search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக்கு"

    • ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.

    பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.

    மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.

    அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பணம், பாக்கு, பழத்துடன் மூதாட்டி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.
    • கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரி மனு அளிக்க வந்தார்.

    திருச்சி:

    லால்குடி வட்டம், அலுந்தலைப்பூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆா். சரஸ்வதி (வயது 73). கணவரை இழந்த இவா், தேநீரகம் நடத்தி வந்தாா். இவரது மகன் அரவிந்தராஜ் (27), தாய்க்கு துணையாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் இவர்கள் நடத்தி வந்த தேனீர் கடை புறம்போக்கு இடத்தில் வைத்திருப்பதாகக் கூறி, அதை சிலா் அகற்றிவிட்டனா். இதையடுத்து, தங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி, அதிலேயே ஒரு பகுதியை தேநீரகத்தை நடத்திக் கொள்ள முடிவு செய்து கட்டுமானப் பணிகளுக்காக அஸ்திவாரம் தோண்டினா்.

    இதற்கிடையில் கட்டுமானத்துக்கு அனுமதி கோரி உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பம் செய்தனா். ஆனால், பல்வேறு காரணங்களை கூறி, அனுமதியளிக்காமல் தாமதப்படுத்தி வந்தனா்.

    இதுதொடா்பாக ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளித்தும் பலன் இல்லை. மேலும், கலெக்டர் அலுவலகத்திலும் 3 முறைகளுக்கு மேல் மனு அளித்தும், அந்த மனுக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு திரும்ப அனுப்பிவிடுகின்றனா். இதனால் விரக்தியடைந்த தாயும், மகனும் கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் மனு அளிக்க வந்தனா்.

    அப்போது அவர்கள் கலெக்டர் வளாகத்தில் தரையில் துண்டு விரித்து அமா்ந்து, மற்றொரு துண்டை விரித்து வெற்றிலை, பாக்கு, பழங்கள் பரப்பில் கையில் மனுவுடன் அமா்ந்தனா். இந்த செயலை ஆட்சியரகத்துக்கு வந்த பலரும் வியப்புடன் பாா்த்துச் சென்றனா்.

    இதுதொடா்பாக, அரவிந்தராஜ் கூறியது: வயதான தாயாா் பலமுறை அழைத்தும் அரசு அதிகாரிகள் யாரும் வந்து இடத்தை பாா்த்து உரிய அனுமதி பெற்றுத்தரவில்லை. எனவே, தங்களது வீட்டுக்கு சிறப்பு விருந்தினா்களை அழைப்பதை போன்று பழம், பணம், பாக்குடன் வந்து கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளோம்.

    ஆட்சியா் இல்லாததால் எங்களது மனுவை பெற்றுக் கொண்ட அலுவலா்கள் மீண்டும் வட்டார வளா்ச்சி அலுவலத்துக்கே பரிந்துரைத்துள்ளனா். இந்த முறையாவது எங்களது பிரச்னைக்கு உரிய தீா்வு கிடைக்க வேண்டும் என்றாா் அவா்.

    ×