என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில், வீட்டில் கொள்ளை
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் கோவில், வீட்டில் கொள்ளை நடந்தது.
- ஆட்டோவை களவாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் ஈஸ்வரன் கோவில் தெரு–வில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இந்த திருட்டு குறித்து கோவில் நிர்வாகி பிச்சை அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரணை நடத்தி இரண்டு சிறுவர்களை கைது செய் தனர்.
வீடு புகுந்து திருட்டு
மதுரை தல்லாகுளம் ராதாகிருஷ்ணன் ரோடு உழவர் சந்தை பகுதியில் வசிப்பவர் ரோஷன் பானு (23). இவர் உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவில் வைத்தி–ருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் பணம் ரூபாய் 10 ஆயிரத்தை திருடப்பட்டி–ருந்தது.
இந்த சம்பவம் குறித்து ரோஷன் பானு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரை திருப்பாலை உச்சபரம்பு மேடு ஜானகி அம்மாள் தெருவை சேர்ந்த–வர் ராஜேந்திரன் மகன் முத்துப்பாண்டி (32). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அரசு மருத்துவம–னையை அடுத்த கேண்டீன் அருகே ஆட்டோவை நிறுத்தி இருந்தார்.
இவர் அருகில் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அந்த ஆட்டோ திருடு போயி–ருந் தது. இதுகுறித்து முத்துப்பாண்டி அரசு மருத்து–வமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட் டோவை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இதில் பெத்தானியாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (42), தத்தனேரி சிவ–காமி நகர் கணேஷ்குமார் (43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிச்சென்ற ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்