என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 Ambulances"

    • எங்களுடைய கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்தபோது எண்ணற்ற உயிர் காக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்.
    • புதுவை மாநிலத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவளகுப்பம் மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம் எப்.சி. (தர சான்று) எடுக்காமல் 8 மாதம் வரை ஓடியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எங்களுடைய கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்தபோது எண்ணற்ற உயிர் காக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்.

    அவற்றில் ஒன்று இந்திய அளவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்து என்.ஆர்.எச்.எம். மூலம் நடை முறைப்படுத்தினார். 108 ஆம்புலன்சை பராமரிப்பது அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணி என்.ஆர்.எச்.எம். மூலம் மாநில அரசு கண்காணிப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    புதுவை மாநிலத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவளகுப்பம் மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம் எப்.சி. (தர சான்று) எடுக்காமல் 8 மாதம் வரை ஓடியது. இந்த விபரீத நிலை உணர்ந்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே 2 மாதமாக 108 ஆம்புலன்ஸ் பராமரிப்பு இன்றி ஓரங்கட்டப்பட்டுள்ளது.

    மேலும் கரிக்கலாம்பாக்கம், காட்டேரிக்குப்பம் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இதே காரணத்துக்காக ஓரங்கட்டப்பட்டு உள்ளது. இதனை புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது உடனடியாக அந்த வாகனங்களை

    எப்.சி. (தரச்சான்று)எடுத்து பயன்படுத்த வேண்டும்.

    எப்.சி. எடுப்பதற்கு நிதி இல்லை என்று சொன்னால் அந்த நிதி செலவை பாட்டாளி மக்கள் கட்சியை ஏற்க தயாராக உள்ளது.

    108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கு உடனடியாக கொடுக்க வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்கி சம்பள உயர்வு, பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் எப்.சி. எடுத்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.
    • கடந்த ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.

    இதில் கோபி, ஈரோடு அரசு மருத்துவமனையில் மினி ஐ.சி.யு என்று அழைக்கப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கு என்று தனியாக 2 108 ஆம்புலன்ஸ்கள் உயர் ரக மருத்துவ குழுவினருடன் தயாராக உள்ளது.

    இதேப்போல் மூன்று 108 வாகனங்கள் செயற்கை சுவாச வசதியுடன் ஈரோடு, பெருந்துறை, கோபி மருத்துவமனையில் தயாராக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக இந்த வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 48,665 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 57,472 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய 8,587 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி பெற்றனர்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 10,839 பேர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவ உதவி பெற்றுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 10,430 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தி உள்ளனர்.

    2022-ம் ஆண்டு 16,800 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு 108 ஆம்புலன்சில் 41 பிரசவம் நடந்துள்ளது. 2022-ம் ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது. மாவட்ட முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

    கிராமம், மலை பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 14 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்து விடும். இதே நகர பகுதியில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 8 நிமிடத்திற்குள் வந்துவிடுகிறது. 

    • ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • போலீசார் 120 கிலோமீட்டர் விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், சரூர் நகரில் இருந்து நோயாளி ஒருவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஹயத் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 108 ஆம்புலன்ஸ் டெக்னீசியன் மற்றும் டிரைவர் நோயாளியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மெஹபூபா பாத் மாவட்டம், லட்சுமி நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் காலபைரவா என்கிற வெங்கடேஸ்வரலு (55). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 108 ஆம்புலன்ஸ்சில் யாரும் இல்லாததால் அதனை கடத்திக் கொண்டு சென்றார்.

    நோயாளியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு வெளியே வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் காணாததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆம்புலன்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் சோதனை செய்தபோது ஆம்புலன்ஸ் ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிட்யாலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் ஜெனாரெட்டி மற்றும் போலீசார் பாமன குண்டா ரெயில்வே மேம்பாலத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தும்படி கூறினார்.

    ஆனால் வெங்கடேஸ்வரலு சப் இன்ஸ்பெக்டர் ஜனா ரெட்டி மீது ஆம்புலன்ஸ் மோதி விட்டு சென்றார். இதில் சப்-இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் உஷார் அடைந்த போலீசார் ஆம்புலன்ஸை தங்களது வாகனங்களில் துரத்திச் சென்றனர். கொல்லப்பட் சுங்கச்சாவடியில் 108 ஆம்புலன்ஸ்சை வழிமறித்தனர். அப்போது வெங்கடேஸ்வரலு ஆம்புலன்ஸை பின்னோக்கி எடுத்து சென்று வேறு திசையில் மீண்டும் ஐதராபாத் சாலையில் ஓட்டி சென்றார்.

    இதனால் விரக்தி அடைந்த போலீசார் ஆம்புலன்ஸ் வரும் சாலையில் லாரிகளை குறுக்கே நிறுத்தினர். லாரிகள் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட வெங்கடேஸ்வரலு ஆம்புலன்சை மீண்டும் வேறு சாலை வழியாக திருப்பி வேகமாக சென்றார்.

    அப்போது ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்சில் இருந்து தப்பி ஓடிய வெங்கடேஸ்வரலுவை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் வெங்கடேஸ்வரலு சிட்யாலா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடிச் செல்லப்பட்ட வாகனத்தை போலீசார் 120 கிலோமீட்டர் விரட்டி சென்று மடக்கி பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

    ×