என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Consulting"
வி.எஸ்.எஸ்.சேது ராமலிங்கம், தமிழ்வாணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் எரிக் ஜீடு, வி.வி. ராமச்சந்திரன், ஆரோக்கிய எட்வின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் முத்துராமன், ஜான் ரபீந்தர், முருகன், ஜோசப், சந்திரன், முரளி, நாகமணி, மார்த்தாண்டம்,
மு.க.மாணிக்கம், ஜெயக்குமார், ஆனந்த், சுரேஷ், அசோக்குமார், வி.மூர்த்தி, குமார், தனபால், ஜி.பி.ராஜா, சுப்பையா, விஜயன், செந்தில்குமார், முன்னாள் பேரூர் செயலாளர் ஜெயராஜ், ரமேஷ், பணி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் கழக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ராதாபுரம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தர பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய, பேரூர், ஊராட்சி கழக வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக தோழர்கள் என 1500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் செய்திருந்தார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளன.
இவற்றுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
தேர்தலை கவனிப்பதற்காக 20 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்திருந்தனர்.
இவர்களுடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் வந்தனர்.
20 தொகுதிக்கான பொறுப்பாளர்கள் மாவட்டக் கழக செயலாளர்கள் என 120 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பேசினார்கள்.
தேர்தல் களத்தில் டி.டி.வி. தினகரன் பெரும் சவாலாக இருப்பார் என்பதால் அவரை எதிர்கொள்வது பற்றியும், அவரது பிரச்சாரத்துக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது பற்றியும் விரிவாக ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
அ.தி.மு.க. 20 தொகுதியிலும் ஜெயித்தால் 5 ஆண்டு காலம் எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சியை கொண்டு செல்லலாம். எனவே அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
இதற்காக 20 தொகுதியிலும் நன்கு பரீட்சயமான உள்ளூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவிக்க இருக்கிறோம் என்று பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை கூறினார்கள். #edappadipalanisamy #opanneerselvam
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசாப்பிள்ளை தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார்.
அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வநம்பி, மாநில அமைப்பு செயலாளர் இளமாறன் சிறப்புரையாற்றி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர் நியமனம் செய்வது, டிசம்பர் 10&ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர். #VCK
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று அசோக் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
இவர்களுடன் தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக உள்ள கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோரும் வந்தனர். இவர்கள் அனைவருடனும் தினகரன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் அரசின் திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும் அரசின் சலுகைகள் மக்களுக்கு சென்றடையவில்லை என்ற ஆதங்கத்தையும் தினகரனிடம் தெரிவித்தனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இந்த மாத இறுதியில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாதகமான தீர்ப்பு வந்தால் என்ன நிலைப்பாட்டை எடுப்பது, எதிரான தீர்ப்பு வந்தால் 18 பேரும் தேர்தலை சந்திப்பதா? அல்லது அப்பீல் செய்வதா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் - புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவதற்கு என்னென்ன வியூகம் வகுக்க வேண்டும் என்பது குறித்தும் தினகரன் நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டறிந்தார்.
தேர்தலுக்கு இப்போதே ஆயத்தப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தினகரன் கேட்டுக் கொண்டார்.
ஆலோசனைக்கு பிறகு டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டணி தொடர்பாக யாருடனும் மறைமுகமாக பேசவில்லை. மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.
பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும். அதில் அ.தி.மு.க.வினர் டெபாசிட் இழப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிற தாஜ்மகால், சுற்றுச்சூழல் மாசு காரணமாக தனது பொலிவை இழந்து வருகிறது.
சமீபத்தில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக கருத்து தெரிவித்தது. தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள் என்று மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் நேற்று விசாரித்தனர்.
அப்போது ஏற்கனவே உத்தரவிட்டபடி, தாஜ்மகால் பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாததை நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
தாஜ்மகால் பாதுகாப்புக்கு பொறுப்பான தொல்லியல் ஆய்வு அமைப்பு, இந்த விஷயத்தில் ஆலோசிக்கப்படாதது கண்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
அப்போது அட்டார்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வக்கீல்) கே.கே. வேணுகோபாலிடம் நீதிபதிகள், “யுனஸ்கோவின் உலக பாரம்பரிய மையம் பாரீசில் இருக்கிறது. தாஜ்மகால் பாதுகாப்பு நிர்வாக திட்டத்தை அங்கு தாக்கல் செய்கிறீர்களா? இதை நீங்கள் தாக்கல் செய்யவில்லை. தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்?”என காட்டமாக கேட்டனர்.
மேலும் தாஜ்மகால் பராமரிப்பு, பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்பது குறித்து அட்டார்னி ஜெனரல் 30-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TajMahal #SupremeCourt #Tamilnews
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் நரசிம்ம பிரசாத், சின்னமலையில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.14 ஆயிரத்து 600 கோடி கடந்த 2009-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. அதன்படி, கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பணிகள் முடிவடைந்து 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி முதலாவதாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
இதன்பின்னர், சின்னமலை-விமானநிலையம், ஆலந்தூர்-பரங்கிமலை, திருமங்கலம்-நேரு பூங்கா இடையே படிப்படியாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 25-ந் தேதி நேரு பூங்கா-சென்டிரல், சின்னமலை-தேனாம்பேட்டை ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையே போக்குவரத்து தொடங்கியது.
மெட்ரோ ரெயில் போக்குவரத்தை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதில், மொத்தம் 6 லட்சத்து 11 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். தற்போது தினமும் சுமார் 1 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
இதன்மூலம் தினமும் ரூ.10 லட்சமும், பார்க்கிங் கட்டணம் மூலம் ரூ.1 லட்சமும் வருமானமாக கிடைக்கிறது. மெட்ரோ ரெயிலின் முதற்கட்ட விரிவாக்க பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் தினமும் 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். முதற்கட்ட விரிவாக்க பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். ஏ.ஜி., டி.எம்.எஸ்.-வண்ணாரபேட்டை இடையே வருகிற டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கும்.
மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், ஆயிரம்விளக்கு-கோயம்பேடு இடையேயான 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்குவது குறித்து இன்னும் 2 மாதத்துக்குள் முடிவு செய்யப்படும்.
மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைப்பது என்பது நீண்டகால நடைமுறை ஆகும். கட்டணத்தை குறைப்பது குறித்து உரிய அதிகாரம் கொண்ட அமைப்பு தான் முடிவு செய்யும். மெட்ரோ ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருப்பதால் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் கட்டணத்தை குறைக்க ஆலோசனை செய்யப்படும்.
சுரங்கப்பாதையில் தீ அல்லது புகை ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலிக்கும். அவ்வாறு தீ ஏற்படும்பட்சத்தில் தானாகவே அணைப்பதற்கும், புகை ஏற்படும்பட்சத்தில் வெளியேற்றவும் நவீன வசதி சுரங்கப்பாதையில் செய்யப்பட்டுள்ளது. மழைகாலங்களில் சுரங்கப்பாதைக்குள் தண்ணீர் செல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கினால் ரெயில் இயங்காமல் தானாகவே நின்றுவிடும். அவ்வாறு சுரங்கப்பாதையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கினால் தானாகவே தண்ணீரை வெளியேற்றும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் செல்லும்போது சில இடங்களில் செல்போன் சேவை முற்றிலுமாக தடைபடுகிறது. இதை சரி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற நேரங்களில் ரெயிலில் ஏதேனும் பாதிப்பு என்றால் உடனடியாக ரெயில் டிரைவரை அழைக்க அனைத்து பெட்டிகளிலும் பொத்தான் வைக்கப்பட்டுள்ளது. அதை அமுக்கினால் தேவையான உதவியை உடனடியாக டிரைவர் செய்து கொடுப்பார். இரவு 10 மணி வரை மட்டுமே மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நேரத்தை நீட்டிப்பது குறித்தும், குறிப்பிட்ட இடைவெளியில் ரெயில் சேவையை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்.
அனைத்து ரெயில் நிலையங்களிலும், ரெயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பெண்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பயணம் செய்யலாம். ரெயில் நிலையம், ரெயில் பெட்டிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர அனைத்து ரெயில் பெட்டிகளிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின்பு, மெட்ரோ ரெயில் பெட்டியிலும், ரெயில் நிலையங்களிலும் உள்ள அனைத்து வசதிகளையும் இயக்குனர் நரசிம்மபிரசாத் நிருபர்களுக்கு விளக்கி கூறினார். அப்போது, தலைமை பொது மேலாளர்கள் விஜய்குமார்சிங், அரவிந்த்ராய் ஆகியோர் உடன் இருந்தனர். #ChennaiMetroTrain
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் பொதுமக்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து மேலும் 2 ஆயிரம் போலீசார் மதுரை உள்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் இன்றும் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதில் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. #SterliteProtest
கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.
எனவே, புதன்கிழமை குமாரசாமி மட்டுமே பதவியேற்பார். அன்றே நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் என்று தெரிகிறது. மற்ற அமைச்சர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தபிறகு பதவியேற்கலாம். #KarnatakaElections #KarnatakaFloorTest #Kumaraswamy
கூட்டத்தில், மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் கா. பாலச்சந்திரன், முதன்மைச் செயலாளர், மற்றும் வணிகவரி ஆணையர் சோமநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
4.5.2018 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 27-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின்போது சர்க்கரை மீதான 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கான மத்திய அரசின் கருத்துரு விவாதிக்கப்பட்டது. இந்த மேல்வரி விதிக்கும் முறையானது ஜி.எஸ்.டி. சட்டத்தின் கொள்கைக்கு மாறாக உள்ளதால் தமிழ் நாட்டிற்கு ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர். டி.ஜெயக்குமார் அன்றையக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களும் சர்க்கரை மீது மேல்வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யும் பொருட்டு ஜி.எஸ்.டி. மன்றமானது அமைச்சர்கள் குழு ஒன்றினை 4.5.2018 அன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு, அசாம், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் உள்ளடங்குவர். இந்தக் குழுவானது, சர்க்கரை மீதான மேல்வரி விதிப்பது மற்றும் அது தொடர்பான இனங்கள் குறித்து விவாதித்து அறிக்கை ஒன்றினை ஜி.எஸ்.டி. மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
புதுடெல்லியில் 14.5.2018 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீது 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கு அரசியல் சாசன கூறுகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று வழங்க வேண்டுமென அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு முன்பு இருந்த சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த காரணத்திற்காக, எந்தெந்த மாநிலத்திற்காக, எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. குறித்தான விவரத்தினையும் மத்திய அரசின் நுகர்வோர் நடவடிக்கைகள், உணவு மற்றும் பொது விநியோக துறையிடமிருந்து ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று இக்குழுவிற்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த விவரங்களின் அடிப்படையில், சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் குழுவின் அடுத்தக் கூட்டத்தினை வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி நாள் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்