என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bride"
- உயிரை துச்சமென நினைத்து குட்டைக்குள் குதித்து அவரை மணமகன் காப்பாற்றினார்.
- இருவரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
திருவனந்தபுரம் :
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (வயது 25). இவருக்கும், கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திராவிற்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களுக்கு நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இந்தநிலையில், திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மணமக்கள் இருவரும் காலையில் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பகல் 11 மணியளவில் பாரிப் பள்ளி வேளமானூர் காட்டுப்புரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். அந்த குவாரியில் 150 அடி உயரத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளித்தது.
அந்த இடத்தை பார்த்ததும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். இருவரும் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்தனர். அப்போது திடீரென்று சாந்தி்ரா கால் வழுக்கி 150 அடி உயரத்தில் இருந்து குவாரியில் தேங்கிநின்ற தண்ணீருக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தார்.
இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட வினு கிருஷ்ணன் உடனடியாக குவாரியில் இருந்த தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்த தனது வருங்கால மனைவி சாந்திராவை காப்பாற்றினார். சாந்திராவின் உடையை பிடித்து இழுத்து பாறையின் ஒரு பகுதிக்கு வினு கிருஷ்ணா கொண்டு வந்தார்.
அதனைத்தொடர்ந்து இருவரும் குவாரி பாறையை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்.. என்று சத்தம் போட்டனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் ரப்பர் வெட்டும் பணி செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கயிற்றை இறக்கி பாதுகாப்பாக பிடித்து கொள்ளுமாறு கூறினர்.
பின்னர் குழாய் மூலம் கட்டப்பட்ட சிறு தோணியில் தொழிலாளர்கள் இறங்கி இருவரின் அருகே சென்று முதலுதவி செய்தனர். இதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
லேசான காயங்களுடன் இருவரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக நேற்று நடைபெறுவதாக இருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
துபாயில் பணி செய்துவரும் வினு கிருஷ்ணன் திருமணத்திற்காக 2 வாரங்களுக்கு முன்னர் தான் சொந்த ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை மிஞ்சும் சம்பவமாக டூப் இல்லாமல், வாலிபர் தனது வருங்கால மனைவியை 150 உயரத்தில் இருந்து பாறைக்குழிக்குள் குதித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- பன்னீர்செல்வம் இன்ஜினியரிங் படித்துள்ளார், சந்தியா டிப்ளமோ அக்ரி படித்து முடித்துள்ளார்.
- கணவர், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டு உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் பன்னீர்செல்வம். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகள் சந்தியாவிற்கும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. பன்னீர்செல்வம் இன்ஜினியரிங் படித்துள்ளார், சந்தியா டிப்ளமோ அக்ரி படித்து முடித்துள்ளார்.
நேற்று காலை தனது கணவனான பன்னீர்செல்வம் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சந்தியா குளித்துவிட்டு வருவதாக அவரது அறைக்குள் சென்றார். கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் சந்தியா வெளியே வராததை கண்ட அவரது கணவர் கதவைத்தட்டி உள்ளார். ஆனால் திறக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில்,விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தியாவின் கணவர் பன்னீர் செல்வத்தை காவல்துறையினர் ,கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆன ஒரே வாரத்தில் பெண் மரணம் அடைந்ததால் விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து, அனுப்பினாள்.
சிறுமியின் இந்த கடிதத்தை வேடிக்கையாக நினைத்து, புறக்கணிக்காமல் பிரதமர் ஜெசிந்தா தனது கைப்பட கடிதம் எழுதி, அவளுக்கு பதில் அனுப்பினார்.
அதில் அவர், “டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை” என தெரிவித்தார்.
மேலும், “நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்று கொள்ளமுடியாது. அதனால் அதை திருப்பி தந்துவிடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றும் அந்த கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டு இருந்தார்.
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது32). இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மரக்காணம் அருகே கீழ்பேட்டையை சேர்ந்த பூரணி (22) என்பவருக்கும் கடந்த 3.2.2017 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பூரணிக்கு பெற்றோர் போதுமான சீர்வரிசை வாங்கி கொடுத்தனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களில் பூரணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் ஞானசேகர், கொழுந்தனார் ரகுபதி, மாமியார் செந்தாமரை ஆகியோர் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்தரவதை செய்து வந்ததால் பூரணி இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று ஞானசேகர், ரகுபதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர். செந்தாமரையை தேடி வருகிறார்கள். புதுப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த சம்பவத்தில் திருமண நாளில் கணவர் மற்றும் கொழுந்தனார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும் செங்கம் தாலுகா கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஜீவாவுக்கும் கடந்த 13-ந் தேதி வரகூரில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரு வீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இளம்பெண் திருவண்ணர்மலையில் உள்ள பெண்கள் அழகு நிலையத்துக்கு தனக்கு மேக்கப் போடுவதற்காக சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து, அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் இல்லை.
இது குறித்து, பெண்ணின் தந்தை வாணாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் என்ன ஆனார்? அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை மாயமான பெண் வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டிற்கு சென்றேன். எனது பெற்றோர் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்து, நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என்றார். இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஆரணி:
ஆரணி அருகே உள்ள ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். தி.மு.க. பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.
இன்று காலை அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். மணமக்களை வாழ்த்தி ராஜகோபால் தரப்பினர் தி.மு.க. பேனர் வைத்தனர். தி.மு.க. கட்சி கொடி கட்டியிருந்தனர்.
நேற்று இரவு மணமக்கள் அழைப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இன்று அதிகாலை திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்தது. அப்போது மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பேனரால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருமண செலவு எங்களுடையது அதில் மணப்பெண் வீட்டார் எப்படி தி.மு.க. பேனர் வைக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். இது பின்னர் மோதலாக மாறியது. கைக்கலப்பும் ஏற்பட்டது.
இதனால் திகைத்து போன மணப்பெண் சந்தியா திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால் இன்னும் பின்னர் என்ன பிரச்னை எல்லாம் ஏற்படுமோ என பயந்தார். இதனால் எனக்கு இந்த திருமணத்தில் விரும்பமில்லை என்று கூறினார்.
இதனால் மணமகன் வீட்டார் கோபித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.
திகைத்து போன மணப்பெண் வீட்டார் எப்படியும் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என எண்ணினர். ராஜகோபாலின் தங்கை மகன் ஏழுமலை (27) என்பவரிடம் திருமணம் குறித்து பேசினர். அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து ஏழுமலைக்கும் சந்தியாவுக்கும் அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(வயது 25). இவருக்கும் ஹாசன் டவுன் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 6-ந் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் இவர்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 18-ந் தேதி(அதாவது நேற்று) அறிவிக்கப்பட்டது.மணமகன் நவீன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மணப்பெண் சுவேதா, ஹாசன் டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
அதன்படி திருமண நாளான நவம்பர் 18-ந் தேதி அன்று அவருக்கு வணிக கணக்குப்பதிவியல் மற்றும் சட்டம் ஆகிய பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. திருமண நாளன்று தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் சுவேதா மனமுடைந்தார். அவர் இதுபற்றி தனது வருங்கால கணவர் நவீன் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
அதற்கு நவீனும், அவருடைய குடும்பத்தாரும் சுவேதாவுக்கு ஆறுதல் கூறினர். மேலும் நன்றாக படிக்கும்படியும், தேர்வை கண்டிப்பாக தாங்கள் எழுத வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, சுவேதா தனது தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று காலையில் ஹாசன் டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நவீன்-சுவேதா ஆகியோரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. காலை 7.45 மணியில் இருந்து 8.45 மணிக்குள் முகூர்த்த நேரம் ஆகும்.
அதன்பேரில் நேற்று அதிகாலையிலேயே மணமகன் நவீனும், மணப்பெண் சுவேதாவும் திருமணத்திற்கு தயாரானார்கள். திருமணத்திற்காக வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் தயார் செய்யப்பட்டது. பின்னர் குறித்த நேரத்தில் மணக்கோலத்தில் நவீனும், சுவேதாவும் வந்து மணமேடையில் அமர்ந்தனர். அதையடுத்து அவசர, அவசரமாக புரோகிதர் வேத, மந்திரங்கள் முழங்க மணமகன் நவீன், மணமகள் சுவேதாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
மேலும் விரைவாக திருமணச் சடங்குகளும் முடிக்கப்பட்டன. அதையடுத்து மணமகன் நவீனும், மணப்பெண் சுவேதாவும் மணக்கோலத்திலேயே தேர்வு நடைபெறும் அரசு கல்லூரிக்கு வந்தனர். அங்கு நவீன் வெளியில் காத்திருக்க, சுவேதா மணக்கோலத்திலேயே தேர்வு அறைக்கு சென்று தன்னுடைய தேர்வை எழுதினார். அவர் தேர்வை எழுதி முடித்துவிட்டு திரும்பி வரும் வரை மணமகன் நவீனும், திருமண வீட்டாரும் அங்கேயே காத்திருந்தனர். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மணமகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து மணமகனும், மணப்பெண்ணும் மீண்டும் மண்டபத்திற்கு திரும்பி அங்கு குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.
திருமணம் முடிந்த பிறகு மணப்பெண் சுவேதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், ஆச்சரியமாகவும் அமைந்தது. என் வாழ்க்கையில் நடந்த ஓர் அதிசயம் இது. இந்த தேர்வை நான் எழுதவில்லை என்றால் மனதளவில் மிகவும் வருத்தம் அடைந்திருப்பேன். ஆனால் எனக்கு எனது கணவரும், அவருடைய குடும்பத்தினரும் மிகவும் ஒத்துழைப்பு தந்தனர். அவர்களால்தான் இந்த தேர்வை நான் மன நிம்மதியோடு எழுத முடிந்தது. கண்டிப்பாக நான் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவேன். நான் தேர்வு எழுத உறுதுணையாக இருந்த என் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Bride #Exam
உளுந்தூர்பேட்டை தாலுகா ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 34). இவர் அதே கிராமத்தில் கடந்த 2009-ம் ஆண்டு புதியதாக வீடு கட்டினார்.
இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ஆசனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இவருடைய வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு அதே பகுதியில் சென்ற உயர்அழுத்த மின்கம்பி இடையூறாக இருந்ததால் அதை வேறு இடத்திற்கு மாற்றி இணைப்பு கொடுக்கும்படி மின்வாரிய அலுவலகத்தில் அப்போதைய போர்மேனாக பணியாற்றி வந்த குமார் (53) என்பவரிடம் ராதாகிருஷ்ணன் முறையிட்டார்.
அதற்கு உயர்அழுத்த மின்கம்பி இணைப்பை மாற்று இடத்தில் வைப்பதற்காக ராதாகிருஷ்ணனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது குமாரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, குமார் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட மின்வாரிய ஊழியர் குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட குமார், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழபருத்திக்குடியை சேர்ந்த இளஞ்செழியனுக்கும், நாகை மாவட்டம் செம்மியவழுரை சேர்ந்த கனிமொழிக்கும் குமராட்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.
அப்போது மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதை மணமக்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
பொதுவாக திருமண விழாவில், மணமக்களுக்கு பரிசு பொருட்கள், மொய் பணம் ஆகியவற்றை தான் வழங்குவார்கள். ஆனால் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கி வருவதால் பெட்ரோலை பரிசாக அளித்த சம்பவம் மணவிழாவுக்கு வந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த நிமிடம் முதல் நெட்டிசன்கள் ‘மீம்ஸ்’களை பறக்க விட்டனர். இதனால் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் என்று எங்கும் இந்த மணமக்களின் ‘மீம்ஸ்’கள் தான் நிரம்பி வழிந்தன. #FuelPriceHike #WeddingBride
பொதுவாக, வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன.
இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்