search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
    X

    ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

    • மதுரை கே.கே.நகரில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார்.
    • ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (51). கே.கே.நகர் பகுதியில் சொந்த வேலை காரணமாக மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆறுமுகம் சென்றார்.

    அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் ஒரே பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. சுந்தரம் பார்க் அருகே வந்தபோது எதிர்திசையில் ஒரு இருசக்கர வாகனம் ஆட்டோ வின் குறுக்கே வந்துள்ளது. இதனால் பிரேக் அடித்து ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.

    ஆனால் ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் மீனாட்சிக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×