search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    33 பேருக்கு பாதிப்பு சேலத்தில் விரைவில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு
    X

    33 பேருக்கு பாதிப்பு சேலத்தில் விரைவில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு

    • ஒரே நாளில் மேலும் 33 பேருக்கு பாதிப்பு சேலத்தில் விரைவில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
    • 154 பேருக்கு சிகிச்சை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் சேலம் மாநக–ராட்சியில் 17 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் 7 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 9 பேரும் அடங்குவர்.

    இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் குணமாகி வீடு திரும்பினர். மேலும் 154 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொேரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் கொரோனா தொற்று குறித்த சந்தேகங்க–ளுக்கும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தெரிந்து கொள்ளவும் கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. இதில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×