search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த உ.பி.யில் மெகா கூட்டணிக்கு காங்கிரஸ் பேச்சுவார்த்தை
    X

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த உ.பி.யில் மெகா கூட்டணிக்கு காங்கிரஸ் பேச்சுவார்த்தை

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகளும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கைகோர்க்கின்றன. #2019elections #UttarPradeshAntiBJP
    லக்னோ:

    நடப்பு பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடையும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஆளும் பா.ஜ.க.வை இந்த தேர்தலில் எப்படியும் வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தல் கூட்டணிக்கான காய் நகர்த்தல்களை தொடங்கி விட்டது.

    மாநிலவாரியாக பலமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள ராகுல் காந்தி தீர்மானித்துள்ளார்.

    இதில் முதல்கட்டமாக நாட்டின் மிகபெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்  காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்  ஆகிய மூன்று கட்சிகள் கைகோர்க்கும் மெகா கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன.

    எனினும், சித்தாந்த வேற்றுமை காரணமாக சிவசேனா கட்சியுடன் மட்டும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்னும் முடிவில் காங்கிரஸ் மேலிடம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

    பிரதமர் பதவி யாருக்கு? என்பதை தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்னும் சமரச திட்டத்தின்படி நாட்டின் பிற மாநிலங்களிலும் பா.ஜ.க. மீது அதிருப்தியில் இருக்கும் வலுவான எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. 

    இதன் அடிப்படையில், விரைவில் சட்டசபை தேர்தல்களை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் மந்திரி வேட்பாளர்கள் யார்? என்பதை முன்கூட்டியே அறிவிக்க மாட்டோம் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. #2019elections #UttarPradeshAntiBJP #UttarPradeshGrandAlliance 
    Next Story
    ×