search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மையம்"

    • பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாமில் குவிந்த இளம் வாக்காளர்கள்
    • 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    நாகர்கோவில் :

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27-ந்தேதி வெளியிடப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 37,405 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்களும் 143 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர்.

    பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக உள்ளனர். இந்த நிலையில் 1.1.2024 தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பக் கூடியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு கட்டமாக இன்று (சனிக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 640 மையங்களிலும் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இளம் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களது பெயர்களை பதிவு செய்த னர். பெண் வாக்காளர்களும் அதிகமானோர் வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கும் ஒரு சிலர் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளம் வாக்காளர்களை, அரசியல் கட்சியினர் பலர் அழைத்து வந்திருந்தனர். 18 வயது நிரம்பிய பெண்கள் தங்களது பெற்றோருடன் வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

    இதை தொடர்ந்து நாளை (5-ந் தேதி) யும், வருகிற 18 மற்றும் 19 -ந் தேதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்காக உதவி மையத்தை மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மாநகர்நல அலுவலர் டாக்டர். சுபாஷ்காந்தி, மண்டல குழு தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கவுன்சி லர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொற்றா நோய் பிரிவு செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்கள் மற்றும் 22 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியின் இந்த மக்களை தேடி மருத்துவ உதவி மையத்தை 78458 49867 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் தொடங்கி வைத்தனர்
    • தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கி வரலாற்று சாதனை படைத்ததாக அமைச்சர் பெருமிதம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு ஐ.டி.ஐ நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு தற்போது ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்பமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.

    இதில் தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு புதிய மையத்தை குத்துவிள க்கேற்றி தொடங்கி வைத்த னர்.நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலா ளர் குமார்ஜெயந்த், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன்மே ம்பாட்டுத்தறை அமைச்சர் சி.வி.கணேசன் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    குன்னூர் அரசினர் தொழில்பயிற்சி மையத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டு உள்ளது.

    உலகளவில் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டாடா நிறுவனத்தின் சமூக பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    குன்னுார் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டு 90 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதனை தற்போது 100 சதவீதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் பயிலும் சி.என்.சி மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப கல்வியை தமிழக மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    குன்னூர் தொழில்பயிற்சி மையத்தில் படித்தவர்களில் 83 சதவீதம் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணியில் சேர்ந்து உள்ளனர். உயர்கல்வி முடித்தவர்கள் கூட வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொழில்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழி ல்பயிற்சி நிலையங்கள் தெடங்கப்ப ட்டு உள்ளன. இது வரலாற்று சாதனை ஆகும்.

    அரசு தொழி ல்பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடிக்கும் மாணவர்கள், உள்நாடு-வெளிநாடு களில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணியம ர்த்தப்படுவர். எனவே மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் விடாமுயற்சியுடன், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும்.

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மேலும் இங்கு படிக்கும் மாணவர்கள் சக நண்பர்களும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

    • முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார்.
    • முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் கல்லூரியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கான ஐ.ஏ.எஸ் அகாடமி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சென்னை அடைக்கல அன்னை சபையின் தலைவர் மரியபிலோமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு புதிய ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

    • இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது.
    • பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ,பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வட்டாரங்களில் பாலின வள மையம் ,வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டு ள்ளது.

    இந்த மையம் தஞ்சாவூர் வட்டாரத்தில் வட்டார சேவை மையத்திலும், பட்டுக்கோட்டை வட்டா ரத்தில் ஆலடிக்கு முலை கிராம மையத்திலும் செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பாலின சேவை மையத்தி னை பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் வட்டார பாலின சேவை மையத்தை 8754990178 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை வட்டார சேவை மையத்தை 6369849825 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலர் கழிவு சேகரிப்பு மையம் தொடக்கப்பட்டுள்ளது.
    • துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் உலர் கழிவு சேகரிப்பு மையத்தை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மானாமதுரை நகராட்சி பொதுமக்கள் தங்கள் பயன்படுத்திய மற்றவருக்கு உபயோகமான துணிகள், செருப்புகள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை உலர் கழிவு சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்கலாம். மானாமதுரை நகரை குப்பை இல்லாத நக ராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுகுறித்த பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், நகர் மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச் செல்வம், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குப்பை கழிவு மறுசுழற்சி பயன்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை கழிவுகளுக்கான மறுசுழற்சி பயன்பாட்டு மையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எதிர்புறம் உள்ள நாடக மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தை பேரூராட்சி தலைவர்ஜெயராமன் தொடங்கி வைத்தார். மேலும் அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தேவையற்ற பொருட்களை தேவைப்படுவோர்களுக்கு வழங்கினார்.

    சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த மையத்தை தொடர்ந்து பயன்படுத்தி தேவையற்ற பொருட்களை இங்கே ஒப்படைத்து தேவைப்படுவோர்களுக்கு வழங்குவதன் மூலம் பெரும்பாலான கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் மாசு குறையும். பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கழிவுகளை தரம் பிரித்து வழங்கியும், பயன்படாத பொருட்களை இந்த மையத்தில் கொடுத்தும் தூய்மையான நகரமாக பேரூராட்சியை மாற்ற உதவ வேண்டும் என்று செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
    • மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) குமரேசமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

    இதற்கு பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேதாரண்யம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் அமைக்க ப்பட்டுள்ளது.

    இந்த மையம் இன்று (8-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ஓ.சி, பி.சி, எம்.பி.சி மாணவர்கள் ரூ.50 செலுத்தினால் 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ. 2 பதிவு கட்டணமாக செலுத்தி 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.

    இந்த வாய்ப்பை வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக் கொள்ளு ங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 5 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
    • மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை தாமரைப் பன்னாட்டு பள்ளி, தஞ்சை பிளாசம் பப்ளிக் பள்ளி, வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகம், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி, கும்பகோணம் மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டை பிரில்லியண்ட் பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    5440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

    மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    முன்னதாக தேர்வு மையத்திற்கு காலையில் வந்த மாணவ- மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தவமணி தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பொறுப்பா ளர்கள் சித்தரா, மாலதி, திரிபுரசுந்தரி மற்றும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ 26 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரமும் வழங்கிட வேண்டும்.

    மருத்துவ காப்பீடு தொகை மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப முழுமையாக வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி மைய பராமரிப்புக்காக வழங்கப்படும் ரூ 3 ஆயிரம் தொகையினை பணியாளர்க ளுக்கு நேரடியாக வழங்கிட வேண்டும். சிலிண்டர் மற்றும் உணவு செலவுகளுக்கான தொகையை முன்பணமாக வழங்கிட வேண்டும்.

    சிலிண்டருக்கு வழங்கப்படும் தொகை பில்லில் உள்ளவாறு முழுமையாக வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

    காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

    கோடை வெயிலின் தாக்கம் கருதி அங்கன்வாடிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை காலத்தில் உலர் உணவு பொருட்களாக வழங்க வேண்டும்.

    10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மகப்பேறு விடுப்பு காலத்தை ஒரு வருடமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

    பணியிட மாறுதல் அளித்திட வேண்டும்.

    இவைகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போரட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
    • லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது.

    நாகப்பட்டினம்:

    தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சார்பில் நாகப்பட்டினத்தில் கலங்கரை ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., நீட் தேர்வு, டிஎன்பிசி, காவலர் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 40 பின் மேற்பட்ட மாணவர்களுக்கு உண்டு உறைவிட இலவச பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், முன்னாள் அமைச்சர் ஜெயபால், கலங்கரை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-

    லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது எனவும், சேவை மனப்பா ன்மை உள்ளவர்கள் மட்டுமே அரசு பணிக்கு வர வேண்டும் என்றார். 

    • நீதிமன்றங்களில்‌ நிலுவையில்‌ இருக்கும்‌ வழக்குகள்‌ சமரச மையம்‌ மூலம்‌ தீர்த்துக்‌ கொள்ள முடியும்‌.
    • சமரச முறையிலும்‌ தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.

    இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.

    சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.

    இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    ×