என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha Chaturthi"

    • சுற்றுசூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்.
    • பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது.

    விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல. நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    விநாயகர் சதுர்த்தி விழா - செய்ய வேண்டியவை

    1. சுற்றுசூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்.

    1. சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய இயற்கையாக மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.

    2. சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்

    3. அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும்.

    4. பிரசாத விநியோகத்திற்கு மக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும்.

    5. பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள்.

    6. அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

    7. எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும்.

    8. அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்.

    விநாயகர் சதுர்த்தி விழா - செய்யக்கூடாதவை

    1. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது.

    2. சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது.

    3. சிலைகளின் மேல் பூசிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தண்மையற்ற இரசாயனசாயங்கள் /எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்த கூடாது.

    4. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது.

    5. வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறியகூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது.

    6. பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியகூடிய கோப்பைகள். பிளாஸ்டிக் தட்டுகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

    7. குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது.

    8. அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.

    9. ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது.

    10. ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

    என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை பூஜை நடந்தது.
    • மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ஒவ்வொரு வருடமும் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டு 36-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம்-மதுரைரோட்டில் உள்ள மாயூரநாதசுவாமி கோவில் முன்புள்ள ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் வளாகத்தில் சிலை செய்வதற்கான பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார்.

    இதில் முக்கிய பிரமுகர்கள், பிரபல தொழில் அதிபர் குவைத்ராஜா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.

    • ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
    • 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிகாமணி வரவேற்றார். பாலமுருகன், பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது.
    • சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுநல சங்கத்தினரால் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் திட்டமிட்டு உள்ளனர். இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 18-ந் தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு வாரத்துக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் போலீசார் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி மாநிலம் முழுவதும் உளவுப் பிரிவு போலீசார் உஷாராகி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாத வகையில் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி தொடர்பாக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கக் கூடாது. சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கும் போதே பிரச்சினைக்குரிய இடமாக கருதப்பட்டால் அந்த இடத்தில் எக்காரணத்தை கொண்டும் சிலைகளை வைக்கக் கூடாது. இதனை மீறி யாராவது சிலைகளை வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகளை வைக்கக் கூடாது.

    சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக 17 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மீறி மாற்று வழிகளில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகளை கரைப்பதற்கு திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு பகுதிகளில் குறிப்பாக அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளைக் கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழா மேடையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழா ஏற்பாடுகள் பணியில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை அமைக்கும் இடத்தில் போடப்படும் பந்தல் தீ பிடிக்காத வகையில் அமைக் கப்பட்டிருக்க வேண்டும். பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்பது போன்ற 20-க்கு மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி தொடர்பாக 5 கட்டங்களாக ஆலோசனை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மேற் கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் தங்களது பகுதி யில் சிலைகளை அமைப்பவர்களை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் ஆலோசனை நடத்து கிறார்கள்.

    3-வதாக துணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் குழு சிலை அமைப்பவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இதன் பிறகு இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    கடைசியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் சிலைகளை அமைக்கும் அமைப்பினரின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு சிலைகளை கரைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் இருக்கும் இடங்களில் செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அனைத்து துணை கமிஷனர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

    குறிப்பாக விநாயகர் சிலைகளை அமைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதி யான முறையில் நடத்தி முடிக்க சென்னை போலீசா ரும் தமிழக காவல்துறை யினரும் முடிவு செய்து உள்ளனர்.

    • சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.
    • எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதுதவிர பொது இடங்களிலும் பெரிய வடிவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர்.

    கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிள்ளையார் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    அங்கு சனீஸ்வரருடன் அமர்ந்திருக்கும் பிள்ளையார், விவசாய விநாயகர், கடல்கன்னி உருவத்தில் அருள்பாலிக்கும் பிள்ளையார், சிங்க வாகனங்களில் எழுந்தருளிய விநாயகர்.

    முருகன் புல்லட் ஓட்ட பின்சீட்டில் பயணிக்கும் பிள்ளையார், ராஜகணபதி, டிராகனில் வீற்றிருக்கும் விநாயகர், மயில் மீது அமர்ந்த பிள்ளையார், சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிக்கப்பட்டு வருகின்றன.

    கோவையில் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கூறுகையில், நாங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண் சிலைகளையும், பொதுஇடத்தில் வைப்பதற்காக பிரமாண்ட வடிவில் சிலைகளையும் தயாரித்து வருகிறோம்.

    நாங்கள் வடிவமைக்கும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும். அதாவது தண்ணீரில் எளிதாக கரையும் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.

    அப்படி தயாராகும் சிலைகளை 2, 3 நாட்கள் காயவைத்து, அதன்பிறகு சிமெண்ட் பேப்பர் ஒட்டி, அதில் வாட்டர் கலர் மூலம் பெயிண்ட் அடித்து சிலைகள் செய்கிறோம். அவற்றில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் எனாமல் கலப்பது இல்லை. எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.

    தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. எனவே பிள்ளையார் சிலைகளின் விலையும் தற்போது சிறிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதன்படி சிறிய அளவிலான சிலைகள் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டு வருகிறது.

    கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மே மாதம் முதலே பணிகளை தொடங்கி விட்டோம். எங்களுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்து உள்ளன என தெரிவித்தனர்.

    கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது.
    • அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாளுக்கு முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பஞ்சாங்கம் என்பது திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் ஆகிய 5 விஷயங்களின் தொகுப்புகளை வைத்து கணிக்கப்படுகிறது. திருக்கணிதம், வாக்கியம் என பஞ்சாங்கத்தில் 2 வகை உண்டு.

    தமிழகத்தில் அதிகளவில் பயன்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்.18-ந் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்.19-ந் தேதியும்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும்.

    ஆனால் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது. எதன் அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என ஜோதிடர்கள், பஞ்சாக கணிப்பாளர்கள், ஆன்மீக வாதிகள்தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆற்காடு கா.வெ.சீத்தாராமைய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்க கணிதர் சுந்தர ராஜன் அய்யர் கூறியிருப்ப தாவது:-

    விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அமாவாசையில் இருந்து நான்காவது நாளே சதுர்த்தி வரும். அதன் அடிப்படையில் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4-ம் நாளான செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்த விஷயத்தில் குழப்பம் தேவையில்லை.

    செப்டம்பர் 18-ந் தேதி காலை 11.28 மணிக்கு சதுர்த்தி தொடங்கி 19-ந் தேதி காலை 11.44 மணிக்கு முடிவடைகிறது.

    இந்த சதுர்த்தி நேரத்திலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    தமிழகத்தில் 18-ந் தேதி தான் விநாயகர் சதுர்த்தி இதில் எந்த மாற்றமும் இல்லை. வட மாநிலங்களில் 19-ந் தேதி கொண்டாடப்படலாம். அங்கு அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி அன்று விளாம்பழம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், லட்டு, தேங்காய் கொண்டு செய்த பலகாரங்கள் படையலிட்டு விநாயகரை வழிபடுங்கள்.

    விநாயகரை வழிபட்டால் செல்வம் பெருகும், பேரும் புகழும் கிடைக்கும் என்றார்.

    இதேபோல் மேலும் ஜோதிடர்கள் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் செப்.18-ந் தேதி தேரோட்ட மும், மறுநாள் தீர்த்தவாரியும் நடக்கிறது.

    காஞ்சி சங்கர மடத்தில் பண்டிதர்கள், பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் பங்கேற்ற சதஸ் எனும் கூட்டம் நடந்தது. இதில் செப்.18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த் தியை கொண்டாடு வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து கோவில்களிலும் செப்டம்பர் 18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளைதான் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று ஜோதி டர்கள், ஆன்மீகவாதிகள் வலியுறுத்தியுள்ளனர். 

    • நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
    • சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    காஞ்சிபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங் வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் , பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
    • விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொன்னேரி பகுதியில் 2 அடிமுதல் 10 அடி உயரம் வரையிலான 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பல வண்ணங்களில் தயார் நிலையில் உள்ளன. பொன்னேரி பகுதியில் மட்டும் 55 விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் அதனை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமை தாங்கினார். அப்போது போலீசார் கூறும்போது, விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும் . எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகள் 5 நாட்களுக்குள் குறிப்பிட்ட இடத்தில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க மினி லாரி டிராக்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி ஆட்டோகளில் எடுத்துச் செல்லக்கூடாது. சிலைகளை எடுத்து செல்லும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. பழவேற்காடு கடலில் கரைக்க விநாயகர் சிலை கொண்டு செல்லும் வாகனங்களில் அதிகமான ஆட்களை ஏற்றக் கூடாது என்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், கலைத்தோழன் மற்றும் விநாயகர் சிலை குழு அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா.
    • மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது.

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந்தேதி கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களை பற்றி பார்க்கலாம்.

    மும்பை சித்தி விநாயகர்

    இந்தியாவின் மிகவும் பிரபலமான கணபதி கோவில்களில், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை காண்பதற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிவார்கள். குழந்தை வரம் அருளும் விநாயகராக இவர் வணங்கப்படுகிறார். இந்த பழமையான கோவிலுக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து வழிபட்டுச் செல்வதைக் காண முடியும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள `சித்தி விநாயக் கணபதி மந்திர்' இரவு நேரத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். அப்போது கோவில் வளாகம் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

    புனே விநாயகர்

    மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்குப் பிறகு, மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புனேவில் உள்ள `ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி' கோவில் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவில், ஆலயத்தின் உள்ளார்ந்த வடிவமைப்புகள் மற்றும் தங்க சிலைக்கு பிரசித்திப் பெற்றது. பிளேக் நோயால் தன் மகனை இழந்த ஒரு தொழிலதிபர் இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார். கணேஷ் உற்சவத்தின் போது இந்த ஆலயம் வண்ண விளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கும்.

    மகாராஷ்டிரா கணபதி

    ரத்னகிரியில் உள்ள கணபதிபுலே கோவிலில், மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார் விநாயகப்பெருமான். இந்தக் கோவிலின் விநாயகர் சிலை யாராலும் வைக்கப்படவில்லை என்றும், சுயமாக உருவானது என்றும் தல வரலாறு சொல்கிறது. ஒருமுறை உள்ளூர் மாடு பிடிப்பவரின் பசு, பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய பால் முழுவதையும் சுரந்தது. இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்ததால், அந்த நபர் அங்கு சென்று பார்த்தபோது, அங்கே விநாயகரின் சுயம்பு வடிவம் இருப்பதைக் கண்டார். அன்று முதல் இங்கு வழிபாடு நடைபெறுவதாக தல வரலாறு கூறுகிறது. பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களில் இத்தல விநாயகர் மீது, சூரிய ஒளி நேரடியாக விழுவதை கண்டு ரசிக்கலாம்.

    • செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு.
    • சதுர்த்தி விரதம் அன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி பாராயணம் செய்வது சிறப்பு.

    விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.

    விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப்பெண்களுக்கு முடிந்த வரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்டம் நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

    விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

    செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.

    திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.

    • கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது.
    • அமெரிக்காவில் விநாயகருக்காக விவேகானந்தர் கோவில் கட்டினார்.

    1. மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடைவர்.

    2. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. துதிக்கையில் தண்ணீர்க்குடம். பின் இரண்டு கைகளில் அங்குசம் பாசம். முன் கைகளில் வலதுகையில் தந்தம், இடது கையில் மோதகம்.

    3. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.

    4. அமெரிக்காவில் விநாயகருக்காக விவேகானந்தர் கோவில் கட்டினார்.

    5. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.

    6. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல்லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியை தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன் பொருள்.

    7. சிவபெருமான் உமாதேவியைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார். இதனைப் போன்றே விநாயகர் வல்லபையைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார்.

    8. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.

    9. வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.

    10. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதியே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

    11. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.

    12. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.

    13. இப்பூவுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.

    14. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம்- சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.

    15. விநாயகருக்கு தேங்காய் எண்ணை காப்புதான் மிகவும் பிரியமானது. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.

    16. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜ்வாலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசுரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.

    17. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.

    18. சக்தியையும், சிவனையும் வேண்டிக்கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும்.

    19. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.

    20. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.

    21. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை உருவாக்கியது நரசிம்மவர்ம பல்லவன்.

    22. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.

    23. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

    24. விநாயகர் என்றால் அவரைவிட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

    25. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூவரும் போற்றி வணங்குகின்ற விநாயகர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆவார்.

    26. பிள்ளையாருக்கு ஞானக் கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

    27. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப் படுகின்றார்.

    28. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.

    29. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.

    30. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகரை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர்.
    • புத்தர்களும் ஜைனர்களும் கூட விநாயகருக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர்.

    நம் கஷ்டங்களையும், வினைகளையும் தீர்த்து வைப்பவர் விநாயகப் பெருமான், அதனால் தான் விநாயகரை, ''வினை தீர்ப்பவர்' என்கிறோம். எந்த செயலை ஆரம்பிக்கும் முன் அவரைத் தொழுதுவிட்டு செய்தால் கையில் எடுத்த வேலை மங்கலகரமாய் முடியும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும். தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு என்ற மரபு பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத தொடங்குவார்கள்.

    பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், விநாயகர் என்பதில் முதலில் வருபவர் விநாயகர். விநாயகரை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் விநாயகரை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.

    பிரம்மாவை வர்த்த புராணத்தில் விநாயகரே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுகிறது. எனவே இவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார். அவர்கள் இவருக்கு அளிக்கும் பெயர் விஸ்வக்சேனர் என்பதாகும்.

    புத்தர்களும் ஜைனர்களும் கூட விநாயகருக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர். விநாயகர் வழிபாடு இந்தியாவின் மட்டும் என்று இல்லாமல் தமிழிழம் நோபாள், திபெத், தாய்லாந்து, பெர்சியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, என கடல் கடந்தும், சீனா, ஜப்பான், ஜாவா, பாலி, போர்னியா போன்ற அயல் நாடுகளிலும் பரவியுள்ளது.

    மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கண்டு எடுக்கப்பட்ட 3,000 இந்து கடவுள் சிலைகளில் விநாயகர் சிலையும் அதிகமாக உள்ளன. மெக்சிகோவில் இவருக்கு உள்ள பெயர் 'வீரகோசா' அயல் நாடுகளில் வெகு பழமை காலத்திலேயே விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. ஈரான் நாட்டில் அரிசிதான் என்ற இடத்தில் பல வருடங்களுக்கு முன் யானை முகம் கொண்ட ஒரு தகடு அகழ் ஆராய்ச்சியின்போது கண்டு பிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த தகட்டின் காலத்தை 1200 ஆண்டுகளுக்கு முந்தையது என நிர்ணயித்துள்ளனர்.

    மிகவும் பழமையான ரிக் வேத வல்லுனர்கள் கடவுளர்களில் மிகச்சிறந்தவராக விநாயகரை கருதுகின்றனர். விநாயகரை குறித்த பல தோத்திரங்கள் வேதங்களில் காணப்படுகின்றன. தமிழ் ஈழத்திலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விநாயகர் வழிபாட்டு புனித தலங்கள் ஏராளமாக உள்ளன.

    இவரது உருவம் நம்மை புன்முறுவல் பூக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறது. வேழமுகம், அதற்குக் கீழே மனித உடல், மிகப்பெரிய தொந்தி, இடதுபக்க வாயில் ஆண்மையைக் குறிக்கும் நீண்ட தந்தம், வலதுபுறம் பெண் தன்மையைக் குறிக்கும் முறிந்த சிறிய தந்தம் ஆகியவை வியக்க வைக்கின்றன. பருத்த வயிறு பூதகணங்களை உள்ளடக்கியவர் என்பதைச் சுட்டுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி எனப்படுகிறது. இந்த வளர்பிறைச் சதுர்த்தி சிலசமயம் புரட்டாசியில் கூட நிகழும். இந்த வருடம் புரட்டாசி 1 (திங்கட்கிழமை 18.9.2023) சதுர்த்தி திதி நிகழ்கிறது. அன்றே சதுர்த்தி விரதமும், விநாயகர் சதுர்த்தியும் அனுஷ்டிக்க வேண்டும்.

    ஒருமுறை பார்வதி தேவி நீராடச் செல்லும் போது காவலுக்கு யாருமில்லாததால் தான் குளிக்க வைத்திருந்த சந்தனக்குழம்பினால் ஓர் உருவம் உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்க அதுவே அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்ற தேவியின் ஆணைப்படி அப்பிள்ளை ஈசனையும் தடுத்ததால் சினமடைந்தவர் அதன் சிரசை துண்டித்துவிட்டார்.

    அதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று, காளியாக மாறி எல்லாவற்றையும் அழிக்கலானார். அவரைச் சாந்தப்படுத்த ஈசனின் ஆணைப்படி தங்கள் பார்வையில் முதலில் தென்பட்ட யானையின் தலையைப் பூதகணங்கள் கொண்டுவர அதையே பிள்ளையின் முண்டத்தில் இருத்தி உயிர்ப்பித்தார்.

    அன்னையும் சமாதானமுற்று 'பிள்ளையாரை' அணைத்துக்கொண்டார். இந்நிகழ்வு நடந்த தினமே பாத்ரபத வளர்பிறை சதுர்த்தியாகி அவரது ஜெயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவருக்கு பிடித்த அவல், பொரி, கடலை கொழுக்கட்டை, கரும்பு போன்ற நிவேதனப் பொருள்களை ஏழை எளியோருக்கு தானம் செய்தால் நல்லது. விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நற்சிந்தனையோடு நன்னீரில் குளித்துப் பூஜைக்கு வேண்டிய பொருள்களைச்சேகரிக்க வேண்டும்.

    களிமண்ணில் செய்த பிள்ளையாரைப் பல்வேறு விதமான இலைகள், பூக்களில் (21 வகையான) அருகம் புல்லையும் இரண்டு இரண்டாகச் சேர்த்துப்பூஜிக்க எடுத்து வைத்து கொள்ளலாம்.

    வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப்படித்து வரலாம். பிள்ளையார் வழிபாடு என்ற அத்தியாயத்தில் கூறியுள்ளபடி அவருக்கு உபச்சரங்களான ஆவாகனம், ஆசனம், ஸ்தாபனம், பாதபூஜை, நீர் அளித்தல், பால், தயிர், மோர் அளித்தல், பஞ்சாமிருதம், துணிகள், சந்தனம், குங்குமம், ஆபரணங்கள், மலர், அட்சதை, தூபம், தீபம், குடை, தாம்பூலம், சுற்றி வணங்குதல், தரையில் வீழ்ந்து வணங்குதல், சாமரம் வீசுதல், போன்ற சேவைகளைச் செய்தல் வேண்டும்.

    வீட்டில் இது போல் செய்ய முடியாதவர்கள் கோவில் சென்று சிறப்பாக சேவை செய்தல், பாடல் கேட்டல், காப்பு, அகவல், படிப்பதும் நல்ல பயன் தரும். பூஜையில் வைத்த பிள்ளையார் சிலையை அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும்.

    ×