search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "administrator"

    • அலங்காநல்லூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், சரவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், நகர் செயலாளர்கள் அழகு ராஜ், குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், நிர்வாகிகள் குமார், மனோகரன், முத்துகிருஷ்ணன், மதன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.சுந்தர பாண்டியனை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்து உத்தர விட்டுள்ளார்.

    இவர் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்

    • ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார். இவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதானதையடுத்து தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது கட்சியின் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் ராஜ்மோகன்குமார் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஸ்வகர்மா சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • சங்க தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூர் சந்தைப் பேட்டையில் விஸ்வகர்மா சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஆறுமுகம் ஆசாரி, கோவில் பூசாரி தனபாலன், நிர்வாக குழு மூத்த உறுப்பினர் சண்முகம், கேசவன் முன்னிலை வகித்தனர். கோவிலின் செயலாளர் கேசவராஜா, பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் சக்திவேல் முருகன், துணைச் செயலாளர் பிச்சை பாண்டி, இளைஞரணி செயலாளர் நளன், மகளிரணி செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலூர் விஸ்வகர்மா சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவிலில் வருகிற ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    • புதிய தி.மு.க. நிர்வாகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    • செயலாளராக குருவித்துறை பசும்பொன்மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சோழவந்தான்

    தமிழகம் முழுவதும் புதிதாக தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக குருவித்துறை பசும்பொன்மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு சோழவந்தான் பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின், பேரூர் இணைச் செயலாளர் செல்வராணி ஜெயராமச்சந்திரன், முத்து செல்வி சதீஷ், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், செந்தில், ஊத்துக்குளி செந்தில், கவுன்சிலர்கள் உள்பட பலர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து நிர்வாகியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Sarathkumar
    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட கிச்சா ரமேஷ், குணசேகரன், கிரிபாபு ஆகியோருடன் சேர்ந்து கட்சிக்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் எண்ணத்துடன் தவறாக பேசிவரும் முன்னாள் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.சி.ஆர்.ராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார்.
    அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சிப் பணிகள் ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Sarathkumar
    ×