என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்- கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நடைபெறுகிறது
- தி.மு.க. அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறி வரும் அ.தி.மு.க. கொலை-கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டிவந்தது.
இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தும் புகார் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை (29-ந்தேதி) திங்கட் கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டி ருந்தார்.
அதன்படி நாளை கலெக்டர் அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
கலெக்டர் அலுவலகங்கள் இல்லாத இடங்களில் தாசில்தார் அலுவலகங்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்