search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMIN"

    • பரமக்குடியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி முன்னிலையில் அ.ம.மு.க. பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏழுமலையான், பரமக்குடி தெற்கு நகர் செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ராஜீவ்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் தங்கமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் குணசேகரன்.

    மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராஜா, அவைத்தலைவர் சங்கிலி, இணைச் செயலாளர் வனிதா தேவி, நிர்வாகிகள் உஷா, அர்ஜு னன், கிருஷ்ண பரமாத்மா, முனியசாமி, செல்வி, சசிகலா, கணேசன், பூமி நாதன், சிங்கம்துரை, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரகு வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தையா, பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, மாவட்ட துணைச் செய லாளர் பாதுஷா, பரமக்குடி நகரச்செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் தங்கவேலு.

    ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், காட்டுப் பரமக்குடி வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

    • விநாயகர்கோவில் கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீனம் பங்கேற்றனர்.
    • சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகர்கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி விநாயகர் பூஜை, எந்திர ஸ்தாபனம், கலச ஸ்தாபனம் யாகசாலை பூஜை ஆகியவை நடந்தன.

    அதன்பின்னர் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு யோகினியர் லலிதா மகிளா சமாஜம் சுவாமிகள் கணபதி ஹோமத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மங்கல வாத்திய நிகழ்ச்சி மற்றும் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, சுதர்சன பூஜை லட்சுமி ஹோமம், தீப வழிபாடு நடைபெற்றது.

    மாலை வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மகாபூர்ண ஹூதி வழிபாட்டுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மதுரை ஆதீனம் ஞா னசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆதி வழி விடு விநாயகர் கோவில் அர்ச்சகர் சோமசுந்தரம் பட்டர், கார்த்திக் சாஸ்திரிகள் கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் அழங்க ப்பட்டது. பின்னர் மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர்கோவில் நிர்வாகத்தினர், சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×