4-ந்தேதி அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் சாலைகளில் போலீசார் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று நெல்லை டவுன் ஆர்ச் முன்பிருந்து போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கவச உடையணிந்து கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    ஆர்ச் முன்பு தொடங்கிய அணிவகுப்பு பாரதியார் தெரு, வ.உ.சி. தெரு வழியாக 4 ரத வீதிகள் சென்று நெல்லையப்பர் கோவில் முன்பு முடி வடைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
    • 3-ம் நாள் நீ ர்நிலைகளில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும்.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபடுவது வழக்கம். மேலும் கொழுக்கட்டை, அவல், சுண்டல், சக்கரை பொங்கல், கரும்பு, பழ வகைகளை வைத்து படையலிடுவார்கள், 3-ம் நாள் நீ ர்நிலைகளில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும்.

    விநாயகர் சிலைகள்

    விநாயர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் தற்போது விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டி உள்ளது. சேலத்தில் சீலநாயக்கன்பட்டி, அஸ்தம்பட்டி, குரங்குச்சாவடி, உத்தமசோழபுரம், வின்சென்ட், கடை வீதி, குகை, செவ்வாய்ப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    இதில் அரை அடி முதல் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ைவக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை பொது மக்கள்அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். 100 ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    விற்பனை அதிகரிப்பு

    குறிப்பாக லிங்க விநாயகர், ராஜ அலங்காரம், நாராயண விநாயகர், நாகலிங்கம், கஜமுகம், ருத்ரமூர்த்தி, ராஜகணபதி, சயனவிநாயகர் உள்பட பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டி உள்ளது.

    மேலும் விநாயகர் சதுர்த்தி பூைஜக்கு தேவையான அவல், கொண்டை கடலை, பழங்கள்,அரிசி, சர்க்கரை, பூக்கள் விற்பனையும் அதிகரித்தது. இதனால் பூக்கள் விலை அதிகமாக இருந்தது . ஆனால் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொருட்கள் வாங்க பொது மக்கள் கடை வீதிகளில் திரண்டனர். இதனால் கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1,500 போலீஸ் குவிப்பு
    • ஊர்வல பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக வேலூர், காட்பாடி, குடியாத்தம் உட்கோட்ட அளவில் விழா தொடர்பான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், சிலைகளை கரைக்க உள்ள ஏரிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதிக்கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூத்தி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

    இதில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் செப்டம்பர் 2-ந் தேதி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    விழாவை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ''மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.

    அனைத்து ஊர்வல பாதையிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் 22-ந் தேதி தொடங்குகிறது.
    • வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா பல்வேறு கட்டுப்பாடு களுடன் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழா நாட்களில் இரவு கற்பகவிநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். முதல் நாள் இரவு மூஷிக வாகனத்திலும், 2-ம் நாள் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும், 4-ம் நாள் கமல வாகனத்திலும், 5-ம் நாள் ரிஷிப வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    6-ம் நாள் விழாவான வரும் 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் நாள் திருவிழாவில் மயில் வாகனத்திலும், 8-ம் நாள் திருவிழா அன்று குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

    9-ம் நாள் திருவிழா வான 30-ந் தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்த ருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது.

    பல்லடம் :

    விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்து முன்னணி சார்பில் கோவை, திருப்பூர், ஊட்டி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக பல்லடம் அருகே அலகுமலை பகுதியில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பணியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிற்பக் கலைஞர்கள் அங்கேயே தங்கி பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஆகியோர் கூறியதாவது:-

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்களும் ஆர்வமுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. 3 அடி முதல் 11 அடி வரை சிலைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கருட வாகனத்தில் அமர்ந்த விநாயகர், ரத விநாயகர், சித்தி புத்தி விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், சிவன் பார்வதி விநாயகர் என பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பொருட்களைக் கொண்டு இயற்கையான வண்ணங்கள் தீட்டப்பட்டு சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு சிலைகள் அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×