search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகி"

    • கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.
    • பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் கோட்டாலி பகுதியை சேர்ந்தவர் சாஜிமோன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.

    அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேறு ஒரு நபர் ஈடுபட்டது போன்று, வழக்கை திசை திருப்பவும் முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போனது. சாஜிமோன் மீதான பாலியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். மேலும் கோட்டாலி பிரிவு கிளைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சாஜிமோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஊழியராக இருந்துவரும் பெண் ஒருவரை நிர்வாண படம் எடுத்த வழக்கில் சிக்கினார்.

    இதையடுத்து அவர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அலங்காநல்லூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், சரவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், நகர் செயலாளர்கள் அழகு ராஜ், குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், நிர்வாகிகள் குமார், மனோகரன், முத்துகிருஷ்ணன், மதன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதிய ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு
    • இந்திய தண்டனை சட்டம் 341, 294 (பி) 506 (1), பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு

    நாகர்கோவில் :

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. நாகர்கோ வில் அருகே உடையப்பன் குடியிருப்பில் கலைஞர் உரிமை திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் கோலமிட்டார்.

    அப்போது தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஜெனஸ் மைக்கேல் மற்றும் அம்மு ஆன்றோ ஆகியோ ரும் அங்கே வந்தனர். சாலையில் கோல மிட்டதற்கு அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ராஜேஷ் உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்டம் முழுவதும் பெரும் பரப ரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்ட ரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல் தலை மையில் ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் சுசீந்திரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தனர்.

    அந்த புகாரில் கடந்த 15-ந்தேதி தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் தொண் டர்கள் இணைந்து உடையப்பன் குடியிருப்பில் தி.மு.க. தொண்டர் வீட்டின் முன்பு கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

    அப்போது உடையப்பன் குடியிருப்பை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர், கலைஞர் உரிமைத்தொகை திட்டம் என்று போடப்பட்ட கோலத்தை அழிக்க முயன்றதுடன் எங்களை மிரட்டினார்கள்.

    மேலும் அரசு வழங்கிய நிதி உதவியையும் கொச் சைப்படுத்தி பேசினார் கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி, உடையப்பன் குடியிருப்பை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

    இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294 (பி) 506 (1), பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

    • ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார். இவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதானதையடுத்து தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது கட்சியின் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் ராஜ்மோகன்குமார் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஸ்வகர்மா சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • சங்க தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூர் சந்தைப் பேட்டையில் விஸ்வகர்மா சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஆறுமுகம் ஆசாரி, கோவில் பூசாரி தனபாலன், நிர்வாக குழு மூத்த உறுப்பினர் சண்முகம், கேசவன் முன்னிலை வகித்தனர். கோவிலின் செயலாளர் கேசவராஜா, பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் சக்திவேல் முருகன், துணைச் செயலாளர் பிச்சை பாண்டி, இளைஞரணி செயலாளர் நளன், மகளிரணி செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலூர் விஸ்வகர்மா சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவிலில் வருகிற ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    • பரமக்குடியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி முன்னிலையில் அ.ம.மு.க. பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏழுமலையான், பரமக்குடி தெற்கு நகர் செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ராஜீவ்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் தங்கமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் குணசேகரன்.

    மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராஜா, அவைத்தலைவர் சங்கிலி, இணைச் செயலாளர் வனிதா தேவி, நிர்வாகிகள் உஷா, அர்ஜு னன், கிருஷ்ண பரமாத்மா, முனியசாமி, செல்வி, சசிகலா, கணேசன், பூமி நாதன், சிங்கம்துரை, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரகு வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தையா, பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, மாவட்ட துணைச் செய லாளர் பாதுஷா, பரமக்குடி நகரச்செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் தங்கவேலு.

    ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், காட்டுப் பரமக்குடி வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

    • கூலி தொழிலாளியை தாக்கிய தி.மு.க நிர்வாகியின் மகன் கைது செய்யப்பட்டார்.
    • வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படும் விஜய சேகர், தி.மு.க வட்ட செயலாளராக உள்ளார்.

    மதுரை

    மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கூலிதொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் சேகர் குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்தது.

    இது தொடர்பாக சுப்பிர மணியபுரம் போலீஸ் நிலை யத்தில் வழக்கு உள்ளது.

    நேற்று மாலை மணிகண்டன் வீட்டில் இருந்தார். அங்கு வந்த விஜய் சேகர் குடும்பத்தினர் அவரை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த விஜயபாபுவை (37) கைது செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக இவரது தந்தை விஜய சேகர் மற்றும் விஜயபாஸ்கர் உள்பட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணி கண்டனை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படும் விஜய சேகர், தி.மு.க வட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் பேரூராட்சி பாரதிய ஜனதா கவுன்சிலரும், பாரதிய ஜனதா மாவட்ட ஐ.டி பிரிவு துணைத் தலைவருமான சுபாஷ் முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நேற்று மாலை தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை தாங்கினார். தென்தா மரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப், ஒன்றிய பாரதிய ஜனதா பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், பேரூர் தலைவர் தாமரைபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஸ்ரீ குரு சிவச்சந்திரன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், பாஜக பொரு ளாதார பிரிவு மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

    போராட்டத்தில் மைலாடி பேரூர் தலைவர் பாபு, தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாய், பாமா, மேனகா, அமுதா, பாரதிய ஜனதா நிர்வாகிகள் ராஜகுமாரன், சந்திரசேகர், சிவகுமார், முத்துகிருஷ்ணன், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
    • முன்னதாக விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் நேர்காணல் இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. விவசாய அணி அமைப்பாளரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான விஜயன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முன்னதாக நடந்த விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், துணைச் செயலா ளர் பூதலிங்கம், மாநகரச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், பிராங்க்ளின், மதியழ கன், லிவிங்ஸ்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ. என். சங்கர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 19-ந் தேதி கரை திரும்பாதவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மீனவர்களின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
    • அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மாயமான மீனவர்களை மீட்டு கரை சேர்த்தது

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கீழ கடிய பட்டணத்தை சேர்ந்தவர் எட்வின் ஜெனில் (வயது 34). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி பிற்பகல் வழக்கம்போல் கடியபட்டணத்தை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளர்கள் சார்லஸ் எட்வின் (45), பிரான்சிஸ் (71), ஜோசப் (63), சகாய பெனின் (33) ஆகியோருடன் எட்வின் ஜெனில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். மறுநாள் 19-ந் தேதி கரை திரும்ப வேண்டும். ஆனால் கரை திரும்பவில்லை. அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மேற்கூறிய மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்தது.இரவு 5 மீனவர்களும் பத்திரமாக கரை சேர்ந்தனர்.

    கரை திரும்பிய மீன வர்களை தி.மு.க.மாநில மீனவர் அணி இணை செயலாளர் நசரேத் பசலியான், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் நேற்று கடியபட்டணம் சென்று சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆறுதல் கூறினர்.

    • கடந்த 2010-ம் ஆண்டு அத்தனூர்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை, காரிப்பட்டி அருகே வைத்து கொலை செய்ததாக காரிப்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
    • போலீசார், பாண்டியன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற பாண்டியன், வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் என்கிற திருமுருக வீரபாண்டியன் (வயது 50). தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், கடந்த 2010-ம் ஆண்டு அத்தனூர்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை, காரிப்பட்டி அருகே வைத்து கொலை செய்ததாக காரிப்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

    சாட்சியை மிரட்டினார்

    இந்த வழக்கில் செந்தில்குமாரின் சகோதரரான சேட்டு என்கிற செல்வராஜ், பாண்டியனுக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் சாட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் வாழப்பாடி போலீசார், பாண்டியன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற பாண்டியன், வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, பனங்காடு அருகே சென்று கொண்டிருந்த செல்வராஜ் மகன் கர்ணா (25) என்பவரை வழிமறித்த பாண்டியன், எனக்கு எதிராக சாட்சி சொன்ன உனது தந்தையை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கர்ணா, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    கைது

    இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாண்டியனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
    • பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரும், ஏற்கனவே திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்த இல.பத்மநாபன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில், மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் டாஸ்மாக் தொ.மு.ச. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    ×