search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆண்டிமடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆண்டிமடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனை

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசாப்பிள்ளை தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார்.

    அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வநம்பி, மாநில அமைப்பு செயலாளர் இளமாறன் சிறப்புரையாற்றி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர் நியமனம் செய்வது, டிசம்பர் 10&ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர். #VCK
    Next Story
    ×