search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anatomy"

    • 4 வகையான பாடிஷேப்ஸ் உள்ளன.
    • இந்திய பெண்கள் அதிகம்பேர் பியர் பாடிஷேப்பில் தான் இருப்பார்கள்.

    முதலில் நம்முடைய உடற்கூறு எப்படி உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு ஆடைகளை வாங்குவதை பழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். அதில் என்னென்ன உடல்கூறு நிலைகள் உள்ளன என்பதை பற்றி பார்க்கலாம். இதில் 4 வகையான பாடிஷேப்ஸ் உள்ளன.

    அதில் நமது இந்திய பெண்கள் இந்த 4 பாடிஷேப்களில் தான் இருப்பார்கள். அவை ஆப்பிள் பாடிஷேப், பியர் பாடிஷேப், ஆர்கிளாஸ் பாடிஷேப், ரெக்ட்டாங்கிள் பாடிஷேப் ஆகியவை உள்ளன.

    ஆப்பிள் பாடிஷேப்

    ஆப்பிள் பாடிஷேப்பில் இருப்பவர்களுக்கு அப்பர் பாடி கொஞ்சம் அதிகமாக இருக்கும். கால்கள் ஒல்லியாக இருக்கும். இவர்களுக்கு தோள்பட்டைகள் பெரியதாகவும் விரிந்தும் காணப்படும். எனவே இந்த மாதிரி இருப்பவர்கள் வி ஷேப் கழுத்துப்பட்டைகள் வடிவம் கொண்ட ஆடை வகைகளை தேர்வு செய்ய வேண்டும். இவர்கள் ஷாட் டாப்ஸ், மிட்லென்த் டாப் எல்லாம் ஒரு சூப்பரான சாய்ஸ். இவர்களுக்கு லோவர் பாடியை கவர் செய்கிற மாதிரி டிரஸ்செய்தால் நன்றாக இருக்கும்.

    பியர் பாடிஷேப்

    அடுத்து பியர் பாடிஷேப். நம் இந்திய பெண்கள் அதிகள அளவில் இந்த பாடிஷேப்பில் தான் இருப்பார்கள். அப்படி பாடி சின்னதாகவும், அதாவது இடுப்பு பகுதிக்கு கீழ் உள்ள பகுதி பெரியதாக காணப்படும். இவர்கள் பாடிஷேப்பிற்கு ஏ-லைன் டிரஸ்சஸ் இன்னும் சூப்பராக இருக்கும். ஏ-லைன் டிரஸ்சில் அப்பர் பாடி பிட்டாகவும், லோயர் பாடி பிளேர் விதத்திலும் இருக்கும். பியர் பாடிஷேப்பில் இருப்பவர்களுக்கு லேயர்டு டிரஸ்சஸ்சும் அழகாக இருக்கும். ஓவர்கோட் இருக்குற மாதிரியான டிரஸ் கூட அழகாக இருக்கும். இவர்கள் அப்பர் பாடியை கவர் செய்கிற மாதிரியான அடர்த்தியான ஜுவல்லரிகளை பயன்படுத்தலாம். அது இன்னும் உங்கள் அப்படி பாடியை மெருகேற்றும் வகையில் இருக்கும்.

    ரெக்ட்டாங்கில் பாடி ஷேப்

    ரெக்ட்டாங்கில் பாடி ஷேப் இருக்கிறவர்கள் பெரும்பாலும் விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும். இவர்களது உடலில் வளைவுகள் இருக்காது. தோள்பட்டையும், இடுப்பு பகுதியும் ஒரே அளவில் இருக்கிற மாதிரியாக இருக்கும். பஃப் ஸ்லீவ்ஸ், இவர்களுக்கு டஃப்ள்டு டாப் மற்றும் ஸ்கெட் (பாவாடை) வகை ஆடைகள் பொருத்தமாக இருக்கும். இவர்களுக்கு அனார்கலி, மேக்ஸி டிரஸ்கள் கூட மிகவும் பொருத்தமாக இருக்கும். எம்ப்பயர் லைன் இருக்கும் ஆடை வகைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

    ஆர்கிளாஸ் பாடிஷேப்

    அடுத்து ஐடியல் பாடிஷேப் அதாவது ஆர்கிளாஸ் பாடி ஷேப். இவர்களுக்கு இயற்கையாகவே இடை மெலிந்ததாக இருக்கும். எனவே எல்லாவகை ஆடைகளும் பொருத்தமாக இருக்கும். இவர்களுடைய இடை அழகை மெருகேற்றும் அளவுக்கு பெல்ட் வைத்தமாதிரி ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். பெல்ட் வைத்த ஆடைகளை தேர்வு செய்து அணிந்தால் இன்னும் அழகாக தெரிவார்கள்.

    • ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம்.
    • கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியா ளர்களும் கூறுகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். ஆமை முட்டை களை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்து அந்த முட்டைகள் எல்லாம் ஆமைக்குஞ்சுகளாக மாறியவுடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியா ளர்களும் கூறுகின்றனர். 

    இதன் காரணமாக தான் இந்த ஆமை இனங்களை அழியாமல் பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது ஆமைகளின் இனப்பெருக்க காலம் என்பதால் முட்டையிட நேற்று இரவு சுமார் 50 கிலோ எடையுள்ள ஒரு கடல் ஆமை தீர்த்தவாரி கடற்கரை பகுதிக்கு வந்தது. இதனையடுத்து இந்த ஆமை குழி தோண்டி முட்டை இட சென்றது.

    அப்போது எதிர்பாராத விதமாக மர்மமான முறையில் அந்த ஆமை இறந்து கிடந்தது. கடல் ஆமை அருகில் முட்டையும் சிதறி கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆமையை மீட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆமை யாரேனும் அடித்து கொன்ற னரா? அல்லது படகு மோதி இறந்ததா? அல்லது நாய்கள் அதை கடித்து விட்டதா என்பது ஆமையை உடற்கூறு ஆய்வு செய்யும் போது தான் தெரியவரும் என்று சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் கூறுகி ன்றனர்.

    • பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.
    • நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சுரேஷ் பாபு (வயது 43) விவசாய கூலித்தொழிலாளி.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பயத்தங்குடியில் இருந்து சோழங்கநல்லூர் சென்றுள்ளார்.

    அப்போது சுரேஷ் பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.

    அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சுரேஷ்பாபுவை மீட்டு திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு சுரேஷ்பாபுவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சுரேஷ் பாபுவின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் சுரேஷ்பாபுவின் மனைவி மீனா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×