search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto"

    • சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
    • மோட்டார்சைக்கிளில் வருபவர்களும் அதே பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள சாலைப்புதூரில் ஒருபுறம் சாலை போடும் பணி முழுமையாக முடிவுற்ற நிலையில், மற்றொரு பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளன.

    குழாயில் உடைப்பு

    இதில் சாலை பணி முடிவடைந்த பகுதியில் திடீரென சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

    மேலும் அதே பகுதியில் பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் அதன் வழியே அணிவகுத்து செல்லும்போது பள்ளத்தில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. நேற்று மாலையில் பாவூர்சத்திரம் வழியாக நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ ஒன்று சாலைப்புதூரில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.

    இதில் ஆட்டோவில் பயணம் செய்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இருப்பினும் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.

    கோரிக்கை

    அதேபோன்று மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வருபவர்களும் அதே பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர் என்றும், நான்கு வழிச்சாலை பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக சாலைப்புதூரில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து செல்லும் பகுதியை சீர் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார்.

    மதுரையில் ஆகஸ்ட் 20 ந் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க திருப்பூர் அ.தி.மு.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாநகரில் ஆட்டோக்களில் விளம்பர பதாகைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார். மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணிகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கட்சி நிர்வாகிகள் கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஏ.எஸ்.கண்ணன், வி.பி.என்.குமார், சி.எஸ்.கண்ணபிரான், ஆண்டவர் பழனிசாமி, சின்னசாமி, யுவராஜ் சரவணன், தனபால், அன்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.   

    • மார்க்கெட் சிக்னல் வளைவில் திரும்புவதற்காக பிரேக் போட்டுள்ளார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆவுடை யார்புரம் பாலவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    சாலை விபத்து

    இவர் மார்க்கெட் அருகே உள்ள பகுதியில் பயணியை இறக்கி விட்டு விட்டு மீண்டும் பழைய பஸ் நிலைய ஸ்டாண்டை நோக்கி ஆட்டோவை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட் சிக்னல் வளைவில் திரும்புவதற்காக பிரேக் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.

    அதே நேரத்தில் அவர் ஓட்டி வந்த ஆட்டோவும் அவர் மீது கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அங்கிருந்தவர்கள் மீட்ட தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆறுமுகத்திற்கு திருமணம் ஆகவில்லை. இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு குற்ற பதிவேட்டில் ரவுடி பட்டியலில் இருந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

    • மதுரை கே.கே.நகரில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார்.
    • ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (51). கே.கே.நகர் பகுதியில் சொந்த வேலை காரணமாக மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆறுமுகம் சென்றார்.

    அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் ஒரே பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. சுந்தரம் பார்க் அருகே வந்தபோது எதிர்திசையில் ஒரு இருசக்கர வாகனம் ஆட்டோ வின் குறுக்கே வந்துள்ளது. இதனால் பிரேக் அடித்து ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.

    ஆனால் ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் மீனாட்சிக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் கோவில், வீட்டில் கொள்ளை நடந்தது.
    • ஆட்டோவை களவாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் ஈஸ்வரன் கோவில் தெரு–வில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

    இந்த திருட்டு குறித்து கோவில் நிர்வாகி பிச்சை அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரணை நடத்தி இரண்டு சிறுவர்களை கைது செய் தனர்.

    வீடு புகுந்து திருட்டு

    மதுரை தல்லாகுளம் ராதாகிருஷ்ணன் ரோடு உழவர் சந்தை பகுதியில் வசிப்பவர் ரோஷன் பானு (23). இவர் உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவில் வைத்தி–ருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் பணம் ரூபாய் 10 ஆயிரத்தை திருடப்பட்டி–ருந்தது.

    இந்த சம்பவம் குறித்து ரோஷன் பானு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    மதுரை திருப்பாலை உச்சபரம்பு மேடு ஜானகி அம்மாள் தெருவை சேர்ந்த–வர் ராஜேந்திரன் மகன் முத்துப்பாண்டி (32). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அரசு மருத்துவம–னையை அடுத்த கேண்டீன் அருகே ஆட்டோவை நிறுத்தி இருந்தார்.

    இவர் அருகில் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அந்த ஆட்டோ திருடு போயி–ருந் தது. இதுகுறித்து முத்துப்பாண்டி அரசு மருத்து–வமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட் டோவை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

    இதில் பெத்தானியாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (42), தத்தனேரி சிவ–காமி நகர் கணேஷ்குமார் (43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிச்சென்ற ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகைகார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யும் வகையில் சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். நகர பஸ்கள் மட்டுமின்றி தொலைதூரம் செல்லும் புறநகர் பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரி ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ் உரிமையாளர்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் தனியார் பஸ்கள், வாடகைகார்கள், ஆட்டோக்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. வருவாய் பாதிப்பு மட்டுமின்றி இழப்பும் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகன டாக்சியை அனுமதிப்பதால் ஆட்டோக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை. காப்பீடு செலுத்த முடியவில்லை. வாழ்க்கையை நடத்துவதே கடினமாகிவிட்டது. இதனால் 23 வெவ்வேறு வகையான தனியார் போக்குவரத்து வாகன சங்கங்கள் இணைந்து வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்தம் செய்கிறோம். அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.
    • ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் பயணிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்லவும், மெட்ரோ நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தின் இணைப்பு மினி பஸ் சேவை மற்றும் ஆட்டோ இணைப்பு சேவை, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.

    இவற்றை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் மெட்ரோ பயணிகள் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க முடியும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப் போக்குவரத்துக்கழக மினி பஸ் திருமங்கலம் மற்றும் கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை இடையே இயக்கப்படுகிறது.

    • ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலவசமாக ஆட்டோக்கள் வழங்கப்படும்.
    • இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம் 3000. இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகிற2-ந்தேதி பதவி யேற்க உள்ளார்.

    இதை முன்னிட்டு மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    எங்களது ரோட்டரி சங்கம் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக்கொடுத்து இ-ஆட்டோ வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு சவாரி எடுக்கவும், ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்களின் வருமானம், வாழ்க்கை தரம் உயர ரோட்டரி சங்கம் உறுதுணையாக இருக்கும். 2024-ம் ஆண்டுக்குள் ரூ. 4 கோடி மதிப்பில் ஒரு சங்கத்துக்கு ஒரு ஆட்டோ வீதம் 127 ஆட்டோ ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு வழங்கப்படும்.

    சுகாதார வசதி இல்லாத மாணவிகள் பயிலும் அரசு பள்ளியை கண்டறிந்து கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும். 12 மாதங்களில் 12 திட்டங்கள் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வருகிற 1-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மண்டல ஒருங்கிணைப் பாளர் அசோக், உதவி ஆளுநர் கவுசல்யா, ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன் நெல்லை பாலு, மகிழ்ந்திரு, மகிழ்வித் திரு திட்ட ஒருங்கிணைப் பாளர் மாதவன் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் சங்கம் கோரிக்கை
    • பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 6 பேர் வரை ஏற்றி செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை மாநில ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், ஆட்டோ சங்க மாநில துணைப் பொது செயலாளர் அந்தோணி, பொருளாளர் செந்தில்முருகன், மாநில துணை தலைவர்கள் பாளையத்தான், பிரகாஷ், ஜீவா, நடனமூர்த்தி, மாநில செயலாளர்கள் தேவநாதன்,சதீஷ், ராஜா, சதீஷ்குமார்,

    முருகேசன், நிர்வாக, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போக்குவரத்து துறை அறிவித்தபடி ஆட்டோவில் மாணவர்களை குறைவான எண்ணிக்கையில் ஏற்றினால் பள்ளிக்கு செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் 2 மடங்கு ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    அதுபோல் மாணவர்களை ஏற்றி செல்வதற்கு பெற்றோர்க ளிடம் வசூலிக்கப்படும் கட்டணமும் 2 மடங்கு உயர்த்தப்படும். இதனால் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படும். எனவே ஆட்டோவில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 8 பேர் ஏற்றி செல்வதற்கும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 6 பேர் வரை ஏற்றி செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

    பள்ளிக்கு செல்லும் ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்வதால் மாணவர்களை சரியான நேரத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. எனவே, பள்ளி முடித்து மாலையில் வரும் போது சோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலங்கள் அமைக்கவும் ,மெட்ரோ ரெயில் விடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். குறுகிய சாலையில்  7 மணி முதல் 9 மணி வரை கனரக வாகனத்தில் குப்பையை ஏற்றி செல்வதை தடை விதிக்க வேண்டும்.

    நகர பஸ்களின் நேரத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.
    • இவ்வாறு வாகனத்தை இயக்கினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநா தன் சீர்காழி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இன்று காலை திடீர் வாகன தணிக்கை செய்தார்.

    அப்போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள், தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.

    இதனை அடுத்து 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

    தொடர்ந்து இவ்வாறு வாகனத்தை தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் பள்ளி மாணவர் ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் எச்சரித்தார்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பேர்ணாம்பட்டு கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக கடந்த 10ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் தினகரன் என்பவர் தனது சொந்த செலவில் ஆட்டோவை வாங்கி உள்ளார்.

    பேரணாம்பட்டு கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் தினகரன் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காலை 7 மணிக்கு பள்ளிக்கு வருகிறார்.

    பள்ளியில் இருந்து ஆட்டோவை எடுத்துச் சென்று சாமஏரி, கொல்லைமேடு, உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளி மாணவ மாணவியர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வருகிறார்.

    இதனால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திலும் எந்த ஒரு அவதியும் இன்றி சந்தோஷமாக பள்ளிக்கு வருவதாக ஆசிரியர் தினகரன் தெரிவிக்கிறார். தினந்தோறும் ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் இவருடைய சேவையை மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

    • புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது.
    • ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யூ.சி மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புதிய பஸ் நிலையம் சங்க ஆலோசகர் அண்ணாதுரை வரவேற்றார். ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், சி.ஐ.டி.யூ ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா, மாநகரத் தலைவர் ஜெயராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் மூர்த்தி, மக்கள் அதிகாரம் தேவா, புதிய பஸ் நிலையம் சங்கம் தலைவர் நாகலிங்கம், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சாமிநாதன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாக குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், மாவட்டத் தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்த கூட்டத்தில், கேரள மாநில அரசை போல் ஆட்டோ செயலியை உருவாக்கி அரசை ஏற்று நடத்த வேண்டும். தஞ்சை பெரிய கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு அறிவித்தது போல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வீடு கட்ட மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் யோகராஜ், புதிய பஸ் நிலையம் ஆட்டோ சங்கம் கருணாகரன், வழக்கறிஞர் சண்முகநாதன், அனைத்து வாகன ஓட்டுனர் சங்க பேரவை பழனிச்சாமி, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதிய பஸ் நிலையம் ஆலோசகர் குப்புசாமி நன்றி கூறினார்.

    ×