search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly elections"

    டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். இறுதியில் 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. 

    காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடுவும் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே, காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இரவில் அவர்கள் ஜெய்ப்பூர் திரும்பினர்.



    இதையடுத்து, ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட்டை தேர்வு செய்துள்ளனர்.

    மேலும் சச்சின் பைலட் துணை முதல் மந்திரியாகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்படுவார் என காங்கிரசார் தெரிவித்துள்ளனர். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். இறுதியில் 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. 

    காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், புதிய முதல் மந்திரியை ராகுல் காந்தி தேர்வு செய்வார் என முடிவானது.

    இதற்கிடையே, காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் இன்று காலை டெல்லி சென்றனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அதன்பின்னர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தினர்.



    இதையடுத்து, ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான அசோக் கெலாட் ஆகியோர் தங்களது தொண்டர்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அவர் தயாரானார்.

    தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,  மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.



    இதையடுத்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதல் மந்திரியாக பதவியேற்றார்.  முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கானா முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட சந்திரசேகர் ராவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது.

    அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.



    இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார். 

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை மதியம் 1.30 மணியளவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவித்தனர்.

    முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் போலீசர் ஈடுபட்டு வருகின்றனர். #TelanganaElections #ChandrashekharRao
    தெலுங்கானா மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.



    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர  ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம் எல் ஏக்களின் கூட்டம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் தெலுங்கானா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, சந்திரசேகர ராவ் தனது ஆதரவாளர்களுடன் தெலுங்கானா மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது. #TelanganaElections #ChandrashekharRao
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற தோல்வி குறித்து வசுந்தர ராஜே சிந்தியா கூறுகையில் மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #VasundharaRajeScindia
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை முதலே அங்கு காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

    இறுதியில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தானில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வியை ஏற்று, முதல் மந்திரி பதவியை வசுந்தர ராஜே சிந்தியா ராஜினாமா செய்தார்.

    அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள். மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அதிகளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #VasundharaRajeScindia
    சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிமுகம் கண்டுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AssemblyElections2018 #RahulGandhi #MKStalin
    சென்னை:

    சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம் மற்றும், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் இம்மாநிலங்களில் அடுத்த முதல் மந்திரிகள் யார்? என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இந்த வெற்றிக்காக ராகுல் காந்திக்கு  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ள பதிவில், ‘பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக நமது சிறப்புவாய்ந்த கூட்டணி நடத்திவரும் போருக்கு இந்த தேர்தல் முடிவுகள் வலிமை சேர்க்கும்’ என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். #AssemblyElections2018 #RahulGandhi #MKStalin
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். #RajatsthanAssemblyElections #Congress #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 



    இந்நிலையில், ராஜஸ்தானின் டோங்க் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் வெற்றி பெற்றுள்ளார்.

    இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யூனுஸ் கானை விட 54 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். #RajatsthanAssemblyElections #Congress #SachinPilot
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் 40 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றியடைந்தார். #RajatsthanAssemblyElections #Congress #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 



    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சர்தார்புரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் வெற்றி பெற்றுள்ளார்.

    இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷம்பு சிங்கை விட 40 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். #RajatsthanAssemblyElections #Congress #AshokGehlot
    பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரைவிட உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பா.ஜனதா சார்பில் 4 மாநிலத்தில் அதிக இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். #PMModi #BJP #YogiAdityanath
    லக்னோ:

    5 மாநில சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்தது. சத்தீஷ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாகவும், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடந்தது. ஓட்டு எண்ணிக்கை 11-ந்தேதி நடக்கிறது.

    இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கவும் அந்த கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

    பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரைவிட உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பா.ஜனதா சார்பில் 4 மாநிலத்தில் அதிக இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.



    யோகி ஆதித்யநாத் 74 பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளார். ராஜஸ்தானில் அதிகபட்சமாக 26 இடங்களில் பிரசாரம் செய்தார். மத்திய பிரதேசம்- 17, தெலுங்கானா -8, சத்தீஷ்கர்-23-ல் பிரசாரம் செய்தார்.

    பிரதமர் மோடி 31 இடங்களிலும் (மத்திய பிரதேசம்-10, ராஜஸ்தான்-12, தெலுங்கானா -5 சத்தீஷ்கர்-4) அமித்ஷா 56 இடங்களிலும் (மத்திய பிரதேசம்- 23, ராஜஸ்தான் -15, தெலுங்கானா -10, சத்தீஷ்கர்-8). இடங்களில் பிரசாரம் செய்தனர்.அமித்ஷா கூடுதலாக மிசோரம் மாநிலத்தில் 2 இடங்களில் பேசினார்.

    பா.ஜனதாவில் பிரசார பணியில் யோகி ஆதித்யநாத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. அவர் தனது பிரசாரத்தில் இந்துத்வா கொள்கை மற்றும் ராமர் கோவிலுக்கு முக்கியத்துவம் அளித்தார். #PMModi #BJP #YogiAdityanath
    ராஜஸ்தானில் 72.67 சதவீதமும், தெலுங்கானாவில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Rajasthan #Telangana #AssemblyElections #ElectionCommision
    புதுடெல்லி:

    தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 119 இடங்களை கொண்ட சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு  மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. 

    தெலுங்கானா மாநிலத்தில் 67 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இதேபோல், சட்டசபை தேர்தல் நடைபெற்ற மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 200 இடங்கள் கொண்ட சட்டசபையில் ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    மாலை 5 மணியுடன் நிறைவடைந்த ராஜஸ்தானில் 72.67 சதவீத  வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இங்கு பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. 

    இதற்கிடையே ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.  நாடாளுமன்ற கூட்டத்தொடரும் அன்றைய நாளில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rajasthan #Telangana #AssemblyElections #ElectionCommision
    5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். #BJP #AssemblyElections #RajnathSingh
    புதுடெல்லி:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சத்தீஷ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக கடந்த 12 மற்றும் 20-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது. மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு கடந்த 28-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 11-ந்தேதி நடக்கிறது.

    இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    5 மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் நாங்கள் 4 மாநிலங்களில் வெற்றி பெறுவோம். ராஜஸ்தானில் நான் பெரும்பாலான இடங்களில் பிரசாரம் செய்தேன். அங்கு பா.ஜனதாவுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதனால்தான் மாநிலத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    மத்தியபிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகானும், சத்தீஷ்கரில் ராமன்சிங்கும் தொடர்ந்து ஆட்சி அமைப்பார்கள். 4-வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்து சாதனை படைப்போம்.

    வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான மனநிலையில் உள்ளனர். நாட்டின் புகழ்பெற்ற தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #BJP #AssemblyElections #RajnathSingh
    ×