search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Erode district"

    • ஈரோடு மாவட்டத்தில் 1,271 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் கார்டுகள் உள்ளன.
    • இவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.

    ஈரோடு:

    ஒரே நபர் இரு ரேஷன் கார்டு வைத்திருப்பதும், ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டில் பயனாளிகளாக இருப்பதை தவிர்க்கவும், ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பி னர்களின் அனை வரது ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1,271 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் கார்டுகள் உள்ளன.

    இதில் அரிசி கார்டு 6 லட்சத்து 72 ஆயிரத்து 670. அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் 66,235 ஆகும். காவலர் கார்டுகள் 1,572 ஆகும். சர்க்கரை கார்டு 18, 181 ஆகும்.

    முதியோர் அரிசி கார்டு 4,794 ஆகும். அன்னபூர்ணா அரிசி கார்டு 23 ஆகும். எந்த பொருளும் வேண்டாம் என்பவர்களுக்கான கார்டு 1,346 ஆகும்.

    இந்த காடுகளில் 20 லட்சத்து 81 ஆயிரத்து 780 உறுப்பினர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.

    இவர்களின் விபரத்தை சேகரித்து இணைக்கும் முயற்சியில் வட்ட வழங்கல் அலுவலர்க ள் ஈடுபட்டுள்ளனர். ஒரு வேளை அவர்களின் பெயர் வேறு கார்டில் இருந்தா லும், அவர் இறந்திருந்தாலும் விரைவில் பெயர் நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • வெ ள்ளோடு அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • அமைச்சர் சு.முத்துசாமி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மா ணவிகளுக்கு அனைத்து பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செ யல் படுத்தப்பட்டு வருகிறது.

    முதல்கட்டமாக மாநகரா ட்சி மற்றும் கிராமப்புறங்கள், மலைக் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்ப ட்டது. மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டம் படிப்படியாக தமிழ கம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    அதன்படி இன்று (25-ந் தேதி) முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்த ப்பட்டது.

    அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம், சென்னிம லை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெ ள்ளோடு அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், "இத்திட்டமானது முதல்கட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் மலைக்கி ராமங்களில் உள்ள தொடக்க ப்பள்ளிகள் என 96 பள்ளிகளில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் 8 ஆயிரத்து 903 மாணவ, மா ணவிகள் பயன்பெற்று வருகி ன்றனர். இந்நிலையில் மாவ ட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இன்று முதல் விரிவுபடுத்தப்ப ட்டுள்ளது.

    இதன்மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 983 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 42 ஆயிரத்து 848 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,079 அரசு தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 51 ஆயிரத்து 751 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்" என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், கலெ க்டர் ராஜகோபால் சுன்கரா, துணை கலெக்டர் மணீஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, சென்னி மலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் காயத்திரி இளங்கோ மற்றும் கல்வித்துறை அலுவ லர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொ ண்டனர்.

    • அணைக்கு வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி,

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1055 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 26.29 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.16 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.51 அடியாக உள்ளது.
    • குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.48 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.51 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1205 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 500 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மற்ற அணைகளிலும் நீர்வரத்து குறைந்து வருவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 27.48 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 19.59 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது. 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.83 அடியாக உள்ளது.
    • குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் 35.54 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.83 அடியாக உள்ளது. அணை க்கு வினாடிக்கு 968 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.54 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.21 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.57 அடியாக உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது.
    • குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 35.54 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,061 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.54 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.24 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.57 அடியாக உள்ளது. 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது.
    • பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.57 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,422 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 600 கன அடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 3,750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.86 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.57 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.57 அடியாக உள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 24,460 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 458 பேர் என மொத்தம் 24,918 பேர் எழுதினர்.
    • தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 1500 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 24,460 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 458 பேர் என மொத்தம் 24,918 பேர் எழுதினர்.

    முதல்நாளான இன்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை நேரடி பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு 105 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுத 3 தேர்வு மையங்கள் என மொத்தம் மாவட்ட–த்தில் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    வினாத்தாள்கள் 7 கட்டு காப்பு மையத்தில் வைத்து சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இன்று காலை மாணவ- மாணவிகள் சீக்கிரமாக எழுந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளிக்கு சென்று சிறிது நேரம் மீண்டும் படித்தனர். இதனை அடுத்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு தேர்வு எழுத சென்றனர்.

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடங்கள் வினா தாளை படிப்பதற்கும் அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.

    தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 1500 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இது தவிர 150 பேர் கொண்ட 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    அவர்கள் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஸ்கிரைப் 250 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருந்தது.

    விடைத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதற்காக மாவட்டத்தில் 4 பாதுகாப்பு மையம் அமைக்கப்ப–ட்டுள்ளது. விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    இதைத் தொடர்ந்து பிளஸ்-1 பொதுத் தேர்வு நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்தத் தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 946 மாணவ- மாணவிகளும், 496 தனி தேர்வர்களும் என மொத்தம் 22,442 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்.

    பள்ளி மாணவ- மாணவிகளுக்காக 105 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்காக மூன்று தேர்வு மையங்கள் என மொத்தம் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    • 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
    • வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத் தேர்வு வரும் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 105 மையங்களில் 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதேப்போல் பிளஸ்-1 பொதுத்தேர்வை 22,442 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    தனித் தேர்வர்களுக்கு கூடுதலாக 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் வந்தடைந்தது.

    இந்த வினாத்தாள்களை ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பணியை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் பார்வையிட்டார்.

    ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பொது தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    மேலும் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் மற்ற இடங்களில் வைக்கப் பட்டுள்ள வினாத்தா ள்களின் அறைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான அனைத்து பாட வினாத்தாள்கள், பிளஸ்-1 தேர்வுக்கான 3 பாட வினாத்தாள்கள் வந்து விட்டதாகவும், மீதமுள்ள பாடத்துக்கான வினாத்தாள்களும்,

    எஸ்.எஸ். எல். சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்களும் விரைவில் வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.
    • கடந்த ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.

    இதில் கோபி, ஈரோடு அரசு மருத்துவமனையில் மினி ஐ.சி.யு என்று அழைக்கப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கு என்று தனியாக 2 108 ஆம்புலன்ஸ்கள் உயர் ரக மருத்துவ குழுவினருடன் தயாராக உள்ளது.

    இதேப்போல் மூன்று 108 வாகனங்கள் செயற்கை சுவாச வசதியுடன் ஈரோடு, பெருந்துறை, கோபி மருத்துவமனையில் தயாராக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக இந்த வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 48,665 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 57,472 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய 8,587 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி பெற்றனர்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 10,839 பேர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவ உதவி பெற்றுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 10,430 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தி உள்ளனர்.

    2022-ம் ஆண்டு 16,800 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு 108 ஆம்புலன்சில் 41 பிரசவம் நடந்துள்ளது. 2022-ம் ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது. மாவட்ட முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

    கிராமம், மலை பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 14 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்து விடும். இதே நகர பகுதியில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 8 நிமிடத்திற்குள் வந்துவிடுகிறது. 

    • சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.
    • தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்ப ட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டு ள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.

    கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர் களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு 1,091.04 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையிலும் நீர் இருப்பு முழு அளவில் உள்ளது.
    • ரசாயன உரங்களான யூரியா – 4,732 டன், டி.ஏ.பி., – 2,321 டன், பொட்டாஷ் – 2,437 டன், காம்ப்ளக்ஸ் – 11,624 டன் இருப்பில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்கு னர் சின்னசாமி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு 1,091.04 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையிலும் நீர் இருப்பு முழு அளவில் உள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் வரை, 75,745 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்க ளும், 45,634 எக்டர் தோட்ட க்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 42 டன், சிறுதானியங்கள், 16 டன், பயறு வகைகள், 17 டன், எண்ணை வித்துக்கள், 42 டன் இருப்பில் உள்ளன.

    ரசாயன உரங்களான யூரியா – 4,732 டன், டி.ஏ.பி., – 2,321 டன், பொட்டாஷ் – 2,437 டன், காம்ப்ளக்ஸ் – 11,624 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு இடு பொருட்களான விதைகள், உரங்கள் இருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    ×