ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.அணையில் இருந்து பாசனத்திற்காக 1,050 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,054 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 900 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 1,050 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.56 அடியாக உள்ளது.

30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.51 அடியாக உள்ளது.

33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.79 அடியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com