search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "administrators"

    • நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

    முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    அப்போது தமிழ்நாடு வாழ்க என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

    பின்னர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது,

    இப்போது தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றத் துடிக்கிறார்கள்.

    தமிழ்நாடு அரசின் இலச்சினை, தமிழ் ஆண்டு ஆகியவற்றை திட்டமிட்டு தவிர்க்கிறார்கள். தமிழர் திருநாள் அன்று 13000 பேர் எஸ்.பி.ஐ வங்கி தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு எம்.பி.க்கள் எவ்வளவோ போராடிய பிறகும் ஒன்றிய அரசு விடாப்பிடியாக தேர்வை நடத்துகிறது.

    இப்படி ஓணம் பண்டிகையின் போதோ, தசரா பண்டிகையின் போதோ நடத்த முடியுமா. அப்படியிருக்க பொங்கல் நாளில் நடத்துகிறார்கள் என்றால் இது தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் நடத்தப்படுகிற தாக்குதலாகும். இதற்கு நாம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    • தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது.
    • பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண் ராமநாதன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.

    தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கலையரசன், மாநகர பொருளாளர் காளையார் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நிரந்தர வருமானத்துக்கான வழிகள், வங்கிகடன் பெறுவது, அதனை திரும்ப செலுத்துவது எப்படி.
    • 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, கோவி ல்தேவராயன்பேட்டையில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு பயிற்சி மற்றும் பள்ளிக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடராஜா அரசு உதவிபெறும்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விவேகானந்தா சமூக கல்வி சங்க தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமொழிதமிழ்வாணன், தலைமை ஆசிரியர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உறுப்பினர் புனிதா அனைவரையும் வரவேற்றார்.

    இதில் விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர் தங்க.கண்ணதாசன், கலந்து கொண்டு மகளிர் சுய உதவிகுழு நிர்வாகிகளுக்கு ஆளுமை திறன், நிதிமேலாண்மை நிர்வாகம், மக்கள் தொடர்பு, தொழில் வேலைவாய்ப்பு , நிரந்தர வருமானத்துக்கான வழிகள், வங்கிகடன் பெறுவது, அதனை திரும்ப செலுத்துவது எப்படி , இன்சுரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு, வீடு,வாகனம்.

    கால்நடைகள், தனிநபர் காப்பீடு செய்வது எப்படி என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் முன்னோடி குழு நிர்வாகிகள் விஜி, வளர்மதி, கவிதேவி, தமிழரசி, சிவகாமசுந்தரி, கலா, ரமணி உள்பட 50 -க்கும் மேற்பட்ட மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நிகழ்ச்சியில் நடராஜா உதவிபெறும்பள்ளி வளர்ச்சிக்கு விவேகானந்தா சமூக கல்விசங்கம் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்கள் காசிராமன்,ராஜாங்கம்,களப்பணியாளர்கள் புனிதா, செல்வி,மணி. ராதிகா, லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் அ.தி.ம.மு.க. நிர்வாகிகள் ஈரோட்டில் ஆலோசனை நடத்தினர்.
    • ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.

     மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள், உயர்மட்டசெயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலைய செயலா ளர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி ஈரோட்டில் நடக்கிறது.கூட்டத்துக்கு அவைத்தலைவர் தாஜீதீன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் பூங்கா பி.கே.மாரி முன்னிலை வகிக்கிறார். துணைப் பொதுச்செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர்

    நெல்லை முத்துக்குமார் வரவேற்று பேசுகிறார்.

    கழக வளர்ச்சிகப்பணிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, தமிழக கவர்னரின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொ ன்பாண்டியன் பேசுகிறார்.

    ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது‌.

    • அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
    • சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேளாங்கண்ணி குடும்ப சமுதாய கூடத்தில் நடைபெ ற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.

    வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், தி.மு.க. செயலாளர் மரிய சார்லஸ், தமிழ்நாடு காதுகேளாளர் கூட்டமைப்புதலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செய லாளர் மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் மகளிர் சங்கம் தலைவர் ரிஸ்கில்லா, பொதுச் செயலாளர் தேவ்தா சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியினை தமிழ்நாடு கலை பண்பாட்டு காது கேளாதோர் சங்க சைகை மொழி பெயர்ப்பாளர் கேசவன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காது கேளாதோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நாகை மாவட்ட காதுகே ளாதோர் முன்னேற்ற சங்க தலைவராகசுகுமாரன், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக வைரமூ ர்த்தி, துணைத் தலைவராக லட்சுமணன், துணைச் செயலாளராக ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள் பதவி யேற்பு செய்து வைத்தனர்.

    • தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
    • பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரும், ஏற்கனவே திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்த இல.பத்மநாபன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில், மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் டாஸ்மாக் தொ.மு.ச. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர, மாவட்டங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம், ஈரோடு மாநகர செயலாளராக சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர, மாவட்டங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம், ஈரோடு மாநகர செயலாளராக சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் விவரம் வருமாறு:

    அவை த் தலைவர் - கே.குமார்முருகேஸ், செயலாளர் - சு. முத்துசாமி, துணைச் செயலாளர் (பொது) -ஆ.செந்தில் குமார், துணைச் செயலாளர் (ஆதிதிராவிடர்) - க. சின்னையன், துணை ச் செயலாளர் (மகளிர்) -அ. செல்லப்பொன்னி, பொருளாளர் - ப.க. பழனிச்சாமி.

    1. டி.எஸ்.குமாரசாமி, 2. ப.மணிராசு, 3.ராஜ் (எ) முருகேசன், 4.என். கொண்டசாமி,

    1.சி.கேசவன், 2.என்.டி. பத்மநாபன், 3.பி. கதிர்வேல் , 4.எம்.கோபால், 5.தா.மகாலிங்கம், 6.டி.ஜி.கே .பூபதி, 7.ஆர்.பொன்னுசாமி, 8. மு.பல்கீஸ்.

    மொடக்குறிச்சி கிழக் கு -வா.கதிர்வேல், மொடக்குறிச்சி மேற்கு - சு. குணசேகரன், மொடக்குறிச்சி தெற்கு - ஆர்.விஜயகுமார், கொடுமுடி வடக்கு - மு. சின்னசாமி, கொடுமுடி மே ற்கு - ப ா.நடராசன், பெருந்துறை வடக்கு - ப .சின்னசாமி, பெருந்துறை தெற்கு - கே.பி.சாமி, பெருந்துறை கிழக்கு - சி.பெரியசாமி, சென்னிமலை வடக்கு - பி.செங்கோட்டையன், ஈரோடு - டி.சதாசிவம்,

    ஊத்துக்குளி வடக்கு - செ.சுப்பிரமணியம், ஊத்துக்குளி தெற்கு - பி.பி.ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி மத்திய - வி.ராஜா.

    பள்ளபாளையம் - சு.தங்கமுத்து, வெ ள்ளோட்டம்பரப் பு - ப .சண்முகம், மொடக்குறிச்சி - பி.வி.சரவணன், அவல் பூந்துறை - அ.சண்முகசுந்த ரம், அரச்சலூர் - பி.கோவிந்தசாமி, வடுகபட்டி - த.விஸ்வநாதன், கொடுமுடி- எம்.ராஜாகமால்ஹசன், சென்னசமுத்திரம் - ப .உலகநாதன், வெங்கம்பூர் - என்.செந்தில்குமார், ஊஞ்சலூர் - ஊ.கோ.சுப் புரத்தினம், பாசூர் - எஸ்.ராமமூர்த்தி, கிளாம்பாடி - பி.விஸ்வநாதன், சிவகிரி - அ.கோபால், கொல்லன் கோவில் - பி.சந்திரசேகர், பெருந்துறை - ஒ.சி.வி.இராஜேந்திரன், கருமாண் டிசெல்லிபாளையம் - பி.எஸ்.திருமூர்த்தி,

    காஞ்சிக்கோவில் - கே கே.வி.பி.செந்தில் முருகன், பெத்தாம்பாளையம் - கே கே.பி.தங்கமுத்து, நல்லா ம்பட்டி - எம்.குருசாமி, சித்தோடு - சி.முத்துகிருஷ்ணன், நசியனூர் - கே.மோகனசுந்தரி, குன்ன த்தூர் - சி.சென்னியப்பன், ஊத்துக்குளி - கே.கே.இராசுக்குட்டி.

    அவைத் தலைவர் - இரா. சேகரன், செயலாளர் - மு. சுப்பிரமணியம், துணைச் செயலாளர் (பொது) - கு.நந்தகுமார், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) கே . சந்திரசேகர், துணை செயலாளர் (மகளிர்) இ. பாத்திமா, பொருளாளர் - ஜி. சண்முகம்

    சூரியம்பாளையம் - எஸ்.குமாரவடிவேலு, வீரப்பன்சத்திரம் - வி.சி. நடராஜன், பெரியசேமூர் - வி. செல்வராஜ், கோட்டை - இராமு (எ) பொ.ராமச்சந்திரன், சூரம்பட் டி - ஆ. முருகேச ன், பெரியார் நகர் -அக் னி சந்துரு (எ) ர.சந்திரசே கர், கொல்லம்பாளையம் - கா. லட்சுமணகுமார், கருங்கல்பாளையம் - குறிஞ்சி என். தண்டபாணி.

    அவைத் தலைவ ர் - ஏ. பெருமாள்சாமி, செயலாளர் - என்.நல்ல சிவம், துணை ச் செயலாளர் (பொது) -எம்.பி. அறிவானந்தம், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) - எஸ்.எஸ்.குருசாமி, துணை செயலாளர் (மகளிர்) - கீதா நடராஜன், பொருளாளர் - கே .கே . சண்முகம்,

    1.ஓ. சுப்பிரமணியம், 2.எஸ்.பி. புகழேந்தி, 3.வி.பி. சண்முகசுந்தரம், 4.எம்.எஸ். சென்னிமலை

    1.மு.சம்பத்குமார், 2.கா.கி.ராசேந்திரன், 3.ஆர்.மாதேஸ்வரன், 4.ஜெ யராஜ், 5.என். கிருஷ்ணமூர்த்தி, 6.எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி, 7.பி. சரஸ்வதி, 8.எஸ். கீதா

    பவானி வடக்கு - கே கே.எ.சந்திரசேகர் (எ) பவானி கே.ஏ.சேகர், பவானி தெற்கு - கே.பி.துரைராஜ், அம்மாபே ட்டை வடக்கு - கே.எஸ்.சரவணன், அம்மாபே ட்டை தெற்கு - எம்.ஈஸ்வரன், அந்தியூர் - ஏ.ஜி.வெங்கடாசலம், கோபிசெட்டிபாளையம் வடக்கு - கே .ரவீந்திரன், கோபிசெட்டிபாளையம் தெற்கு - எஸ்.ஏ.முருகன், தூக்கநாயக்கன்பாளை யம் - எம்.சிவபாலன், நம்பியூர் - பி.செந்தில்குமார், பவானிசாகர் வடக்கு - கே.எஸ்.மகேந்திரன், பவானிசாகர் தெற்கு - ந .காளியப்பன், சத்தியமங்கல ம் வடக் கு - ஐ.ஏ.தேவ ராஜ், சத்தியமங்கலம் தெ ற்கு - கே.சி.பி.இளங்கோ, தாளவாடி மேற்கு - டி.சிவண்ணா, தாளவாடி கிழக்கு - மா.நாகராஜ்

    பவானி - ப.சீ.நாகராசன், கோபிசெட்டிபாளையம் - என்.ஆர்.நாகராஜ், சத்தியமங்கலம் - ஆர்.ஜானகி, புன்செய்புளியம்பட் டி - பி.ஏ.சிதம்பரம்,

    ஜம்பை - ந.ஆனந்த குமார், ஆப்பக்கூடல் - கே .கோபாலகிருஷ்ணன், சலங்கபாளையம் - எஸ்.பழனிச்சாமி, அம்மாபே ட்டை - எஸ்.பெரியநாயகம், நெரிஞ்சிப்பேட்டை - என்.பி.கண்ணன், ஒலகடம் - ஒ.ஆர்.மகேந்திரகுமார், அந்தியூர் - எஸ்.காளிமுத்து

    அத்தாணி - ஏ.ஜி.எஸ்.செந்தில்கணேஷ், கூகலூர் - எஸ்.பி.ராஜாராம், பி.மேட்டுப்பாளையம் - எம்.எம்.குமாரசாமி, லக்கம்பட் டி- க.வே.சு.வேலவன், கொளப்பலூர் - ஆ.அன்ப ரசு, வாணிபுத்தூர் - கே .எஸ்.பழனிச்சாமி, பெரியகொடிவேரி - ஏ.ஆறுமுகம், காசிபாளை யம் - எம்.எம்.பழனிச்சாமி, நம்பியூர் - எஸ்.பி.ஆனந்த குமார், எலத்தூர் - சு.சண் முகம், பவானிசாகர் - டி.ஏ.மோகன், கெம்மநாயக்கன்பாளை யம் - கே.ரவிச்சந்திரன், அரியப்பம்பாளையம் - ஏ.எஸ்.செந்தில்நாதன்.

    திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக சி.பிரபு, மேற்கு ஒன்றிய செயலாளராக எஸ்.ஆர்.எஸ். செல்வம் (எ) தமிழ்செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    • நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 29ந் தேதி சைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
    • 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    சைமா சங்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 29ந்தேதிசைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் போட்டியிடும் பாலச்சந்தர் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. அதில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாலச்சந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக தொழில் சூழ்நிலைகளில் நடைபெற்று வரும் மாற்றங்களும்ஏற்படும் சிக்கல்களையும் களைவதற்கு சங்கத்தில் முனைப்புடன் கூடிய செயலாற்றும்திறன் அதிகமாக தேவைப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாகசங்கத்தில் பதவி வகித்து வரும் மூத்த உறுப்பினர்களில் பலர் தொழில் நிலையில் இருந்துவிலகி உள்ள காரணத்தினால் மாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வேண்டும் என்று எங்கள் அணி சார்பாக வேண்டுகோள்வைக்கப்பட்டது.

    ஆயினும் சங்கத்தின் செயற்குழு கூடி வழக்கம்போல் ஏற்கனவே உள்ளஅனைவரும் தங்கள் பதவியிலேயே தொடர்வார்கள் என தீர்மானித்தனர். எனவே நாங்கள்தேர்தலை எதிர்கொள்வதற்காக வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் ஏறத்தாழ25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.

    முன்னாள் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதாவது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அவர்களது செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதை முன்வைத்தும் பலர் தொழிலை விட்டு வெளியேறிய சூழ்நிலையிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வருவது தொழிலுக்கு தேவையான நன்மைகளை நிர்வாகிகளால் கோரிப் பெற முடியாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாற்றத்திற்கான அணியை உருவாக்கி தற்போது தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவராக நியமன அடிப்படையில் வைக்கிங் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணைத்தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.இவர் அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
    • மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அவினாசி

    திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு வருகை வந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி .ஆர். ஜி .அருண்குமார் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    இதில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வழிநெடுக மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மங்கலத்தில் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம். எஸ் .எம் .ஆனந்தன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

    • 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது.
    • மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி முன்னிலை வகிக்கிறார். பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் 13 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் யூனியன் மில் ரோட்டில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் இடத்தை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி, வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் சட்டைநாதர் சாமி தேவஸ்தானத்துடன் இணைந்த சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து

    சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

    விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி மகா தீபாராதணை நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், தம்பிராயன் சுவாமிகள், சிவசுப்பிரமணியன் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மன்ற உறுப்பினர்கள் முபாரக், ராஜேஸ், ஜெயந்தி பாபு, டாக்டர்.முத்துகுமார், சுபம் வித்யா மந்திர் பள்ளி செயலர் கியான் சந்த், தாளாளர் சுதேஷ் ரோட்டரி நிர்வாகிகள் சுசீந்திரன், சாமி செழியன், சுடர்.கல்யாணசுந்தரம், முன்னாள் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் உடனிருந்தனர்.

    • சிவகாசி தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இதே போல் துணை தலைவர்கள், துணைச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி மாநகரத்துக்கான தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    1-வது பகுதி அவைத்தலைவராக நாகேந்திரன், செயலாளராக செல்வம், பொருளாளராக சீனிவாச பெருமாள், 2-வது பகுதி அவைத்தலைவராக ராஜய்யா, செயலாளராக கருணாநிதி பாண்டியன், பொருளாளராக அண்ணாதுரை தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர்.

    3-வது பகுதி அவைத்தலைவர் சிவனேசன், செயலாளர் மாரீஸ்வரன், பொருளாளர் சின்னத்துரை, 4-வது பகுதி அவைத்தலைவராக மாரியப்பன், செயலாளராக அப்துல் முத்தலீப், பொருளாளராக சிவராம்குமார், 5-வது பகுதி அவைத்தலைவராக செல்வராஜ், செயலாளராக காளீராஜன், பொருளாளராக கார்த்திஸ்வரன், 6-வது பகுதி அவைத்தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஞானசேகரன், பொரு ளாளராக விஜ யகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல் துணை தலைவர்கள், துணைச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அறிவிப்பை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

    ×