search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் அதிகாரி"

    • காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • பத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    குன்னம்:

    சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்றிரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த லத்தீஷ்(வயது 37) என்பவர் ஓட்டினார்.

    பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருச்சி-பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் கொண்டகாரபள்ளம் என்ற இடத்தில் வந்தது. அப்போது முன்னால் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து திருச்சிக்கு இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரம் சிந்தாமணி குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன்(31) என்பவர் ஓட்டினார்.

    எதிர்பாராத விதமாக ஆம்னிபஸ் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த குமரி மாவட்டம் கல்குளம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரதீஷ்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    பஸ்சில் வந்த மற்ற பயணிகள் விருதுநகர் மாவட்டம் சிவந்திப்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ்(52), நெல்லை மாவட்டம் மதுராநத்தம் நெடுங்கல் பகுதியை சேர்ந்த ஞானராஜ்(38), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை சேர்ந்த இசக்கியம்மாள்955), அவரது உறவினர்கள் லட்சுமி(45), ஜோதி(47), குமரன்(50), லாரி டிரைவர் சரவணன், ஆம்னி பஸ் டிரைவர் லத்தீஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

    பலியான பிரதீஷ், அந்தோணிராஜ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பிரதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    காயம் அடைந்த ஞானசேகர் வள்ளியூரில் வேளாண் அதிகாரியாக உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள‌ நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.
    • ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.

    தீவிர தாக்குதலுக்கு உண்டான செடிகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படும். ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.

    டிரைகோகிரமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 7 முதல் 10 நாட்கள் இடை வெளியில் இரு முறை வெளியிட்டு கட்டுப்படுத்தலாம். இமிடாகுளோப்பிரைட் அல்லது குளோரிபைரிபாஸ் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    மேலும் உழவன் செயலியில் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண் அதிகாரி கூறினார்.
    • அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. எனவே விவசாயி களுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட் டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள விவசாயிகள் அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல்ல லாபகர மான வேளாணமைக்கு நல்ல விதை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியன இன்றியமையாதது. இதில் முக்கியமானது ஆதார நல் விதையாகும்.

    நல்ல விதை அல்லது தரமான விதை எனப்படு வது பாரம்பரிய குணங்க ளையும் அதிக பட்ச முளைப்புத்திறனையும் பெற்றிருக்கும். பிற ரகங்கள் மற்றும் களை செடிகளின் விதை இல்லாமலும் பூச்சி நோய் தாக்கம் இல்லாமலும் மண் மற்றும் செடிகளின் பாகங்கள் இல்லாமல் விதை சான்றுத் துறையால் சான்று செய்யப்படும் விதைகளாக இருக்க வேண்டும்.

    வல்லுநர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது) மற்றும் ஆதார நல் விதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து விவசாயியின் வயலின் உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் பூக்கும் தருணத்தில் 15 நாட்கள் முன்னதாக விதை சான்றளிப்புத் துறை யால் விதைப்பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது.

    விதைப்பண்ணை பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவ லரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்போது வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே விதைப் பண்ணைகளில் இருந்து விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு கழிவுகள் நீக்கப்பட்டு சுத்த மான ஒரே மாதிரியான விதைகள் பிரிக்கப்படு கின்றன.

    இது தவிர சுத்திகரிக்கப் பட்ட விதைக் குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலை யத்திற்கு அனுப்பப் படுகிறது. பகுப்பாய்வில் தேறிய விதைக் குவியலுக்கு சான்றட்டை பொருத்தப் பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எனவே விவசாயிகள் இதை முழுமையாக தெரிந்து கொண்டு சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன் படுத்தி பலன் அடைய லாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

    • கோடை காலத்தில் பயறு வகைகளை விதையுங்கள் என வேளாண் அதிகாரி வலியுறுத்தினார்.
    • இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் சிவராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது கோடை மழையை பயன்படுத்தி நெல் தரிசில் பயறு விதைப்பதால் மழை நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும். பயறுவகை பயிர்களின் வேர் முடிச்சில் காணப்படும் ரைசோபியம் என்ற பாக்டீரியா காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தும். எனவே மண்ணிற்கு தழைச்சத்து கிடைக்கிறது. பயறுச்செடிகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும். காய்ந்த இலை சருகுகள் மண்ணில் அங்ககத் தன்மையை அதிகரிக்கும். களைச் செடிகள் முளைப்பது கட்டுப்படுத்தப்படும்.

    எனவே விவசாயிகள் பயறு வகைகள் விதைக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வேளாண் விரிவாக்க மையத்தில் 65 முதல் 75 நாட்களில் விளையக்கூடிய வம்பன் 8 மற்றும் வம்பன் 10 உளுந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது.
    • 12 ஆயிரத்து, 605 டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக, உளுந்து, பச்சைபயறு ஆகியவற்றை, விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது. பயறு வகைகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான, உளுந்து கிலோ ரூ.66; பச்சைப் பயறு கிலோ, ரூ.77.55க்கு, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    'நடப்பு ராபி பருவத்தில், திருப்பூர், கரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில், 60 ஆயிரத்து, 203 டன் உளுந்து கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், 12 ஆயிரத்து, 605 டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.
    • பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும்.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரம் சோமவாரபட்டியில், விவசாயி பழனிச்சாமி தோட்டத்தில், வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் - கோ.எச்.எம்., 6 - விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் சுருளியப்பன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மக்காச்சோளம், கோ.எச்.எம்., - 6 வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தியில் ஆண் விதை, யு.எம்.ஐ., - 1230 மற்றும் பெண் விதை, யு.எம்.ஐ., 1200 விதைகள், 4:2 என்ற விகிதத்தில் வரிசை நடவு செய்யப்பட்டு, வயலைச்சுற்றி ஆண் விதை விதைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்.

    பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும். பின் ஆண் விதை வரிசையில் வரும் ஆண் பூக்களிலிருந்து வரும் மகரந்தமானது, காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.

    பின் பெண் விதை வரிசையிலிருந்து மட்டுமே, மக்காச்சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, இயந்திரங்கள் இல்லாமல் ஆள் வைத்து விதைகளை தனியாக பிரித்தெடுக்கப்பட்டு காய வைத்து சுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட விதைகளின் தரத்தினை உறுதி செய்திட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. பின், விதைப்பைகளுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு, சான்று விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம், கோ.எச்.எம்., 6 வீரிய ஒட்டு ரகமானது அடி சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டதும் ஏக்கருக்கு 3 டன் மகசூல் தரும் ரகமாகும்.

    மக்காச்சோளம் விதைப்பண்ணை ஆய்வின் போது, படைப்புழு தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வரப்பயிராக எள், சூரியகாந்தி பயிரினை, சாகுபடி செய்யவும் ஊடுபயிராக உளுந்து பயிர் விதைக்கவும் வேண்டும். மேலும் ஆண் பூச்சியினை கவர்ந்து அழிக்க பிரமோன் டிராப் பயன்படுத்தி, படைப்புழுவின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திடவும், விளக்கு பொறி வைத்து அத்துப்பூச்சியினை கவர்ந்து அழித்து கட்டுப்படுத்திடவும் முடியும்.

    படைப்புழுவின் தாக்குதல் தெரிந்தால் அசடிராக்டின் மருந்து, மெட்டரைசியம் அனிசோபிலே பூஞ்சான மருந்தினை கைத்தெளிப்பான் கொண்டு மருந்து அடித்து கட்டுப்படுத்த வேண்டும்.

    பின் தாக்குதலாக 40 நாட்களுக்கு பின் தெரிய வந்தால், ரசாயன மருந்துகளான ஸ்பைனிடோரம் அல்லது குளோரான்டிரினிபுரோல் அல்லது புளுபென்டைமடு மருந்தினை பயிர் முழுவதும் நன்கு நனையும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம். விதை உற்பத்தியின் போது, விதைச்சான்று உதவி இயக்குனர், வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உதவி விதை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.உரிய தொழில் நுட்ப ஆலோசனைகள் பெற்று தரமான விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், உளுந்து வம்பன் - 8 விதைப்பண்ணையையும் ஆய்வு செய்து பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசல் அல்லது டி.என்.ஏ.யு., பல்ஸ் வெண்டர் தெளித்து, தரமான விதை உற்பத்தி செய்து வழங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின் போது விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • விதைகளை சேமிக்கும் போது ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.
    • நெல் பயிருக்கு 80 சதவீதம், மக்காச்சோளத்துக்கு 90 சதவீதம், உளுந்து மற்றும் பச்சை பயிருக்கு 75 சதவீதம், நிலக்கடலைக்கு 70 சதவீதமும் முளைப்பு திறன் இருக்க வேண்டும்.

    பல்லடம்:

    தரத்தை அறிந்து விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு பல்லடம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பயிர்கள் நன்றாக வளர்ந்து பலன் தருவதற்கு தரமான விதைகள் பயன்படுத்துவது மிக அவசியம். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தரத்தை அறிந்து விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.சான்று அட்டை பொருத்தப்படாத விதைகளை வாங்கி பயன்படுத்தும் போது அவை சரியாக முளைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படும். நெல் பயிருக்கு 80 சதவீதம், மக்காச்சோளத்துக்கு 90 சதவீதம், உளுந்து மற்றும் பச்சை பயிருக்கு 75 சதவீதம், நிலக்கடலைக்கு 70 சதவீதமும் முளைப்பு திறன் இருக்க வேண்டும்.

    விதைகளை சேமிக்கும் போது ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். எனவே விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் விதைகளின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கூடுதல் மகசூல் பெற விதைகளின் தரத்தை பரிசோதனை செய்த பின் பயன்படுத்த வேண்டும்.எனவே விதைகள் வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பயிரை சிறப்பாக பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில் உலக தென்னை தினத்தினை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.இதில், வேளாண் உதவி இயக்குனர் வசந்தா,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ந்தேதி உலக தென்னை தினம் கொண்டாடப்படுகிறது. குடிமங்கலம் வட்டாரத்தில் நிகர சாகுபடி பரப்பான, 22 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில், 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தென்னை, வட்டார விவசாயிகளுக்கு வாழ்வாதார பயிராக உள்ளது. நிரந்தர பயிரை சிறப்பாக பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.மேலும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் இருப்பிலுள்ள, தென்னை, பருத்தி, பயறு வகை மற்றும் தானிய வகை உரங்கள் , மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிபயறு, கொண்டைக்கடலை, நிலக்கடலை விதை இருப்பு குறித்தும், வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் குறித்து பேசினார். பொங்கலூர் அறிவியல் மைய பேராசிரியர் கலையரசன், தென்னையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள், வருவாய் அதிகரிக்க தென்னந்தோப்புக்குள் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கினார்.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், தென்னையில் ஊடுபயிராக மகா கனி, மிளகு ஆகியவற்றை சாகுபடி செய்து வருமானத்தை பெருக்கலாம் என்றார்.

    முன்னாள் வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம், தென்னை மரத்திற்கு இட வேண்டிய பேரூட்டம், நுண்ணுாட்ட உரங்களின் அளவு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், தென்னந்தோப்புக்குள் பசுந்தாள் உரமாக பயன்படும் தக்கை பூண்டு பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கக சத்தின் அளவு அதிகமாவதோடு களையும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.கருத்தரங்கினை முன்னிட்டு அலுவலக வளாகத்தில், தென்னை சார் பொருட்களைக்கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    • 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
    • கருந்தலைப்புழு அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது.

    அவிநாசி :

    அவிநாசி வட்டாரத்தில் 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. பழங்கரையில் வேளாண்மை துறை மற்றும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இணைந்து கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.

    அவிநாசி வேளாண்மை அலுவலர் சுஜி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு பேசுகையில், கருந்தலைப்புழு, அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது. மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3,4 ஓலைகளை தவிர மற்ற அனைத்து ஓலைகளும் காய்ந்து விடுகிறது. ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தை சுரண்டி இப்புழுக்கள் உண்கின்றன. அதிகமாக நோய் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்தது போல் காட்சியளிக்கும் என்றார்.

    • பாரம்பரிய நெல் ரகங்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
    • பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2021-22-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவித்தபடி பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் தமிழகத்தில் உள்ள 33 மாநில அரசு விதை பண்ணைகளில் உற்பத்தி செய்திட திட்டமிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் சாகுபடி செய்திட தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, அறுபதாம் குறுவை, கொல்லன் சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, சிவப்பு கவுணி, கீரை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் 5 மெட்ரிக் டன் அளவு மாநிலத்தில் பல்வேறு மாநில அரசு விதை பண்ணைகளில் இருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இந்த விதைகளானது 2022-23 ம் நிதியாண்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் இந்த மாவட்டத்திலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    மொத்த விதையளவில் 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும் 20 சதவீதம் பட்டியல் இன, பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

    பாரம்பரிய நெல் ரகங்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலுக்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே செங்கல்பட்டு மாவட்ட பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயனடையுங்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 15 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கி அமைக்கப்படும் தொகுப்புக்கு, வேளாண்மை துறை விவசாயிகள் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்படுகிறது.
    • பாப்பாங்குளம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

    அவினாசி :

    அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு கூறியதாவது:-

    அவிநாசி வேளாண்மை துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு புதுப்பாளையம், செம்பியநல்லூர், சேவூர், பாப்பாங்குளம், ஆலத்தூர், பழங்கரை, நம்பியாம்பாளையம் என 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், 15 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கி அமைக்கப்படும் தொகுப்புக்கு, வேளாண்மை துறை விவசாயிகள் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்படுகிறது.அதன்படி பாப்பாங்குளம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுப்பாளையம் கிராமத்திலும் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×