என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "consulting meeting"
- பாராளுமன்ற தேர்தலுக்கு இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும்.
- பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரங்கள் நடத்த வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மாநகர தெற்கு மண்டல் சார்பாக முத்தையாபுரம் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை
மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்கள் உமரி சத்தியசீலன், ராஜா, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மகளிர் அணி தலைவி செல்வி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கு 7 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் வாரியாக பொதுமக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரங்கள் நடத்த வேண்டும் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் குலசேகர ரமேஷ்,பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, விவசாய அணி மண்டல் தலைவர் முத்துராஜ், ஓ.பி.சி. அணி மண்டல் தலைவர் துர்க்கையப்பன், தெற்கு மண்டல் துணை தலைவர் ஜெயசித்ரா ராமலட்சுமி பொய் சொல்லான், மண்டல் செயலாளர்கள் செல்வம், அருண் பாபு, சிவதானு, முத்துகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம் , விந்தியா முருகன், வெளிநாடு தமிழர் நலன் பிரிவு மாவட்ட செயலாளர் பிரேம் குமார், உள்ளாட்சி அமைப்பு பிரிவு மாவட்ட செயலாளர் முத்து பெரியநாயகம், சமூக வலைதள பிரிவு மண்டல் தலைவர் அஜய், தரவுதளவு மேலாண்மை பிரிவு மண்டல் தலைவர் ராஜ்குமார், அமைப்புசாரா பிரிவு மண்டல் தலைவர் அருள் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
- மகளிர் உரிமை மாநாட்டிற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு செல்ல வேண்டும்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலா நேரு, மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் ஜெயமாலதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் மகளிரணியின் பங்கு குறித்து பேசினார். தொடர்ந்து மகளிர் அணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் பேசுகையில், வருகிற 14-ந்தேதி சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு செல்ல வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் ஒற்றுமையுடன் வலுவாக இருந்து 40 தொகுதிகளையும் வென்றெடுக்க பாடுபட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர்கள் அன்னபூரணி, தமயந்தி, பார்வதி மோகன், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவரும் மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளருமான அனுராதா ரவி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசினார்.
- அ.ம.மு.க. வை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மகளிர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
வள்ளியூர்:
வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜ.எஸ்.இன்பதுரை முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே..சீனிவாசன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், முன்னாள் எம்.பி.யும், மாவட்ட பொருளாளருமான சவுந்தர்ராஜன், ராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளருமான மைக்கேல் ராயப்பன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட விவசாய அணி இணைச்செயலாளர் லாசர், ராதாபுரம் மேற்கு ஓன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஓன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளரும் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவருமான அம்மா செல்வகுமார், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அருண் புனிதன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சி ராணி, திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார், வள்ளியூர் பேரூர் செயலாளர் பொன்னரசு, முடவை ஜமீன் பாரதி ராஜா, செட்டிகுளம் ராமச்சந்திரன், நிர்வாகிகள் எட்வர்ட் சிங், சந்திரமோகன், பணகுடி பேரூர் துணை செயலாளர் ஜோபி ஜெகன், பணகுடி ேபரூர் இளைஞரணி ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பி னர்கள் அர்ப்பணிப்புடன் முழு பங்காற்ற வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, அ.ம.மு.க. வை சேர்ந்த பிரேமா தலைமை யில் 20-க்கும் மேற்பட்ட மகளிர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை புறநகர் பகுதிக்கு உட்பட்ட நகர, கிளை செயலாளர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், பூத் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன.
இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
பின்னர் கடந்த ஜூலை மாதம் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதற்காக உள்ளூரில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றியும் ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளராக இளவரசன் நியமிக்கப்பட்ட பிறகு மன்றத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது. இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் புகார்களை நேரடியாக தலைமைக்கு அனுப்ப இயலாது. மாவட்ட செயலாளர்களுக்குதான் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்டோபர் 5-ந்தேதி மற்றும் 11-ந்தேதிகளில் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு 9 மாதங்கள் ஆன நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன.
ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக பொதுமக்களிடம் சர்வே நடத்தப்பட்டதில் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே ரஜினி தனது அரசியல் பயண திட்டத்தை அடுத்த மாதமே தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்