search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddhi Ganesha"

    • புனித நீர் கொண்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகரில் பழமைவாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது. தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றின் நடு மையத்தில் அமைந்துள்ள இந்த சித்தி விநாயகர் என்று அழைக்கப்படும். இந்தகோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைக்கப்பட்டு அதில் புனித நீர் கொண்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    தொடர்ந்து நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார் கடங்க ங்களை சுமந்து வந்து மல்லாரி இசைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீசித்தி விநாயகருக்கு கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் கருவரையில் உள்ள வினாயகர் சிலைக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் பலிபீடம் ஆகிய இடங்களில் கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரி யார் சுவாமிகள். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஆரோக்கியமதன், விழா ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், நகர மன்ற தலைவர் குண்டாமணி ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வருகிற 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா.
    • மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது.

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந்தேதி கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களை பற்றி பார்க்கலாம்.

    மும்பை சித்தி விநாயகர்

    இந்தியாவின் மிகவும் பிரபலமான கணபதி கோவில்களில், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முக்கியமானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை காண்பதற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிவார்கள். குழந்தை வரம் அருளும் விநாயகராக இவர் வணங்கப்படுகிறார். இந்த பழமையான கோவிலுக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து வழிபட்டுச் செல்வதைக் காண முடியும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள `சித்தி விநாயக் கணபதி மந்திர்' இரவு நேரத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். அப்போது கோவில் வளாகம் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

    புனே விநாயகர்

    மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்குப் பிறகு, மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புனேவில் உள்ள `ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி' கோவில் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவில், ஆலயத்தின் உள்ளார்ந்த வடிவமைப்புகள் மற்றும் தங்க சிலைக்கு பிரசித்திப் பெற்றது. பிளேக் நோயால் தன் மகனை இழந்த ஒரு தொழிலதிபர் இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார். கணேஷ் உற்சவத்தின் போது இந்த ஆலயம் வண்ண விளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கும்.

    மகாராஷ்டிரா கணபதி

    ரத்னகிரியில் உள்ள கணபதிபுலே கோவிலில், மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார் விநாயகப்பெருமான். இந்தக் கோவிலின் விநாயகர் சிலை யாராலும் வைக்கப்படவில்லை என்றும், சுயமாக உருவானது என்றும் தல வரலாறு சொல்கிறது. ஒருமுறை உள்ளூர் மாடு பிடிப்பவரின் பசு, பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய பால் முழுவதையும் சுரந்தது. இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்ததால், அந்த நபர் அங்கு சென்று பார்த்தபோது, அங்கே விநாயகரின் சுயம்பு வடிவம் இருப்பதைக் கண்டார். அன்று முதல் இங்கு வழிபாடு நடைபெறுவதாக தல வரலாறு கூறுகிறது. பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களில் இத்தல விநாயகர் மீது, சூரிய ஒளி நேரடியாக விழுவதை கண்டு ரசிக்கலாம்.

    • சித்தி விநாயகர் சிலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது.
    • சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தர்மாபுரம்தெரு மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர் நற்பணிமன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு 35-வது ஆண்டு விநாயகர் சதூர்த்தி வீதி உலாவை நடத்துகிறார்.

    இதையொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மும்பையில் வடிவமைக்கப்பட்ட மும்பை சித்தி விநாயகர், வல்லப விநாயகர் சிலை இன்று அதிகாலை ராஜபாளையம் வந்து சேர்ந்தது. மேலும் நடப்பு தமிழ் வருடத்தை போற்றும் வகையிலான சுபகிருதி விநாயகர், சகாரம்ப விநாயகர், சித்தி விநாயகர் விக்ரகங்களின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ×