search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், ஆட்டோ ஓட்டுனர்களின் சிறப்பு கூட்டம்
    X

    கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாக குழு சந்திரகுமார் பேசினார்.

    தஞ்சையில், ஆட்டோ ஓட்டுனர்களின் சிறப்பு கூட்டம்

    • புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது.
    • ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யூ.சி மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புதிய பஸ் நிலையம் சங்க ஆலோசகர் அண்ணாதுரை வரவேற்றார். ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், சி.ஐ.டி.யூ ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா, மாநகரத் தலைவர் ஜெயராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் மூர்த்தி, மக்கள் அதிகாரம் தேவா, புதிய பஸ் நிலையம் சங்கம் தலைவர் நாகலிங்கம், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சாமிநாதன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாக குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், மாவட்டத் தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்த கூட்டத்தில், கேரள மாநில அரசை போல் ஆட்டோ செயலியை உருவாக்கி அரசை ஏற்று நடத்த வேண்டும். தஞ்சை பெரிய கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு அறிவித்தது போல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வீடு கட்ட மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் யோகராஜ், புதிய பஸ் நிலையம் ஆட்டோ சங்கம் கருணாகரன், வழக்கறிஞர் சண்முகநாதன், அனைத்து வாகன ஓட்டுனர் சங்க பேரவை பழனிச்சாமி, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதிய பஸ் நிலையம் ஆலோசகர் குப்புசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×