search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 105 மையங்களில் நடக்கிறது
    X

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 105 மையங்களில் நடக்கிறது

    • 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
    • வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத் தேர்வு வரும் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 105 மையங்களில் 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதேப்போல் பிளஸ்-1 பொதுத்தேர்வை 22,442 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    தனித் தேர்வர்களுக்கு கூடுதலாக 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் வந்தடைந்தது.

    இந்த வினாத்தாள்களை ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பணியை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் பார்வையிட்டார்.

    ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பொது தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    மேலும் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் மற்ற இடங்களில் வைக்கப் பட்டுள்ள வினாத்தா ள்களின் அறைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான அனைத்து பாட வினாத்தாள்கள், பிளஸ்-1 தேர்வுக்கான 3 பாட வினாத்தாள்கள் வந்து விட்டதாகவும், மீதமுள்ள பாடத்துக்கான வினாத்தாள்களும்,

    எஸ்.எஸ். எல். சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்களும் விரைவில் வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×