கவுன்சிலர் கொலையில் 6 பேர் மதுரை கோர்ட்டில் சரண்

அ.தி.மு.க. கவுன்சிலர் கொலையில் 6 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கவுன்சிலர் கொலையில் 6 பேர் மதுரை கோர்ட்டில் சரண்
Published on

மதுரை

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி செல்லும் சாலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு, மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திர பாண்டியன் (வயது 46) நேற்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலக்கோட்டை மாதேவன்பட்டியை சேர்ந்த அபிஷேக் (21), அழகர்சாமி (21), ரவிக்குமார் (21), விஜயகுமார் (22), தளபதி (21), கரண் (22) ஆகிய இன்று 6 பேர் இன்று சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com