என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தரத்தை அறிந்து விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் - வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
- விதைகளை சேமிக்கும் போது ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.
- நெல் பயிருக்கு 80 சதவீதம், மக்காச்சோளத்துக்கு 90 சதவீதம், உளுந்து மற்றும் பச்சை பயிருக்கு 75 சதவீதம், நிலக்கடலைக்கு 70 சதவீதமும் முளைப்பு திறன் இருக்க வேண்டும்.
பல்லடம்:
தரத்தை அறிந்து விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு பல்லடம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பயிர்கள் நன்றாக வளர்ந்து பலன் தருவதற்கு தரமான விதைகள் பயன்படுத்துவது மிக அவசியம். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தரத்தை அறிந்து விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.சான்று அட்டை பொருத்தப்படாத விதைகளை வாங்கி பயன்படுத்தும் போது அவை சரியாக முளைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படும். நெல் பயிருக்கு 80 சதவீதம், மக்காச்சோளத்துக்கு 90 சதவீதம், உளுந்து மற்றும் பச்சை பயிருக்கு 75 சதவீதம், நிலக்கடலைக்கு 70 சதவீதமும் முளைப்பு திறன் இருக்க வேண்டும்.
விதைகளை சேமிக்கும் போது ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். எனவே விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் விதைகளின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கூடுதல் மகசூல் பெற விதைகளின் தரத்தை பரிசோதனை செய்த பின் பயன்படுத்த வேண்டும்.எனவே விதைகள் வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்