என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BSP"
டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சென்ற ஆஷிஷ் பாண்டே என்பவர் துப்பாக்கியுடன் சென்று, அங்கு இருந்தவர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கு அவசியம் இல்லை என ஆஷிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சியினரும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சி ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது என அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்தீஸ்கரில் பகுஜன் சமாஜ் கட்சி 35 இடங்களிலும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி 35 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.
இதுகுறித்து ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி தலைவர் அஜித் ஜோகி கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில்
மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #ChhattisgarhElections #Mayawati #AjitJogi
போபால்:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடை பெறுகிறது. இதைதொடர்ந்து எதிர்க் கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மத்திய பிரதேச சட்டசபையில் 230 தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 17-ந் தேதி போபால் மற்றும் விகிசாவுக்கு வருகை தருகிறார். அதற்கு முன் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. எனவே, காங்கிரஸ் மாநில தலைவர் கமல் நாத் மத்திய பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
பின்ட், மொரீனா, ரேவா மற்றும் சாத்னா பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி விரும்புகிறது. ஏனெனில் அவை உத்தரபிரதேச மாநிலத்தின் எல்லையில் மிக நெருக்கத்தில் உள்ளது.
ராகுல்காந்தி வருகையின் போது 70 முதல் 80 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்கான தீவிர முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.
நீண்ட காலமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதா கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஆன கூட்டணி கை கொடுக்கும் என நம்புகிறது.
அதற்கு பதிலடி கொடுக்க பா.ஜனதாவும் தயாராகிறது. தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான பலமான கூட்டணி அமைக்க பா.ஜனதாவும் தீவிரமாக உள்ளது என அக்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தனது வாக்குகளை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்காது. மேலும் அக்கட்சியில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 6.42 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 44 சதவீத ஓட்டுகளும் பெற்றுள்ளன. பா.ஜனதாவுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 81 தனி தொகுதிகள் உள்ளன. அவற்றில் தற்போது பா.ஜனதா வசம் 58 தொகுதிகள் உள்ளன. காங்கிரசிடம் 19 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4 தொகுதிகளும் உள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத்தலைவராக சமீபத்தில் ஜெய் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டார். நேற்று கட்சி உறுப்பினர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜெய் பிரகாஷ் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் ஒருபோதும் ராகுல்காந்தியால் இந்தியாவில் வெற்றி பெற முடியாது என சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, ஜெய் பிரகாஷ் சிங்கை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கட்சி தலைவரின் பூர்வீகம் குறித்து அவதூறாக பேசியது பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், அதனால், அவரை தேசிய துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஜெய் பிரகாஷ் சிங்கை தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Mayawati
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு மூன்றாவது அணி அமைக்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டு சேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்தியது.
இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. இதற்காக சில தொகுதிகளை பகுஜன் சமாஜ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது.
இதுபற்றி சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும். பா.ஜ.க.வின் தோல்வியை உறுதி செய்வதற்காக நாங்கள் 2 முதல் 4 தொகுதிகள் வரை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தால், அதனையும் செய்வோம். இந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம்.
சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்த எங்கள் மெகா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக நடந்த 4 இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. முக்கிய தொகுதியான கைரானா மக்களவை தொகுதி, நூபூர் சட்டமன்றத் தொகுதியை சமீபத்தில் இழந்தது.
கூடுதல் இடங்கள் கொடுத்தால் மட்டுமே பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Akhilesh #UPAlliance
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்