தென்தாமரைகுளத்தில் பாரதிய ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்தது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர் 
Published on

கன்னியாகுமரி:

தென்தாமரைகுளம் பேரூராட்சி பாரதிய ஜனதா கவுன்சிலரும், பாரதிய ஜனதா மாவட்ட ஐ.டி பிரிவு துணைத் தலைவருமான சுபாஷ் முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நேற்று மாலை தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை தாங்கினார். தென்தா மரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப், ஒன்றிய பாரதிய ஜனதா பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், பேரூர் தலைவர் தாமரைபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஸ்ரீ குரு சிவச்சந்திரன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், பாஜக பொரு ளாதார பிரிவு மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

போராட்டத்தில் மைலாடி பேரூர் தலைவர் பாபு, தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாய், பாமா, மேனகா, அமுதா, பாரதிய ஜனதா நிர்வாகிகள் ராஜகுமாரன், சந்திரசேகர், சிவகுமார், முத்துகிருஷ்ணன், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com