search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surrender"

    • தி.மு.க.வை சேர்ந்த 15 பேர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்
    • கரூர் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கி தொடர்டையவர்கள்

    கரூர்,

    கடந்த மே மாதம் 26-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட வந்தனர். அப்போது அசோக் குமார் வீட்டில் சோதனை தொடங்க வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி பெண் அதிகாரிகளை தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.அதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் இடங்களில் நடைபெற்ற சோதனையையும், தடுத்ததாக கூறப்படுகிறது.திமுகவினரால் தாக்கப்பட்டு சோதனைக்கு வந்த வருமான வரித்துறை பெண் அதிகாரி காயத்ரி உட்பட நான்கு பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது கரூர் நகர காவல் துறையிலும் மற்றும் தாந்தோனிமலைக காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு கரூர் மாநகராட்சி கவுன்சிலர் இரண்டு பேர் உட்பட 19 நபர்களை கைது செய்தனர்.இந்நிலையில் ஜாமீன் கோரி திமுகவினர் மனு தாக்கல் செய்தனர். மனுவானது முதன்மை அமர்வு நீதிபதி அம்பிகாவிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜாமீன் தரக் கூடாது என வாதம் முன்வைத்த நிலையில், நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது நீதிமன்றம். தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கானது விசாரணை நடைபெற்ற நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது, அதிகாரிகளை தாக்கியது, ஆவணங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மற்றும் முன்ஜாமினை ரத்து செய்யக் கோரியும், வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அனைவரும் மூன்று நாட்களில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.மேலும், கரூர் நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டார். இந்நிலையில் திமுக கவுன்சிலர்களான லாரன்ஸ், பூபதி மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஜோதி பாசு, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் ஜிம் பாலாஜி, அருண்குமார உட்பட 15 பேர் இன்று காலை கரூர் கோர்ட்டில் ஆஜராகினர். இதில் 11 பேர் கரூர் ஜே. எம்.கோர்ட் நீதிபதி அம்பிகாவதி முன்பும், நான்கு பேர் கரூர் ஜே.எம்.இரண்டாவது கோர்ட்டில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் ஆஜராகி உள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் இன்று கோர்ட்டில் ஆஜராகாததால் அவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அ.தி.மு.க. கவுன்சிலர் கொலையில் 6 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.
    • இதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி செல்லும் சாலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு, மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திர பாண்டியன் (வயது 46) நேற்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலக்கோட்டை மாதேவன்பட்டியை சேர்ந்த அபிஷேக் (21), அழகர்சாமி (21), ரவிக்குமார் (21), விஜயகுமார் (22), தளபதி (21), கரண் (22) ஆகிய இன்று 6 பேர் இன்று சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் கீதா (வயது 22). இவர் வேலைக்கு செல்வதற்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.

    இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த கீதா, திருடன் திருடன் என கத்தியதால் அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், சீர்காழி தாண்ராசன்குப்பம் சேர்ந்தராம்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1/2 பவுன் தங்கச்செயினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • போலீஸ் ஏட்டு விட்டு சென்ற பணத்தை வாலிபர்கள் திரும்ப ஒப்படைத்தனர்.
    • அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் வீரமுத்துமணி. இவர் நேற்று முன்தினம் இரவு கமுதி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அங்கு வங்கி கணக்கிற்கு ரூ.9500 அனுப்பினார். எந்திரத்தில் பணம் அனுப்பப்பட்டு விட்டது என்று நினைத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    ஆனால் பணம் அனுப்பப்படாமல் ஏ.டி.எம். எந்திரத்திலேயே இருந்து உள்ளது. அதன் பிறகு அந்த மையத்திற்கு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவா (19), சரவணகுமார் (21) ஆகிய 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர். இதைத்தொடர்ந்து கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பிரகாஷ், குத்தாலிங்கம், மற்றும் தலைமை எழுத்தர் சித்ரா ஆகியோர் பணத்தை ஒப்படைத்த 2 வாலிபர்களை யும் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் ஏட்டு வீரமுத்துமணியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    • மதுரையில் திருடு போன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.
    • போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்.

    மதுரை

    மதுரையில் செல்போன் திருட்டு தொடர்கதையாக நடந்து வருகிறது. இதன் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), அரவிந்த் (வடக்கு), கவுதம் கோயல் (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    அவர்கள் சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பயனாக திருடுபோன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    தல்லாகுளம் சரகத்தில் மட்டும் 106 செல்போன்களும், அண்ணாநகரில் 64 செல்போன்களும், திடீர் நகரில் 42 செல்போன்களும் மீட்கப்பட்டது. இதே போன்று செல்லூர்-17, மீனாட்சி அம்மன் கோவில் சரகம்-13, அவனியாபுரம்-9, திருப்பரங்குன்றம்-4, தெற்கு வாசல்-6 செல்போன்களும் மீட்கப்பட்டன.

    மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

    இதில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமாகியதை தொடர்ந்து கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்
    • போலீசார் விசாரணைக்கு பின்னர் ஒப்படைப்பு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி மதியம் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். இதனை கண்ட பெரம்பலூர் போலீசார் அவரை மீட்டு ஒரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது அவர் நலமுடன் இருந்ததால், அவரை பற்றி தகவலை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூரை சேர்ந்த துரை அரசன் மனைவி ஜெயா என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெயாவை போலீசார் அவரது கணவரிடம் நேற்று ஒப்படைத்தனர்


    • முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் மதுரை வங்கியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.
    • இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட இருந்தது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி கொண்டா டப்படுவது வழக்கம்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேவர் ஜெயந்தி அன்று உருவச்சிலைக்கு அணிவிப்பதற்காக, 13 கிலோ எடை உடைய தங்க கவசத்தை வழங்கினார். இது தேவர் ஜெயந்தி தவிர மற்ற நாட்களில், மதுரை அண்ணாநகர் வங்கி லாக்கரில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவுக்கு தங்க கவசம் வழங்குவதில் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். அணிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. எனவே பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கான தங்க கவசத்தை, ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டது.

    இதன்படி மதுரை அண்ணாநகர் வங்கியில் இருந்து அதிகாரிகள் தங்க கவசத்தை பெற்று, பசும்பொன் கிராமத்தில் உள்ள உருவச்சிலைக்கு அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட இருந்தது.

    இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா நிறைவடைந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ. காமாட்சி தலைமையில் அதிகாரிகள் இன்று காலை தங்க கவசத்துடன் மதுரைக்கு வந்தனர். அவர்கள் அண்ணாநகர் வங்கியில் மதுரை மாவட்ட டி.ஆர்.ஓ. சக்தி வேல் முன்னிலையில் முன்னிலையில் தங்க கவசத்தை ஒப்படைத்தனர்.

    முன் விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கே.செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வீரப்பதேவர் (வயது 56). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களுக்கும் தோட்ட பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று வீரப்ப தேவர் தனது தோட்டத்தில் இருந்தபோது அங்கு வந்த உறவினர்கள் முத்துக்குமார் (35), வெள்ளைச்சாமி (37), பாலு (30), சின்னராஜ் (33), முத்து கனகம்மாள் (50) ஆகியோர் பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த 5 பேரும் வீரப்பதேவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீரப்பதேவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பரளச்சி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான 5 பேரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக முத்துக்குமார், வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரும் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 ஆயிரம் பேர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்தனர்.
    மாஸ்கோ:

    சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

    அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன.

    எனினும் டெயிர் எஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள பாகுஸ் கிராமம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையும் அவர்களிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய ராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதற்கிடையில், முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர்.
    கோவை அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சரணடைந்த இருவரையும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    ராயபுரம்:

    திருச்சூர் கல்யாண் நகைக்கடையில் இருந்து கோவைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கடந்த 7-ந்தேதி கொள்ளையடிக்கப்பட்டது.

    கோவை நவக்கரை அருகே ஒரு கும்பல் காரை வழிமறித்து ஊழியர்களை மிரட்டி காருடன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    நகைக்கடை ஊழியர்கள் வந்த கார் மதுக்கரை தென்றல் நகரிலும், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற 2 கார்களில் ஒரு கார் வலுக்குப்பாறையிலும் நிறுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கார்களை மீட்டு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

    கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் உரிமையாளர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். அவரிடம் விசாரித்த போது கோவையை சேர்ந்த ஒருவருக்கு காரை விற்று விட்டதாக கூறினார்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் வேலூரை சேர்ந்த ஒருவர் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதும், மொத்தம் 11 பேர் இந்த கொள்ளையை அரங்கேற்றியதும் தெரிய வந்தது. அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை, வேலூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வேலூரை சேர்ந்த தமிழ்செல்வன், ஜெய பிரகாஷ் ஆகியோர் நேற்று சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரையும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருவரும் கோவை கோர்ட்டில் 18-ந் தேதி ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அப்போது இருவரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்யப்பட உள்ளது.

    பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில் போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரர் கிறிஸ்டோப் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து போலீசில் சரண் அடைந்தார். #France #YellowVest #Protest #ChristopheDettinger #Boxer
    பாரீஸ்:

    பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை ரத்து செய்யக்கோரி வார இறுதிநாட்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படும் இந்த போராடம் 2 வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் வலுப்பெற்றது.

    மேலும் கடந்த வார போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான கிறிஸ்டோப் பெட்டிங்கர் என்பவர் போலீசாரை சரமாரியாக குத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த நிலையில், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, கிறிஸ்டோப் பெட்டிங்கர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.  #France #YellowVest #Protest #ChristopheDettinger #Boxer 
    காட்பாடி அருகே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த கல்லூரி மாணவர் கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்.

    காட்பாடி:

    காட்பாடி சேனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). சிக்கன் கடை வைத்திருந்தார். இவரது மனைவி நிர்மலா. மகன்கள் சுரேஷ், பிரபு (19).

    கடந்த மாதம் நிர்மலா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து கண்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    அந்த பெண்ணுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கண்ணன் வீட்டில் இருந்தார். அப்போது பிரபு கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேட்டுள்ளார்.

    இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் கண்ணண் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த கண்ணன் துடிதுடித்து இறந்தார்.

    கொலை செய்ய பயன்படுத்திய கத்தியுடன் பிரபு விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தந்தையை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி சரணடைந்தார்.

    விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தந்தையை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×