search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைகிராம மக்கள்"

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பேர்ணாம்பட்டு கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக கடந்த 10ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் தினகரன் என்பவர் தனது சொந்த செலவில் ஆட்டோவை வாங்கி உள்ளார்.

    பேரணாம்பட்டு கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் தினகரன் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காலை 7 மணிக்கு பள்ளிக்கு வருகிறார்.

    பள்ளியில் இருந்து ஆட்டோவை எடுத்துச் சென்று சாமஏரி, கொல்லைமேடு, உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளி மாணவ மாணவியர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வருகிறார்.

    இதனால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திலும் எந்த ஒரு அவதியும் இன்றி சந்தோஷமாக பள்ளிக்கு வருவதாக ஆசிரியர் தினகரன் தெரிவிக்கிறார். தினந்தோறும் ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் இவருடைய சேவையை மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

    • தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 5 வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அருகே திருமூர்த்திமலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 5 வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நாகன் சங்கத்தின் கொடியேற்றி துவக்கி வைத்தார். மலை கமிட்டி தலைவர் மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பேசினர்.மாநாட்டில், திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில், வசிக்கும் மக்கள் அனைவருக்கும், அனுபவ நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும். குருமலை மலைவாழ் குடியிருப்புக்கு திருமூர்த்திமலையிலிருந்து பாதை அமைக்க வேண்டும்.பாதை இல்லாத அனைத்து மலைவாழ் கிராமங்களுக்கும் புதிதாக அமைத்து தர வேண்டும்.

    புலையன் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அனைவருக்கும், கான்கிரீட் வீடுகள் கட்டித்தர மத்திய, மாநில அரசு முன்வர வேண்டும்.தளிஞ்சி மக்கள், கூட்டாற்றை கடந்து செல்ல பாலம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் சங்கத்தலைவராக குப்புசாமி, செயலாளராக செல்வன், பொருளாளராக மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகி வாணீஸ்வரி நன்றி கூறினார்.

    ×