search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மோர்"

    • திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
    • சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டார்/

    விழுப்புரம்:

    திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேரு வீதியில் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு துறை அணி சார்பாக விளையாட்டுத்துறை மாவட்ட அமைப்பாளரும், நகர மன்ற உறுப்பினருமாகிய சந்திரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிப்பழம், குளிர்பானங்கள், நுங்கு, இளநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். 

    இதில் மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் ரிஸ்வான் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த பகுதியில் கோடை காலம் முழுவதும் நீர் மோர் பந்தல் தொடர்ந்து இயங்கும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

    • இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது.
    • விழாவில் மாவட்ட செயலாளர் ஓ.எல்.பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஓ.எல். பெரியசாமி, மாவட்ட இணை செயலாளர் ஆசை தாமஸ், இளைஞரணி செயலாளர் ஆர். எஸ்.ரஜினி விக்னேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு இலவச நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினர்.

    இதில் மன்ற நிர்வாகிகள் ராஜேந்திரன், இனியன், முருகன்,வினோத், எழிலரசன், கோபால், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூர், பாலமேட்டில் அ.ம.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • மகேந்திரன் நீர்-மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்-மோர் வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் செல்வம், மேற்கு ஒன்றிய செயலாளர் ரகு, நகர செயலாளர் ராஜபிரபு, இணைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் பழம், இளநீர், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார். முன்னதாக கேட்டுக்கடையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி பிச்சை, இளைஞரணி செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மாணவரணி செயலாளர் அசோக், ஜெயலலிதா பேரவை கணேசன், ஓட்டுனர் அணி திருப்பதி, நீதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பாலமேடு பேரூர் கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் கழுவம்பாறை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நீர்-மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்-மோர் வழங்கினார்.

    • பரமக்குடியில் தி.மு.க. நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • முருகேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் எதிரில் முருகேசன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. முருகேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.

    இதில் கவுன்சிலர்கள் ஜீவரத்தினம், அப்துல் மாலிக், சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், அருளானந்து, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன், உதயநிதி ஸ்டாலின் மன்றம் துரைமுருகன், மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார்.
    • இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி, ஏப்.15-பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலை யத்தில் தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார். இதில்இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், புஷ்பராஜ், வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் சந்தைவாசல் முன்பு கோடை கால நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூர் செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார்.

    மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ராமகிருஷ்ணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, வக்கீல் திருப்பதி, அவைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர் இளங்கோவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை, பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சூர்யா, திருப்பதி, சங்கு, நிர்வாகிகள் ரவி, வில்லி ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி. உதயகுமார் பேரூர் செயலாளர் அசோக்குமாரிடம் வழங்கினார்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் சந்தை வாசல் முன்பு கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூர் செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார்.

    மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ராமகிருஷ்ணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, வக்கீல் திருப்பதி, அவைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர் இளங்கோ வன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை, பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சூர்யா, திருப்பதி, சங்கு, நிர்வாகிகள் ரவி, வில்லி ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி. உதயகுமார் பேரூர் செயலாளர் அசோக் குமாரிடம் வழங்கினார்.

    • கமுதியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார்
    • ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.

    பசும்பொன்

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கூடும் இடங்களில் நீர்மோர் பந்தல் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பஸ் நிலையம் முன்பு நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்.

    பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி, பப்பாளி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, முன்னாள் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் நேதாஜி சரவணன், காங்கிரஸ் வடக்கு வட்டார தலைவர் ஆதி, தி.மு.க. இளைஞரணி ஆதி ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    மேலும் இதில் முத்து ராமலிங்கம், காங்கிரஸ் நகர தலைவர் சிதம்பர ராஜன், வழக்கறிஞர் நிறை பாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×