என் மலர்

    செய்திகள்

    திருமணம் ஆகி 40 நாளில் புதுப்பெண் மாயம்- போலீசார் விசாரணை
    X

    திருமணம் ஆகி 40 நாளில் புதுப்பெண் மாயம்- போலீசார் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமணம் ஆகி 40 நாளில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள கூலிகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் தமிழ் செல்விக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். 

    கடந்த 20-ந்தேதி அன்று கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் தமிழ்செல்வி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இதனால் பதறி போன சின்னத்துரை மனைவியின் தந்தை சக்திவேலுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து தமிழ்செல்வியை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

    இது குறித்து இண்டூர் போலீசில் சக்திவேல் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தமிழ்செல்வியை போலீசார் தேடி வருகின்றனர். திருமணம் ஆகி 40 நாளில் புதுப்பெண் மாயமானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×