search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Last year"

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.
    • கடந்த ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.

    இதில் கோபி, ஈரோடு அரசு மருத்துவமனையில் மினி ஐ.சி.யு என்று அழைக்கப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கு என்று தனியாக 2 108 ஆம்புலன்ஸ்கள் உயர் ரக மருத்துவ குழுவினருடன் தயாராக உள்ளது.

    இதேப்போல் மூன்று 108 வாகனங்கள் செயற்கை சுவாச வசதியுடன் ஈரோடு, பெருந்துறை, கோபி மருத்துவமனையில் தயாராக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக இந்த வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 48,665 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 57,472 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய 8,587 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி பெற்றனர்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 10,839 பேர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவ உதவி பெற்றுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 10,430 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தி உள்ளனர்.

    2022-ம் ஆண்டு 16,800 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு 108 ஆம்புலன்சில் 41 பிரசவம் நடந்துள்ளது. 2022-ம் ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது. மாவட்ட முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

    கிராமம், மலை பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 14 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்து விடும். இதே நகர பகுதியில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 8 நிமிடத்திற்குள் வந்துவிடுகிறது. 

    • கயிறு கட்டி ஆபத்தான முறையில் கடக்கும் பொதுமக்கள்
    • மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் நீண்ட காலமாக தரைப்பாலம் இருந்தது கடந்த ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக தரைப்பாலம் உடைந்து சென்றது.

    இந்த தரைப் பாலம் வழியாக தண்டுகானூர், மாங்குப்பம், காரக்காரன்கொட்டாய், மங்களம்பள்ளி, என சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த தரைப் பாலம் வழியாக சென்று வந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறுக்கு செல்லும் கிளை நீரோடை கொரட்டி பகுதியில் இருந்து தொடங்கி ஊத்தங்கரை சென்று முடிவடைகிறது

    தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொரட்டி நீரோடையில் தற்போது அதிக வெள்ளம் செல்வதால் தரைப் பாலம் உடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது.

    தரை பாலத்தில் வெள்ளம் அதிகமாக செல்வதால் தரை பாலத்தைக் கடக்க அப்பகுதி மக்கள் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கரையில் இருந்து மற்ற கரைக்கு ஆபத்தான முறையில் கடக்கின்றனர். மேலும் வாகனங்களும் மிகவும் சிரமப்பட்டு செல்கிறது.

    அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் மாவட்ட நிர்வாகம் இப்பகுதிக்கு தரை பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இதே தரைப் பாலத்தில் மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (35) என்பவர் வீட்டிலிருந்து காலை கொரட்டி பகுதிக்கு தேநீர் அருந்த கடைக்கு சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
    • தரமான வீடுகள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

    வேலூர்:

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதி கபிலன், வேலூர் தொகுதி செயலாளர் சரத், தொகுதி துணை செயலாளர் முருகன் ஆகியோர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்ப தாவது:-

    மேல்மொணவூரில் ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஈழ சொந்தங்களுக்காக இலவச தொகுப்பு வீடுகள் என்ற பெயரில் ரூபாய் 11 கோடி செலவில் 220 வீடுகள் கட்டும் திட்டத்தினை கடந்த ஆண்டு முதல்அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    ஆனால் வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பெற்ற கட்டுமான நிறுவனங்கள் வீடுகளை முற்றிலும் தரமற்ற முறையில் கட்டி வருவதாக முகாம்களில் வசிக்கும் மக்களே குற்றம் சாட்டினர். இதை அடுத்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கே நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

    அடித்தளம் ஆழமாக அமைக்கப்படாததும் சிமெண்டு அதிகளவு மலை மணல் கலக்கப்படுவதும் கான்கிரீட் தூண்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற கலவையில் வகையில் வீடுகள் கட்டப்படுகின்றனர். என்ற அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

    நாடு இழந்து வீடு இழந்து மண்ணையும் மக்களையும் உயிரையும் உறவுகளையும் உடமைகளையும் இழந்து நிம்மதியாக உயிர் வாழ இந்த பூமிப் பந்தில் ஒரு இடம் கிடைத்திடாதா என்ற எதிர்பார்ப்புகளுடன் இன்னொரு தாய் நிலமான தமிழ்நாட்டுக்கு நம்மை நம்பி வந்த ஈழச் சொந்தங்கள் முகாம்கள் என்ற பெயரில் சிறையை விட கொடுமையான எவ்வித அடிப்படை வசதி அற்ற வதைக்கூடங்களில் ஒரு தலைமுறைக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த நாட்டிற்குச் சிறிதும் தொடர்பில்லாத திபெத்தியர்களுக்கு வளமான வாழ்வை இந்திய பெரும் நாடு அமைத்துக் கொடுத்துள்ளது.

    தமிழர்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத ஐரோப்பிய நாடுகள் கூட ஈழ தமிழ் சொந்தங்களை தங்கள் சொந்த நாட்டு குடிமக்களைப் போல அரவணைத்து ஆதரித்து வாழ வைக்கின்றனர். நம்முடைய தமிழ்நாட்டில் நம்முடைய தமிழக முதல்வர் இலங்கை தமிழர்களுக்கான கட்டுமான வேலையில் சற்றும் மனசாட்சியின்றி பாறையை உடைக்காமல் அதன் மீது போலி அஸ்திவாரம் போடுவது டம்மி கலம் போட்டு கட்டுவது தரமற்ற கம்பிகளை கொண்டு கட்டுமான பணிகளை செய்வதும், தூண்களே எழுப்பாமல் சுவர் எழுப்புவதும் ஈழத் தமிழ் மக்களின் உயிர்களில் விளையாடும் ஒரு செயலாகும் இத்தகைய செயல், மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

    உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு மேல்மொணவூரில் ஈழ சொந்தங்களுக்கு புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள் தர மற்றதாக கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி உறுதிமிக்க தரமான வீடுகள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    கடந்த ஆண்டில் ஜம்முவுக்கு 1½ கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. #Jammu #VaishnoDeviTemple
    ஜம்மு:

    இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நாட்டின் வடக்கு எல்லையாக உள்ள இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த ஜம்மு காஷ்மீரில் பல வழிபாட்டுத்தலங்களும், பள்ளத்தாக்குகளும் உள்ளன.

    கோடை காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் காஷ்மீரில் உள்ள ஜம்முவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்றி ஒரு கோடியே 60 லட்சத்து 469 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக காஷ்மீர் மாநில அரசு தெரிவித்து உள்ளது. இது மிகவும் அதிக எண்ணிக்கையாகும்.

    ஆனால் அதே சமயம் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2017-ம் ஆண்டில் 11 லட்சம் பயணிகள் காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால் 2018-ம் ஆண்டில் 8½ லட்சம் பேர் மட்டுமே காஷ்மீருக்கு சுற்றுலா வந்துள்ளனர்.



    இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி கூறுகையில், ‘ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களை தவிர இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே பயணிகள் ஜம்முவில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புவதால் இங்கு வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

    காஷ்மீரில் அடிக்கடி நிகழும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிரிவினைவாதிகள் நடத்தும் கல் வீச்சு சம்பவங்களும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. சுற்றுலாவை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புவோர், வன்முறை நடந்தேறும் காஷ்மீரை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். எனவே இங்கு அமைதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை வேண்டுமென உள்ளூர் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #Jammu #VaishnoDeviTemple
    ×