search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Watermelon"

    • வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் புதுமையான உணவு தயாரிப்பு தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அதில் சில உணவு வகைகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில உணவு வகைகள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பரவி வரும் அந்த வீடியோவில், சில இளைஞர்கள் தர்பூசணி பழங்களை கழுவி, வெட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் அந்த பழங்களை துண்டு, துண்டாக வெட்டி ஜூஸ் தயாரிக்கின்றனர். அது முடிந்ததும், கோழி இறைச்சி வெட்டி ஒரு பெரிய கடாயில் போட்டு எண்ணெய், மசாலா, இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரிக்கிறார்கள். அதன்பிறகு சிக்கன் கலவையில் தர்பூசணி ஜூஸை சேர்த்து, பாஸ்மதி அரிசி போட்டு பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், இது ஒருபோதும் சுவையாக இருக்காது எனவும், இதை சாப்பிட்ட பிறகு ஆம்புலன்சிற்காக காத்திருக்க நேரிடும் எனவும் பதிவிட்டு உள்ளனர்.


    • ரத்த சிவப்பாக இருந்தால் நன்றாக முதிர்ந்து பழுத்த பழம் என்பது நம்பிக்கை.
    • வெட்டப்படாத முழு தர்பூசணியை வாங்குவது நல்லது.

    சென்னை:

    அடிக்கிற வெயிலில் அரை மணிநேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடித்தாலும் தாகம் தீருவதில்லை. வெளியே சுற்றும் போது தாகம் தணிக்க இளநீர் குடிக்கலாமென்றால் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கிறது.

    தர்பூசணி துண்டுகள் கண்ணை கவர்கிறது. ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் ஒரு துண்டின் விலை ரூ.20 தான். விலை குறைவு அதிக தண்ணீர் சத்தும் இருப்பதால் எல்லோரும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

    ரத்த சிவப்பாக இருந்தால் நன்றாக முதிர்ந்து பழுத்த பழம் என்பது நம்பிக்கை. ஆனால் கலருக்கு வண்ண சாயங்களை ஊசி மூலம் செலுத்துவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    விழிப்புணர்வு, சோதனைகள் மூலம் இப்போது கலருக்கான ஊசி செலுத்துவது குறைந்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறினார்.

    இருப்பினும் விற்பனையாளர்கள் தர்பூசணி துண்டுகளில் கலர் பொடியை சர்க்கரை பாகுவில் கலந்து பூசுவதை பார்க்க முடிவதாகவும் தெரிவித்தார். இது இயற்கையான சுவையை மாற்றியமைக்கும். உணவில் தேவையற்ற சர்க்கரையை சேர்க்கிறது. ஒரு வகையில் உடலுக்கு தீங்கை தான் ஏற்படுத்தும்.

    வெட்டப்பட்ட தர்பூசணி துண்டுகளை கையாள்வதும் நீண்ட நேரம் திறந்தவெளியில் வைத்திருப்பதால் சுகாதாரமற்ற சூழலால் கெடும். ஆனால் விற்பனையாளர்கள் அழுகுவதை மறைக்கவே சர்க்கரை பாகுவை தடவுவதாக கூறப்படுகிறது.


    தர்பூசணி ஜூஸ் தயாரிக்க விற்பனையாளர்கள் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துகிறார்கள். கண்ணாடி டம்ளர்களை ஓடுகிற தண்ணீரில் கழுவுவதில்லை.

    ஒரு வாளி தண்ணீர் வைத்துள்ளார்கள். அதிலேயே தொடர்ந்து டம்ளர்களை கழுவுகிறார்கள். இது கடுமையான உடல்நல கோளாறை ஏற்படுத்தலாம்.

    ஏனெனில் அசுத்தமான தண்ணீர் உணவில் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டு உள்ளது.

    எனவே நுகர்வோர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். வெட்டப்படாத முழு தர்பூசணியை வாங்குவது நல்லது. துண்டுகள் மற்றும் ஜூஸ் வாங்கி சாப்பிடுவதாக இருந்தால் சுகாதாரமாக இருப்பதையும், செயற்கை வண்ணம் சேர்க்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    • ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.

    பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.

    மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.

    அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது.
    • கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல காப்பகத்திற்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் ரூ.22 கோடி மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதியும், ரூ.13 கோடியில் புதிய நர்சிங் பள்ளியும் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், பரந்தாமன் எம்.எல்.ஏ., மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
    • வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும்.

    காலையில் வயிறு காலியாக இருக்கும்போது உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் துரிதமாக உறிஞ்சப்பட்டுவிடும். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும். உடலின் அனைத்து உள் உறுப்புகளுக்கும் சத்துகளை கடத்தி உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவிடும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் குறித்து பார்ப்போம்.

     1. வாழைப்பழம்:

    வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. மேலும் இதிலிருக்கும் இயற்கையான சர்க்கரை, உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும். அது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

     2. தர்பூசணி:

    தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது. கலோரிகளும் குறைவாகவே இருக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் வித்திடும்.

     3. பப்பாளி:

    பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். அத்துடன் வைட்டமின்கள் ஏ, சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் பப்பாளியில் உள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் வலு சேர்க்கக்கூடியவை.

     4. ஆரஞ்சு:

    வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் மிகுந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும்.

     5. ஆப்பிள்:

    ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்யும். செரிமானம் சீராக நடைபெறவும் துணை புரியும். மேலும் ஆப்பிளில் இருக்கும் இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வெளியிடவும் உதவிடும்.

     6. அன்னாசி:

    அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும்.

     7. மாம்பழம்:

    வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மாம்பழத்தில் மிகுந்திருக்கும். அவை அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு உதவி செய்யும்.

     8. பெர்ரி:

    ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றன. வைட்டமின்களும், நார்ச்சத்துகளும் அதிகம் நிரம்பியுள்ளன. அறிவாற்றல் திறனுக்கும், இதய நலனுக்கும் வலு சேர்க்கும்.

     9. கிவி:

    கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கும் நலம் பயக்கும்.

     10. திராட்சை:

    திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கக்கூடியது.

    • பகல் நேரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள்.
    • தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    போரூர்:

    தமிழகத்தில் தற்போது பனி சீசன் முடிந்து கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கி விட்டது. இதனால் சாலை ஓரங்களில் நீர் மோர், இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, தர்பூசணி பழங்கள் விற்பனை அதிக அளவில் முளைத்து உள்ளன.

    பகல்நே ரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள். தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலையோர குளிர்பான கடைகளில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

    மேலும் சாலையோரங்களில் ஆங்காங்கே தற்போது வெயிலுக்கு இதமான தர்பூசணி விற்பனையும் அதிகரித்து உள்ளன. குவித்து வைத்து விற்கப்படும் தர்பூசணியை முழுபழங்களாகவும் வீடுகளுக்கு அதிக அளவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது.

    இந்த நிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களாகவே செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவியத் தொடங்கி உள்ளன.

    தற்போது தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்படுகிறது.

    வெளி மார்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தர்பூசணி பழங்களின் வரத்து மேலும் அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று பழ வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. 70 சதவீதம் பேர் விவசாயம், கால்நடை வளர்ப்பை சார்ந்தே உள்ளனர். பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் சீசனுக்கு தகுந்தாற்போல், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம், வெள்ளிமேடு பேட்டை, ஒலக்கூர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் மரக்காணம் அடுத்த ஆலத்துார், நடுக்குப்பம், முருக்கேரி பகுதிகளிலும், வானுார் அடுத்த ரங்கநாத புரம், விநாயகபுரம், பரங்கனி, எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்பூசணி சாகுபடி செய்யப் பட்டது.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்படும் தர்பூசணி புதுச்சேரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஒரு டன் 7,500 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது. திண்டிவனம், மரக்காணம் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி அறுவடை செய்யப்படுகிறது

    இது குறித்து தர்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், '2 மாத பயிர் தான் தர்பூசணி. எங்களிடம் இருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு தர்பூசணி பழங்களை கடந்த ஆண்டு வாங்கிச் சென்றனர். இதனால் தர்பூசணி செடிக்கு மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்சுவது மற்றும் ஆட்கள் கூலிக்கே கடந்த ஆண்டு சரியாகி விட்டது .இதில் எந்த லாபமும் கிடைக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் தற்போது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது என தெரிவித்தனர்.

    • வெயிலுக்கு இதமான பழமாக கருதப்படும் தர்பூசணியிலும் தற்போது கலப்படம் வந்துவிட்டது.
    • சிலர் தர்பூசணியில் பழத்தின் உள்புற வண்ணம் நன்றாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் செயற்கையாக ரசாயன வண்ணம் சேர்க்கிறார்கள்.

    சென்னை:

    கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்புகளை தடுக்கவும், தாகத்தை தணிக்கவும் தர்பூசணி மிகவும் சிறந்தது.

    சென்னையில் கடைகள் மற்றும் சாலையோரங்களில் தர்பூசணி குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 1 கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க தர்பூசணி வாங்கி சாப்பிடுகிறார்கள். தர்பூசணியை ஜூஸ் போட்டும் குடிக்கிறார்கள்.

    வெயிலுக்கு இதமான பழமாக கருதப்படும் தர்பூசணியிலும் தற்போது கலப்படம் வந்துவிட்டது. சிலர் தர்பூசணியில் பழத்தின் உள்புற வண்ணம் நன்றாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் செயற்கையாக ரசாயன வண்ணம் சேர்க்கிறார்கள். இந்த பழங்களை வாங்கி சாப்பிடும் போது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

    சிவப்பு நிற ரசாயன வண்ணத்தை தண்ணீரில் கலந்து அதை ஊசி மூலம் தர்பூசணிக்குள் செலுத்தி விடுகிறார்கள். தர்பூசணியின் பல பக்கங்களில் இருந்தும் ஊசி மூலம் ரசாயன வண்ணத்தை செலுத்துவதால் தர்பூசணி பழத்தின் உள்புறம் நன்றாக சிவப்பாக மாறுகிறது. இதனால் நன்றாக பழுத்து இருப்பதாக நினைத்து பொதுமக்களும் அதை சாப்பிடுகிறார்கள்.

    செயற்கை வண்ணம் கலந்த தர்பூசணியை சாப்பிடும்போது முதலில் நாக்கு சிவப்பாக மாறும், வயிறு உப்பிசம், வயிற்றுவலி, வாந்தி, மூச்சிரைப்பு, டயாரியா, வலிப்பு, கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தர்பூசணியில் ஊசி மூலம் இந்த ரசாயன வண்ணத்தை கலந்து விடுகிறார்கள். இதனால் பழத்தின் வெளிப்புறத்தை பார்க்கும் போது எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் பழத்தின் உள்பகுதிக்குள் ரசாயனம் கலக்கப்பட்டு இருக்கும். எனவே தர்பூசணி வாங்கும்போது மிகவும் உஷாராகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பழத்தின் வெளிப்புறத்தை நன்றாக உற்று கவனித்தால் ஊசி ஏற்றப்பட்டதற்கான அடையாளம் தெரியும். சில நேரங்களில் எலி பிராண்டியது போன்ற அடையாளமும் காணப்படும். எனவே அது போன்ற அறிகுறிகள் தெரியும் தர்பூசணி பழங்களை யாரும் வாங்கக் கூடாது.

    ஒரு வேளை ஊசியின் தடம் பதித்திருப்பது தெரியாத நிலையில் பழத்தை வாங்கி விடலாம். ஆனால் தர்பூசணியை வெட்டிய பிறகு சிவப்பாக காணப்படும் பழத்தை வெள்ளை நிற கை துடைக்கும் காகிதத்தால் துடைத்து பார்த்தால் அதில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த காகிதத்தில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து காணப்படும். அதை வைத்து அந்த பழத்தில் செயற்கை வண்ணம் சேர்த்திருப்பதை கண்டறிய முடியும். ரசாயன வண்ணம் சேர்க்காத பழம் என்றால் காகிதத்தில் வண்ணம் ஒட்டாது. அதில் இருந்தே அது நல்ல பழம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    பொதுமக்கள் வாங்கும் தர்பூசணியில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த பழத்தை மாதிரியாக எடுத்துக் கொண்டு அதை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படும். அதில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தால் உடனடியாக அந்த கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    • எலி கடித்த பழங்கள் சிக்கியது. இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தரமற்ற பழங்களை பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    சென்னை நுங்கப்பாக்கத்தில் லயோலா கல்லூரி சுற்றுச்சுவரையொட்டிய பகுதியில் ஏராளமான தர்பூசணி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கோடை காலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று தர்பூசணியை வாங்கி சாப்பிட்டு தாகம் தணிப்பார்கள்.

    இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் மற்றும் கிர்ணி பழங்கள் தரமற்றவையாக இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து இன்று காலையில் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பழங்களின் தரத்தை பரிசோதித்தனர். இதில் எலி கடித்த பழங்கள் சிக்கியது. இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தரமற்ற பழங்களை பறிமுதல் செய்தனர்.

    • இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது.
    • விழாவில் மாவட்ட செயலாளர் ஓ.எல்.பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஓ.எல். பெரியசாமி, மாவட்ட இணை செயலாளர் ஆசை தாமஸ், இளைஞரணி செயலாளர் ஆர். எஸ்.ரஜினி விக்னேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு இலவச நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினர்.

    இதில் மன்ற நிர்வாகிகள் ராஜேந்திரன், இனியன், முருகன்,வினோத், எழிலரசன், கோபால், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில் தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
    • ஏக்கருக்கு 20 டன் வரை விளைச்சல் எடுத்து வந்தனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில் தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக மேட்டுப்பா த்தியில் நீர் ஆவியாவதை தடுக்க நிலப்போர்வை அமைத்து விதைகளை நடவு செய்கின்றனர்.

    செடிகளின் அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுகி ன்றனர். எனவே ஏக்கருக்கு 20 டன் வரை விளைச்சல் எடுத்து வந்தனர். இதனால் கோடை காலத்தில் பிற மாவட்ட வரத்தை எதிர்பார்க்கும் நிலை குறைந்தது.ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில், கொள்முதல் செய்ய ஆளில்லாமல் தர்பூசணி விளைநில ங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.இந்த பாதிப்பால் சில பகுதிகளில் தர்பூசணி சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர். நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில்சில பகுதிகளிலும் தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை துவங்கியுள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது தர்பூசணியை கிலோ 12 - 14 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது.அதிக வெயில்உள்ளிட்ட காரணங்களால் ஏக்கருக்கு 2 டன் வரை விளைச்சல் குறைந்துள்ளது.சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில்விலை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தைதவிர்க்க முடியும் என்றனர்.

    • தர்பூசணி, இளநீர் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
    • இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் நடக்கிறது.

    அபிராமம்

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ராமேசுவரம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    தாங்க முடியாத வெயில் கொடுமை காரணமாக பொதுமக்கள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் திறந்த வெளிகளை தேடி தூங்க செல்கின்றனர்.

    கடும் வெயிலால் சாலை களில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. தற்போது 10-ம் வகுப்பு உள்பட பொது தேர்வும், பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலால் அவதியடைந்து வருகிறார்கள். சிறுவர்கள். வயதானவர்கள் வெயிலின் உச்சபட்ச தாக்கத்தை பார்த்து வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், முதியோர்கள் அனைவரும் பகல் நேரங்களில் சாலையில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    வெயில் கொடுமை காரணமாக உடலில் நீர்சத்து குறைவதால் அதனை ஈடு செய்யும் வகையில் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பானங்களை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக அபிராமம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதியில் உள்ள சாலையோர தர்பூசணி, இளநீர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    தர்பூசணி மற்றும் இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.

    ×