search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகிகள்"

    • ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.
    • ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு


    தக்கலை, நவ.21-

    தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து பூக்கடை வரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.

    போலீசார் குறிப்பிட்ட நேரத்தை விட தொடர்ந்து அதிக கூட்டத்தை கூட்டி பொது தொல்லை கொடுத்து வருவதாக பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், ஆர்.எஸ்.எஸ். மண்டல பொறுப்பாளர் விசு மற்றும் மதுரை பகுதியை சேர்ந்த தென்மண்டல தலைவர் வன்னியநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 100 நாட்களில் 10,000 கொடி கம்பம் நடப்பட்டு பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும்
    • மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களிலும் இன்று பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது

    நாகர்கோவில் :

    சென்னையில் அண்ணா மலை தங்கி இருந்த வீட்டில் நடப்பட்டு இருந்த பா.ஜனதா கொடிக்கம்பத்தை போலீ சார் அகற்றினர்.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 நாட்களில் 10,000 கொடி கம்பம் நடப்பட்டு பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன் படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கொடி கம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும் என்று குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் தெரிவித்திருந்தார். ஆனால் பொது இடங்களில் கொடி யேற்றுவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களில் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கொடி ஏற்றப்படும் என்று மாவட்ட பொருளாளர் முத்துராமன் கூறியிருந்தார். அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் இன்று மாவட்ட பொருளாளர் முத்துராமன் வீட்டில் பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது.

    ஊட்டுவாழ் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். மாநில செயலா ளர் மீனா தேவ், மாவட்ட துணைத் தலைவர் தேவ், கவுன்சிலர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீதர், சந்திர சேகர், அனுசுயா, அஜித், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங் கப்பட்டது.

    இதே போல் மூவேந்த நகர் பகுதியில் மாநில செயலாளர் மீனாதேவ் கொடியேற்றி வைத்தார். கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் பா.ஜனதா நிர்வாகிகள் கொடி ஏற்றி வைத்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களிலும் இன்று பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது.

    • பேச்சிப்பாறை ஊராட்சி, திற்பரப்பு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    திருவட்டார் :

    குமரி மேற்கு மாவட்டம் திருவட்டார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குலசேகரத்தில் நடை பெற்றது. ஒன்றிய செயலா ளர் குற்றியார் நிமால் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் ஜெஸ்டின்ராஜ் முன்னிைல வகித்தார். அமைப்பு செயலாளர் சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசுதர்ஷன், ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் அண்ணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை ஊராட்சி, திற்பரப்பு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் கிளை செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் என 69 பேர் வீதம் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் இருக்க வேண்டும். இவர்கள் ஒவ்வொரு வீடுதோறும் சென்று அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    கட்சியின் பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யாரை வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கி றாரோ அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    பொய் வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    அனைத்து கட்சி நிர்வாகிகளும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் முழு மூச்சாக கட்சி பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றபட்டன.

    • அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் பூத்கமிட்டி அமைப்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட அமைப்பாளர்கள் ராஜரத்தினம், பூண்டி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சண்முகபிரபு, சுவாமிநாதன், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாளர் சத்தியராஜ், திருவையாறு சட்டமன்ற தொகுதி செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் மணிகண்டன், கவன்சிலர் சரவணன், கரந்தை பகுதி துணை செயலாளர் தாஸ், மாவட்ட தொழில்சங்க இணை செயலாளர் வீரராஜ், குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், நிர்வாகி ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய அரசு வக்கீல் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுருநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரவசாமி ஆகியோர் பேசினர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் நந்தகுமார், செல்லையாதேவர், சங்கர், சோமசுந்தரம், சற்குண பாண்டியன், கோபால், சிவகாசி ஷேக், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது.
    • சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    தென்தாமரைகுளம்:

    சாமிதோப்பு, கரும்பாட்டூர், வடக்கு தாமரைகுளம் ஆகிய ஊராட்சிகளின்தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் நம்பி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பேசினார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் சாமிதோப்பு தலைமைபதி குருவும், தி.மு.க.வக்கீலுமான ஜனா யுகேந்த், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர்கள் பொன் ஜான்சன், தமிழன் ஜானி, வடக்கு தாமரைகுளம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் பிள்ளை, மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், நிர்வாகி தாமரை பிரதாப், கரும்பை மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் விஜய் இலவச சட்ட மையம் தொடங்கப்பட்டது.
    • நிர்வாகிகள் ரசிகர்கள் பொதுமக்கள் பலர கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஏழை, எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறி ஞர்களை கொண்டு இலவச சட்ட மையம் என்ற புதிய திட்டத்தை நடிகர் விஜய் அறிவித்தார். இதையொட்டி பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து விரு துநகரில் இலவச சட்ட மையத்தை விருதுநகர் விஜய் மக்கள் இயக்கம் தொகுதி தலைவர் செல்வம், மாவட்டச் செயலாளர் சின்னப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த சட்ட மையத்தின் மூலம் குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை, விபத் தில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்வது,

    கந்து வட்டியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி உதவி செய்ய வேண்டும், கந்து வட்டி கொடுமையை முற்றிலும் ஒழிக்க பாடுபட வேண்டும், பள்ளி, கல்லூரி களில் மாணவ, மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும், ஏழை-எளிய மக்களின் அடிப்படை பிரச் சினைகளை நிரந்த தீர்வு காணுவதற்கும் இம்மை யத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் வழக்க றிஞர் அணி தமிழ்செல்வன், ரகு, ஒன்றிய செயலாளர் முத்து விஜய், விருதுநகர் நகர பொருளாளர் திவாகர், மாவட்ட தொண்டரணி துணைத் தலைவர் மூர்த்தி, ஒன்றிய தொண்டரணி சூர்யா, வார்டு தலவைர் ரஞ்சித், ஒன்றியத் தலைவர் மாரித்தங்கம் இளைஞர் அணி நிர்வாகி ஜோட் என்ற அஜித், மகராஜா, சுரேஷ், கார்த்திக், முனியசாமி, முரளி உள்பட பல்வேறு நிர்வாகிகள் ரசிகர்கள் பொதுமக்கள் பலர கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சம் 100 மருத்துவ மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார்.

    முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி அனைவரையும் வரவேற்றார்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் குணசேகரன், காப்பாளர்கள் ஜெயராமன் அய்யனார், தலைமை அமைப்பாளர் குருசாமி, மாவட்ட தலைவர்கள் நிம்மதி வீரையன், மாவட்ட செயலாளர்கள் சிதம்பரம், துரைராஜ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராமப்புற பிரச்சார மாநில அமைப்பாளர் அன்பழகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    முடிவில் தஞ்சை மாநகர தலைவர் நரேந்திரன் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது
    • கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட வீடியோ, போட்டோகிராபர்ஸ் சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார். பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து சங்கப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு, சங்கத்தின் வரவு - செலவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட வீடியோ போட்டோகிராபர்ஸ் சங்க புதிய தலைவராக எம். கார்த்திகேயன், செயலாளராக இளங்கோ, பொருளாளராக வில்லியம், துணைத்தலைவர்களாக கதிர்வேல், சுப்பிரமணிய சிவா, துணைச்செயலாளர்களாக சரவணன், சண்முகசுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ரமேஷ், சுப்பிரமணி, வேணுகோபால், பழனிச்சாமி ,ஜீவானந்தம் ,முருகநாதன், ஜெயபாலன் மற்றும் பலர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு திருப்பூர்,பல்லடம்,அவிநாசி, காங்கேயம், தாராபுரம் ,உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டோகிராபர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், ரமணிரோஸ், விஜயன், ஏசு ரெத்தினராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜாண்லீபன், பேரூர் செயலாளர்கள் சுஜெய் ஜாக்ஸன், சேவியர் ஏசுதாஸ், ராஜூலின் ராஜகு மார், சகாய கிறிஸ்துதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெய சீலன், வைகுண்டதாஸ் உட்பட பலர் கலந்துகொண்ட னர். நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா நன்றி கூறினார்.

    கூட்டத்தில் இளைஞர் அணியினரை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோச னைகள் வழங்க குமரிக்கு வருகை தரும் இளைஞரணி செயலாளரும், அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சியில் திரளான இளை ஞர்கள் கலந்துகொள்வது. டிசம்பர் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது, போக்குவரத்து சுங்கச்சாவடி கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரி வித்துக்கொள்வது, மந்தமாக நடந்து வரும் நெய்யூர்-பரம்பை ரெயில்வே மேம்பால பணியால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே தண்டவாள விரிவாக்கம் மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தென்னக ரெயில்வே துறையை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • விருதுநகர் முழுதும் தி.மு.க. கரை வேட்டி கட்டிய நிர்வாகிகள், தொண்டர்களாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
    • அமைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் வடக்கு மற் றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அவை தலைவர்கள் தங்க–ராஜ், செல்வமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விருதுநகருக்கு வருகிற 6-ந்தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் பேசியதா–வது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 6-ந்தேதி விருதுநகர் வருகை தர உள்ள நிலையில் அன்றைய தினம் விருதுநகர் முழுவதும் தி.மு.க. கரை வேட்டி கட்டிய தொண்டர்கள், நிர்வாகிகள் இருக்கும் நிலையை ஏற்ப–டுத்த வேண்டும். மேலும், அன்று காலை 9 மணிய–ளவில் சூலக்கரை மேட்டில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அவரை வரவேற்ப–தற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் திர ளாக பங்கேற்க வேண்டும்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்பு மாலை கழக முன் னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய தாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகருக்கு வருகை தருகிற 6-ந்தேதிதான் நமக்கெல்லாம் தீபாவளி. அவரது வருகையை நாம் எல்லோரும் திருவிழாவாக கொண்டாடும் வகையில் அமைய வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையி–ல் தாமிரபரணி நதிக்கரையில் தி.மு.க. இளைஞரணி முதல் மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் சேலத்தில் 2-வது தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய நம்மை தயார்படுத்த தான் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், தனுஷ்குமார் எம்.பி., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன் மற்றும் விருதுநகர் நகராட்சி தலை–வர் மாதவன் உள்ளிட்ட நகரசபை தலைவர்கள், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் உள்ளிட்ட யூனியன் தலைவர்கள், பேரூராட்சி தலை வர்கள், நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்று பெறும்.
    • கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வல்லம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி வல்லம் பேரறிஞர் அண்ணா சீரணி கலையரங்கில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது.

    தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை தெற்கு ஒன்றியம், மற்றும் வல்லம் பேரூர் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணைத் தலைவரு மான அருளானந்த சாமி வரவேற்றார்.தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்.

    டி.கே.ஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம் .ராமச்சந்திரன் து.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்று பெறும் என பேசினார்.

    இதில் மாநில நிர்வாகிகள் இறைவன், எல்.ஜி அண்ணா,தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி சிங்.இரா.அன்பழகன்,சுந்தர்ராஜ், துணை செயலாளர் கோவிந்த ராஜ், ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் வல்லம் நகர செயலாளர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார்.

    ×