search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்தபடம். 

    வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.ம.மு.க. வை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மகளிர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜ.எஸ்.இன்பதுரை முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே..சீனிவாசன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், முன்னாள் எம்.பி.யும், மாவட்ட பொருளாளருமான சவுந்தர்ராஜன், ராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளருமான மைக்கேல் ராயப்பன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட விவசாய அணி இணைச்செயலாளர் லாசர், ராதாபுரம் மேற்கு ஓன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஓன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளரும் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவருமான அம்மா செல்வகுமார், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அருண் புனிதன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சி ராணி, திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார், வள்ளியூர் பேரூர் செயலாளர் பொன்னரசு, முடவை ஜமீன் பாரதி ராஜா, செட்டிகுளம் ராமச்சந்திரன், நிர்வாகிகள் எட்வர்ட் சிங், சந்திரமோகன், பணகுடி பேரூர் துணை செயலாளர் ஜோபி ஜெகன், பணகுடி ேபரூர் இளைஞரணி ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பி னர்கள் அர்ப்பணிப்புடன் முழு பங்காற்ற வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, அ.ம.மு.க. வை சேர்ந்த பிரேமா தலைமை யில் 20-க்கும் மேற்பட்ட மகளிர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை புறநகர் பகுதிக்கு உட்பட்ட நகர, கிளை செயலாளர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், பூத் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×