search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்ட"

    • ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை
    • இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 80.89 அடியாக உயர்ந்துள்ளது

    ஈரோடு

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பலத்த மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக பவா னிசாகர் அணையின் நீர்ம ட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 80.89 அடியாக உயர்ந்துள்ளது. இன்று மதிய த்திற்குள் 81 அடியை எட்டி விடும். அணைக்கு வினாடி க்கு 3 ஆயிரத்து 56 கன அடி யாக நீர் வந்து கொண்டி ருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து பாசன த்திற்கு தண்ணீர் மீண்டும் நிறுத்த ப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளில் பரவ லாக மழை பெய்து வருவ தால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகி றது. குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 4.72 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.86 அடியாகவும் உள்ளது.

    • கொடுமுடி மகுடேஸ்வரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது.
    • பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

    கொடுமுடி:

    ஜப்பசி மாதம் பவுர்ண மியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா நடந்தது.

    கொடுமுடி மகுடேஸ்வ ரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் மகுடேஸ்வர ருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷே கம் நடந்தது.

    இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகுடே ஸ்வரரை வழிபட்டனர். பின்னர் கோவில் அர்சகர் பிரபு குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடுகள் நடத்த ப்பட்ட பின்னர் காவிரி ஆற்றில் அர்ப்பணம் செய்ய ப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

    பெருந்துறை வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷக விழாவை முன்னிட்டு மாலை விநாயகர் வழிபாடு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமிக்கு அன்னம் அபி ேஷகமும், இரவு மகாபிேஷ கம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்ய அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்தது.

    சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர் திருமேணி 50 கிலோ அரிசி மற்றும் 30 கிலோ காய்கறி, பட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாசநாதருக்கு பூஜைகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதே போல் சென்னி மலை அடுத்துள்ள முருங்கத்தொழுவில் உள்ள மிக பழைமையான மேற்கு பார்த்த பிரமன் பூஜித்த தலமான ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது.

    கைலாசநாதர் திருமேணி 25 கிலோ அரிசி மற்றும் 20 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு பூஜைகள் நடந்தது.

    புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில், சுப்பிரமணியர், கோவில், காமாட்சி அம்மன் கோவில், மருந்தீஸ்வரர், நாகநாதர் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் சிவபெரு மான் மற்றும் அம்மைக்கு அன்னாபிஷே சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் அன்னத்தினால் தெய்வங்களை அலங்க ரிக்கப்பட்டு காய்கறி, பழங்க ளால் மாலை அணிவிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

    தொடர்ந்து பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பத்தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள உலக புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் பவுர்ணமி யையொட்டி நேற்று அதி காலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிர் இளநீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவி யங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

    இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

    இதில் பவானிசாகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.
    • பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

    இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கி றார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் பள்ளி காலாண்டு தேர்வு விடு முறை விடப்பட்டுள்ளது. மேலும் மிலாது நபி, சனி க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 4 நாட்களாக மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

    தொடர் விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    நேற்று (சனிக்கிழமை) மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்தும் பொது மக்கள் ஏராள மானோர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளி த்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொடிவேரிக்கு வழக்கத்ைத விட பொதுமக்கள் அதிகள வில் வந்தனர்.

    மேலும் இன்று வெளி மாவட்டங்களில் இருந்து கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் இருந்து கொடிவேரிக்கு ஏராள மானோர் வந்திருந்தனர். காலை முதலே கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.

    ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்த னர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.

    இதே போல் சத்தியமங்க லம் அருகே உள்ள பவானி சாகருக்கு இன்று பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இைத தொடர்ந்து குடும்பத்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இயற்கையை ரசித்து சென்ற னர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர்.

    இதனால் பவானிசாகர் பகுதியில் இன்று எங்கு பார்த்தாலும் பொது மக்க ளின் கூட்டமாவே காண ப்பட்டது. மேலும் இன்று அணை பூங்காவின் வெளி பகுதியில் மீன் மற்றும் பல்வேறு கடைகள் அமைக்க ப்பட்டு இருந்தன. அங்கும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரியம்மன் கோவில் என கோபி, சத்தியமங்கலம் சுற் வட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் எங்கு பார்த்தாலும் மக்க ளின் கூட்டமாக காணப்பட்டது.

    இதே போல் அந்தியூர் வரட்டுபள்ளம் அணை பகுதிக்கும் பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். அங்கு இயற்கை அழகை ரசித்து சென்றனர்.

    மேலும் பர்கூர் வன ப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் ஏராள மானோர் வந்திருந்தனர். இரு சக்கர வாகனங்களில் வந்த அவர்கள் மலைப்பகுதி யின் அழ கை ரசித்து விட்டு சென்ற னர்.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா விலும் இன்று மக்களின் கூட்டம் அதிகளவில் இரு ந்தது. குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி குதுகளித்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தனர்.

    • அணை போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    • கொடிவேரி அணைப்பகுதியில் 29 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், குண்டேரிபள்ளம், பவானிசாகர், கொடிவேரி அணை போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப்பகுதியில் 29 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேப்போல் பவானிசாகர் அணை, குண்டேரி பள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இது தவிர அம்மாபேட்டை சத்தியமங்கலம், கோபி, பவானி, பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    கொடிவேரி-29, பவானி சாகர்-22.80, அம்மா பேட்டை-18, சத்திய மங்கலம்-16, எலந்தகுட்டை மேடு-7, கோபிசெட்டி பாளையம்-5.20, குண்டேரி பள்ளம்-2.40, பவானி-1.40.

    • அணைக்கு வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி,

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1055 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 26.29 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.16 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.51 அடியாக உள்ளது.
    • குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.48 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.51 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1205 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 500 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மற்ற அணைகளிலும் நீர்வரத்து குறைந்து வருவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 27.48 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 19.59 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது. 

    • மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.
    • காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதே நேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 163 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதைப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.65 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.51 அடியாக உள்ளது.

    இதைப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 23.92அடியாக உள்ளது. மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவது குறிப்பிட த்தக்கது.

    • பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

    ஈரோடு,

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 81.43 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 368 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.98 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக குண்டேரி பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

    இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.54 அடியாக உள்ளது. இதேப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 24.15 அடியாக உள்ளது.  

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.24 அடியாக உள்ளது.
    • வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.24 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,619 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.54 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.21 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.83 அடியாக உள்ளது.
    • குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் 35.54 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.83 அடியாக உள்ளது. அணை க்கு வினாடிக்கு 968 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.54 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.21 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.57 அடியாக உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது.
    • குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 35.54 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,061 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.54 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.24 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.57 அடியாக உள்ளது. 

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 954 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதேப்போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 954 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.87 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.31 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 25.49 அடியாக உள்ளது.

    ×