search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector office"

    • 12 ஆண்டுகளாக நெல்லை- செங்கோட்டை ரெயிலில் டீ விற்று வருவதாக குருநாதன் மனுவில் கூறியுள்ளார்.
    • அம்பை ரெயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தி வரும் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவர் இன்று தனது மனைவி, மகள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 12 ஆண்டுகளாக நெல்லை- செங்கோட்டை செல்லும் ரெயிலில் கேன் மூலம் குறைந்த விலையில் டீ விற்று வருகிறேன். இதனை நம்பியே எனது குடுத்பத்தின் வாழ்வாதாரம் உள்ளது. இந்நிலையில் அம்பை ரெயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தி வரும் ஒருவர் என்னை குறைந்த விலையில் டீ விற்க கூடாது எனவும், இதனால் அவருக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனது வாழ்வாதரம் கருதி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலானது நின்ற சீர் நெடுமாறன் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
    • 2 மாட வீதிகளான தெற்கு மாட வீதியும், மேல மாட வீதியும் தான் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    நலத்திட்ட உதவிகள்

    இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

    சங்கர் நகர் அருகே நாரணம்மாள்புரம் வ.உ.சி. நகரை சேர்ந்த திருமா அழகு என்பவர் தலைமையில் வந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தாழையூத்து பகுதியை சேர்ந்த ஒரு நபர் சாதி ரீதியான மோதல்களுக்கு வழி வகுப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    சுடுகாட்டுக்கு தனிப்பட்டா

    அம்பை தாலுகா செட்டி மேடு மற்றும் மேல ஏர்மாள் புரத்தைச் சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிமேடு மற்றும் மேல ஏர்மாள்புரத்தில் நாடார் சமுதாய மக்கள் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் இங்கு உள்ள சுடுகாட்டை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றோம்.

    தற்போது இந்த இடம் புறம்போக்கு என்று கூறி தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். தற்போது அந்த இடத்தில் நன்மை கூடம் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் அம்பை தாசில்தார் சுமதி சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார்.

    இது தொடர்பாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் தனி நபர்களுக்கு அந்த இடத்தை பட்டா போட முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் கலெக்டர் கவனத்தில் எடுத்து சுடுகாட் டிற்கு உரிய அந்த இடத்தை அரசு பதிவேட்டில் ஏற்றி தனி பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    பா.ஜனதா மனு

    பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலானது நின்ற சீர் நெடுமாறன் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பழமையான இந்த கோவிலுக்கு 3 மாட வீதிகளும், 4 ரத வீதிகளும் இருக்க வேண்டும்.

    சிவாலயம் மற்றும் விஷ்ணு ஆலயம் எல்லாம் ஆகம விதிகளின்படி 3 மாட வீதிகளும், 4 ரத வீதிகளும் அமையும் படி நிர்மானிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் நெல்லையப்பர் கோவிலில் 2 மாட வீதிகளான தெற்கு மாட வீதியும், மேல மாட வீதியும் தான் உள்ளது. வடக்கு மாடவீதியை காணவில்லை. எனவே வடக்கு மாட வீதியை கண்டுபிடித்து வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

    • அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
    • அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் சேத்திலால் நகரைச்சேர்ந்தவர் கமல்நாதன்(வயது20). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று, வழக்கம் போல் நண்பர் சுடரொளியுடன்(20) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.ன்.ஜி.சி குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலிலிருந்து வந்த சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் பக்க வாட்டில் மோதியது. இதில், லாரியின் பின் சக்ரத்தில் கமல்நாதன் சரிந்துவிழுந்து, தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல், நண்பர் சுடரொளி இடுப்பு, கால்களில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் உயிருக்கு போராடிய மாணவர் சுlரொளியை ஏற்றி காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயற்சித்தபோது, அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வராததற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இறந்த மாணவர் உடலை சக மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்சில் இறந்த மாணவன் உடலை ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதை கண்டித்து சக மாணவர்கள், உறவினர்கள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஜான்சன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • தி.மு.க. அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது.

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறி வரும் அ.தி.மு.க. கொலை-கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டிவந்தது.

    இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தும் புகார் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை (29-ந்தேதி) திங்கட் கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டி ருந்தார்.

    அதன்படி நாளை கலெக்டர் அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    கலெக்டர் அலுவலகங்கள் இல்லாத இடங்களில் தாசில்தார் அலுவலகங்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

    • விவசாயிகளின் உரிமை, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அதிகாரம் பறிபோகும் நிலை உள்ளது.
    • கரீம்நகரில் கடந்த 14-ந் தேதி சிறுவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து மனு கொடுத்தனர்.

    விவசாயிகள் சங்கம்

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் ஆபிரகாம் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் விளைநிலங்கள், ஏரி, குளம், நீர்நிலைகளின் நீர்வழிப்பாதை ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் தங்களின் விரும்பத்திற்கு ஏற்ப அபகரிக்க வழி உள்ளது.

    இதனால் விவசாயிகளின் உரிமை, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அதிகாரம் பறிபோகும் நிலை உள்ளது. எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நிதி உதவி

    மனிதநேய மக்கள் கட்சி மேலப்பாளையம் பகுதி தலைவர் முகம்மது யூசுப் சுல்தான் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், மேலப்பாளையம் கரீம்நகரில் கடந்த 14-ந் தேதி சிறுவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான். அவனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. எனவே முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் முத்துமணி தலைமையில் செயலாளர் சுரேஷ், பொருளாளர் லூர்துசாமி மற்றும் பல்வேறு பள்ளிகளின் உரிமையாளர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கட்டாய கல்வி சட்டம்

    கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கு இடமளிக்கப்படுகிறது. இவர்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் 2021-22 கல்வி ஆண்டு ஒதுக்கிய தொகையை மாநில அரசு இன்னும் விடுவிக்காமல் உள்ளது. இதனால் ரூ. 36 கோடி நிலுவையில் இருக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் 118 நர்சரி பள்ளிகள், 20 மெட்ரிக் பள்ளிகளில் இந்த திட்டத்தின் கீழ் 3,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    எனவே மாநில அரசு இந்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் நிறுவனம் பொதுவெளியில் கழிவுகளை கொட்டி வருகிறார்கள்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    நாம் தமிழர் கட்சி நெல்லை தொகுதி துணைத்தலைவர் மாரி முத்து தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    வேலையில் முன்னுரிமை

    கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் பொதுவெளியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவு களை கொட்டி வருகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

    கங்கைகொண்டான் ஊராட்சி பகுதியில் நடை பெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்ட தொழிலா ளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகளில் கங்கைகொண்டான் உட்பட்ட பகுதிகளை சேர்ந்த படித்த, படிக்காத ஆண், பெண்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    கைது

    தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

    கிராமமக்கள் நலன் காக்கும் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் முருகேசன் தலைமையில் கொடுத்த மனுவில், ராதாபுரம், வள்ளியூர் யூனியன் பகுதியில் சரிவர மழை பெய்யவில்லை.

    நாங்கள் ஆழ்துளை கிணறுகளை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் மின் இணைப்புகளை அடிக்கடி துண்டித்து விடுகிறார்கள். இதனால் குறித்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடிய வில்லை. எனவே மின்தடையை நீக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உள்ளூர் இட மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம், மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடிகளுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உள்ளூர் இட மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் காய்கறி, உணவு பொருள்களின் செலவீனங்களை ஏற்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மாடசாமி கோவணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
    • அன்பு சுவரில் இருந்து வேட்டி எடுத்து கொடுத்த போலீசார் அவரை கலெக்டர் அலுவலத்தில் மனு கொடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.

    கோவணத்துடன் வந்த முதியவர்

    நாங்குநேரி அருகே உள்ள கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மாடசாமி (வயது75) என்பவர் கோவணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அங்கிருந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். மனைவி இறந்துவிட்டார். எனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்ட வேண்டும் என கூறி 5 சென்ட் இடத்தை 2-வது மகன் கேட்டார். அதன்படி அவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தேன்.

    ஆனால் அனைத்து இடத்தினையும் அவர் என்னிடம் இருந்து முறைகேடாக எழுதி வாங்கியது பின்னர் தெரியவந்தது. மேலும் என்னை கவனிக்காமல் வீட்டில் இருந்தும் துரத்திவிட்டார். எனவே அவரிடம் இருந்து எனது நிலத்தை மீட்டுதர வேண்டும் என கூறினார்.

    பின்னர் அன்பு சுவரில் இருந்து வேட்டி எடுத்து கொடுத்த போலீசார் அவரை கலெக்டர் அலுவலத்தில் மனு கொடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    கொலை மிரட்டல்

    வி.கே.புரம் அருணாச்சல புரத்தை சேர்ந்த ஜெயசீலன் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு உள்ளது. அந்த பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிர மித்து வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    தெற்கு பாப்பான் குளத்தை சேர்ந்த கருப்பசாமி மனைவி மாரியம்மாள் (35) என்பவர் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமையில் வந்து கொடுத்த மனுவில், நான் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 18-ந்தேதி பணியில் இருந்த போது ஒரு பெண் சாதி பெயரை கூறி என்னை அவதூறாக பேசினார். பின்னர் 20-ந்தேதி மீண்டும் கணவருடன் வந்து என்ைன அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளேன். அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். அவர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    • கீழ முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.
    • கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி இது போன்ற தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 14-ந் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அரிவாள் வெட்டு

    அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் காயம் அடைந்த குணசேகரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கீழ முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர். மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் வந்த கிராம மக்கள் திடீரென கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்ப தாவது:-

    நிரந்தர தீர்வு வேண்டும்

    சமீப காலமாக எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு அரசு துறை சார்ந்த சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி இது போன்ற தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் 2 நாட்களுக்கு மேலாகியும் போலீசார் கைது செய்யவில்லை. அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மருதம்நகரில் உள்ள டாஸ்மாக் கடையால் தான் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அந்த கடையையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    தொடர்ந்து, அவர்களிடம் பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார்.

    வீட்டு மனை

    அம்பை தாலுகா அடைச்சாணி அருந்ததியர் தெருவை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில், ரெங்கசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு எங்களுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்ட செல்லும் போது அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். மேலும் பட்டா ரத்தாகி விட்டதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி எங்களது வீட்டுமனையை மீண்டும் பெற்று தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    • தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் ராமச் சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • தூத்துக்குடி துறைமுக சாலை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலையாக ரூ. 200 கோடி மதிப்பில் மாற்றும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் ராமச் சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வ.உ.சி. துறைமுகத்தில் கடந்த நிதி ஆண்டில் 38.04 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, முந்தைய ஆண்டை விட 11.5 சதவீதம் கூடுதலாக செயலாற்றி உள்ளது. கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்த இலக்கினை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ. 816.17 கோடி வளர்ச்சி பெற்று நிகர உபரி வருவாய் ரூ.256.14 கோடி பெற்றுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறன் பன் மடங்கு அதிகரித்து ள்ளது.

    2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 36.81 லட்சம் சரக்குகளை கையாண்டு உள்நாட்டு சரக்குகளை விட அதிகமாக கையாண்டு சாதனை படைத்துள்ளது. ரூ. 16 கோடியில் நிலக்கரி சேமிப்பு கிடங்குகள் மேம்படுத்துதல், ரூ. 42 கோடியில் சரக்கு பெட்ட கங்களை கண்கா ணிக்க வசதி ஏற்படுத்துதல்.

    ரூ. 18.8 கோடியில் தீயணைப்பான் வசதியை நவீனமாக்குதல். ரூ. 70 லட்சம் செலவில் 140 கிலோவாட் மேற்கூரை சூரியமின் ஆலை அமைத்தல். ரூ. 2.22 கோடி செலவில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய 6 இ-கார்கள் 100 சதவீத எல்.இ.டி. ஒளி விளக்குகள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் ரூ. 434.17 கோடி செலவில் 9-வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறைமுக நுழை வாயில் அகலப்படுத்தும் பணி, உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்பு கிடங்கு தொடங்குவதற்காக சுமார் 54 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கி உள்ளது. மேலும் கூடுதலாக சிமெண்ட் கையாளும் முனையம் அமைப்பதற்கு 12.79 ஏக்கர் ஒதுக்கி உள்ளது. ரூ. 7ஆயிரத்து 55 கோடி மதிப்பில் வெளி துறைமுக வளர்ச்சி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    பசுமை துறைமுகம்

    துறைமுகத்தை ஹைட்ரஜன் முனையமாக மாற்றுவத ற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்து ள்ளது. இந்த திட்டம் விரை வில் செயல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகம் பசுமை ஹை ட்ரஜன், பசுமை அமோ னியா, பசுமை ஏத்தனால் துறைமுகமாக மாற்றும் பணி ரூ. 26 கோடி செலவில் 2 காற்றாலை மின் திட்டம், ரூ. 16 கோடியில் 5 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகள் அடுத்த மாதம் முடிவடையும் அதன் பின் துறைமுகம் பசுமை துறைமுகமாக உருவாகும். மேலும் 60 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி திட்ட ங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

    இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து

    தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் போக்கு வரத்து தொடங்குவதற்காக துறைமுகம் தயாராக உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக நடுக்கடலில் 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி அமைக்கும் திட்டங்கள் ரூ. 700 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

    துறைமுக சாலை முதல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலையாக ரூ. 200 கோடி மதிப்பில் மாற்றும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது துறைமுக போக்குவரத்து மேலாளர் பிரபாகர், நிதி ஆலோசகர் சாகு, துணை மருத்துவ அதிகாரி ராஜேஸ்வரி, மெக்கா னிக்கல் என்ஜி னீயர் சுரேஷ் பாபு, துணைக் காப்பாளர் பிரவீன் குமார் சிங், மக்கள் தொடர்பு அதி காரி சசி குமார், உதவி அலுவலர் முருகன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    • கட்டுமான பொருட்களான தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • சட்டவிரோதமாக கொண்டு செல்லும் கனிமவளங்களை தடைசெய்ய கோரிக்கை

    வீ.கே.புதூர்:

    தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் நல சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கட்டுமான பொருட்களான மணல், எம்.சாண்ட், ஜல்லி, குண்டு கற்கள் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளி மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் கனிமவளங்களை தடைசெய்ய வேண்டும்,

    ஏற்கனவே செயல்பட்ட குவாரிகளை தொடர்ந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்துள்ள மல்லவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவருக்கும் இவரது தம்பி பாஸ்கரனுக்கும் வீடு தொடர்பாக பிரச்சினை இருந்துவருகிறது.

    இது தொடர்பாக மானாமதுரை காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் சிவகங்கை எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். அதிலும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    இந்தநிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்த முதியவர் கணேசன், கலெக்டர் அலுவலக வாயிலில் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

    இதனை கண்ட அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×