search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரத்த சிவப்பில் தர்பூசணி - கவனம் தேவை!
    X

    ரத்த சிவப்பில் 'தர்பூசணி' - கவனம் தேவை!

    • ரத்த சிவப்பாக இருந்தால் நன்றாக முதிர்ந்து பழுத்த பழம் என்பது நம்பிக்கை.
    • வெட்டப்படாத முழு தர்பூசணியை வாங்குவது நல்லது.

    சென்னை:

    அடிக்கிற வெயிலில் அரை மணிநேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடித்தாலும் தாகம் தீருவதில்லை. வெளியே சுற்றும் போது தாகம் தணிக்க இளநீர் குடிக்கலாமென்றால் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கிறது.

    தர்பூசணி துண்டுகள் கண்ணை கவர்கிறது. ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் ஒரு துண்டின் விலை ரூ.20 தான். விலை குறைவு அதிக தண்ணீர் சத்தும் இருப்பதால் எல்லோரும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

    ரத்த சிவப்பாக இருந்தால் நன்றாக முதிர்ந்து பழுத்த பழம் என்பது நம்பிக்கை. ஆனால் கலருக்கு வண்ண சாயங்களை ஊசி மூலம் செலுத்துவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    விழிப்புணர்வு, சோதனைகள் மூலம் இப்போது கலருக்கான ஊசி செலுத்துவது குறைந்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறினார்.

    இருப்பினும் விற்பனையாளர்கள் தர்பூசணி துண்டுகளில் கலர் பொடியை சர்க்கரை பாகுவில் கலந்து பூசுவதை பார்க்க முடிவதாகவும் தெரிவித்தார். இது இயற்கையான சுவையை மாற்றியமைக்கும். உணவில் தேவையற்ற சர்க்கரையை சேர்க்கிறது. ஒரு வகையில் உடலுக்கு தீங்கை தான் ஏற்படுத்தும்.

    வெட்டப்பட்ட தர்பூசணி துண்டுகளை கையாள்வதும் நீண்ட நேரம் திறந்தவெளியில் வைத்திருப்பதால் சுகாதாரமற்ற சூழலால் கெடும். ஆனால் விற்பனையாளர்கள் அழுகுவதை மறைக்கவே சர்க்கரை பாகுவை தடவுவதாக கூறப்படுகிறது.


    தர்பூசணி ஜூஸ் தயாரிக்க விற்பனையாளர்கள் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துகிறார்கள். கண்ணாடி டம்ளர்களை ஓடுகிற தண்ணீரில் கழுவுவதில்லை.

    ஒரு வாளி தண்ணீர் வைத்துள்ளார்கள். அதிலேயே தொடர்ந்து டம்ளர்களை கழுவுகிறார்கள். இது கடுமையான உடல்நல கோளாறை ஏற்படுத்தலாம்.

    ஏனெனில் அசுத்தமான தண்ணீர் உணவில் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டு உள்ளது.

    எனவே நுகர்வோர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். வெட்டப்படாத முழு தர்பூசணியை வாங்குவது நல்லது. துண்டுகள் மற்றும் ஜூஸ் வாங்கி சாப்பிடுவதாக இருந்தால் சுகாதாரமாக இருப்பதையும், செயற்கை வண்ணம் சேர்க்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    Next Story
    ×