search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளைச்சல்"

    • பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.
    • ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியா பாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

    சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

    இந்நிலையில் இன்று ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூண்டின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்து உள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு சில்லரை விற்பனையில் ரூ.300-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது,

    விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ பூண்டு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் அடுத்த வாரம் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    • அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண் அதிகாரி கூறினார்.
    • அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. எனவே விவசாயி களுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட் டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள விவசாயிகள் அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல்ல லாபகர மான வேளாணமைக்கு நல்ல விதை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியன இன்றியமையாதது. இதில் முக்கியமானது ஆதார நல் விதையாகும்.

    நல்ல விதை அல்லது தரமான விதை எனப்படு வது பாரம்பரிய குணங்க ளையும் அதிக பட்ச முளைப்புத்திறனையும் பெற்றிருக்கும். பிற ரகங்கள் மற்றும் களை செடிகளின் விதை இல்லாமலும் பூச்சி நோய் தாக்கம் இல்லாமலும் மண் மற்றும் செடிகளின் பாகங்கள் இல்லாமல் விதை சான்றுத் துறையால் சான்று செய்யப்படும் விதைகளாக இருக்க வேண்டும்.

    வல்லுநர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது) மற்றும் ஆதார நல் விதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து விவசாயியின் வயலின் உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் பூக்கும் தருணத்தில் 15 நாட்கள் முன்னதாக விதை சான்றளிப்புத் துறை யால் விதைப்பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது.

    விதைப்பண்ணை பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவ லரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்போது வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே விதைப் பண்ணைகளில் இருந்து விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு கழிவுகள் நீக்கப்பட்டு சுத்த மான ஒரே மாதிரியான விதைகள் பிரிக்கப்படு கின்றன.

    இது தவிர சுத்திகரிக்கப் பட்ட விதைக் குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலை யத்திற்கு அனுப்பப் படுகிறது. பகுப்பாய்வில் தேறிய விதைக் குவியலுக்கு சான்றட்டை பொருத்தப் பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எனவே விவசாயிகள் இதை முழுமையாக தெரிந்து கொண்டு சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன் படுத்தி பலன் அடைய லாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

    • கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் மேலாக நாட்டு சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்துள்ள சுப்பிரமணியபுரம், கணக்கப்பிள்ளை வலசை, இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான மானாவாரி பயிரான மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு சோளம் சாகுபடி செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் கிடைக்காததால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூ மகசூல் என சொல்லபடும் கேப்பை சோளம், மொச்சை, தக்காளி வெண்டை, கத்தரி உள்ளிட்ட பயிர்களை பயிரிடாமல் தரிசாகவே போட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தென்காசி மாவட்டத்தில் தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது. இதனால் செங்கோட்டை தாலுகா இலத்தூர் விவசாயிகள் தக்காளி, வெங்காயம், வாழை, நெல் மற்றும் சோளம் போன்ற வற்றை சாகுபடி செய்தனர். ஆனால் பின்னர் பருவமழை கண்ணாமூச்சி காட்டி சென்றது. இதனால் போதிய விளைச்சல் இல்லை. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் தாங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயி கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுபற்றி விவசாயி சோழராஜன் கூறும்போது, சோளம் விதைத்து சுமார் 80, 90 நாட்கள் வரை ஏக்கருக்கு சுமார் ரூ.18 முதல் ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்தோம். ஆனால் போதிய மழை இல்லாததால் விளைச்சல் இல்லாமல் நஷ்டம் அடைந்துள்ளோம். இதற்கு காரணம் முழுக்க முழுக்க நிலத்தடிநீரை மட்டுமே நம்பி உள்ளதால் கூடுதலாக செலவு செய்தும் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமலும் அதற்கேற்ப விலை இருந்தும் சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஓவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றார்.

    • ராமநாதபுரத்தில் தேக்கி வைத்த வைகை தண்ணீரால் 2-ம் போக நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • 2-ம் போக நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதியாகவே இருந்து வருகிறது. வட கிழக்கு பருவமழை காலத்தில் தான் நெல் விவசாயத்தை விவசாயிகள் எதிர்பார்ப்புடன் தொடங்குகின்றனர்.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை இல்லாததால் நெல் விவசாயம் அதிக பாதிப்பை சந்தித்தது. மழை பெய்யாத தால் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகியது. பெரும்பாலான ஊர்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்தாலும் வைகை அணையில் இருந்து வந்த வைகை தண்ணீரால் ஒரு சில கிராமங்களில் நெல் விவசாயம் காப்பாற்றப்பட்டது.

    திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, களக்குடி, சத்திரக்குடி, நல்லாங்குடி, ஆர்.காவனூர் உள்ளிட்ட கிராமங்களில் வைகை தண்ணீர் வரத்தால் முதல் போக நெல் சாகுபடி நன்றாக இருந்தது.

    இந்த நிலையில் வைகை அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய், களக்குடி கண்மாய், நல்லாங்குடி, மேலச்சீத்தை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள கண்மாய்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி இந்த கிராமங்களில் விவசாயிகள் இந்த ஆண்டு 2-ம் போக நெல் விவசாய பணிகளை தொடங்கி ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

    இதில் களக்குடி, மேலச்சீத்தை, நல்லாங்குடி, சத்திரக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளன.

    இதுபற்றி களக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இதுவரை களக்குடி கிராமத்தில் முதல் போக நெல் விவசாய பணிகளை மட்டுமே செய்துள்ளோம். முதல் முறையாக இந்த ஆண்டுதான் 2-ம் போக நெல் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிேறாம். வைகை தண்ணீரால் தான் இந்த ஆண்டு முதல் போக நெல் சாகுபடி விளைச்சல் அமோகமாக இருந்ததுடன் 2-ம் போக நெல் சாகுபடி விவசா யத்திலும் ஈடுபட்டு வருகிேறாம்.

    இன்னும் ஒரு மாதத்தில் 2-ம் போக நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில் தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
    • ஏக்கருக்கு 20 டன் வரை விளைச்சல் எடுத்து வந்தனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில் தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக மேட்டுப்பா த்தியில் நீர் ஆவியாவதை தடுக்க நிலப்போர்வை அமைத்து விதைகளை நடவு செய்கின்றனர்.

    செடிகளின் அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுகி ன்றனர். எனவே ஏக்கருக்கு 20 டன் வரை விளைச்சல் எடுத்து வந்தனர். இதனால் கோடை காலத்தில் பிற மாவட்ட வரத்தை எதிர்பார்க்கும் நிலை குறைந்தது.ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில், கொள்முதல் செய்ய ஆளில்லாமல் தர்பூசணி விளைநில ங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.இந்த பாதிப்பால் சில பகுதிகளில் தர்பூசணி சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர். நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில்சில பகுதிகளிலும் தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை துவங்கியுள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது தர்பூசணியை கிலோ 12 - 14 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது.அதிக வெயில்உள்ளிட்ட காரணங்களால் ஏக்கருக்கு 2 டன் வரை விளைச்சல் குறைந்துள்ளது.சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில்விலை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தைதவிர்க்க முடியும் என்றனர்.

    • அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.
    • கனமழை காரணத்–தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே வடகால், பின்னவாசல், ஓடாச்சேரி, கீழகூத்தங்குடி, வேப்பத்தாங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் பூண்டி.கே.கலைவாணன் எம்எல்ஏ தெரிவித்ததாவது, இந்த ஆண்டு முன்பாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தினால் காவிரி படுகை அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.

    எதிர்பாராத விதமாக கடும்மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இருபது நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது.

    சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் கணக்கெடுக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்.

    இதற்கான நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயகளுக்கு வழங்கங்கிட தமிழக முதலவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவ்வாய்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, வேளாண்மை த்துறை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிமா நிர்மலா, தாசில்தார் நக்கீரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், திருவாரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் துரை தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.

    • மழை பெய்யாததால் பனங்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையானது தற்போது ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, திருப்புல்லாணி, ரகுநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம், வெள்ளையன்வலசை, சிட்டாங்காடு, மொட்டையன்வலசை, களிமண்குண்டு, குத்துக்கல் வலசை, தினைக்குளம், வைர வன்கோவில், அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன.

    இங்குள்ள தென்னந் தோப்புகள் மற்றும் வீட்டின் கொல்லை புறங்களில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விவசாயிகள் பனங்கொட்டைகளை நடவு செய்தனர். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டில் மழை இல்லாததால் பனங்கிழங்கு முழுமையான வளர்ச்சி பெறவில்லை.

    இதனால் கிழங்கு பருமன் குறைந்து விளைச்சல் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம், அரண்மனை, சாலைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளை பெண்கள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 25 கிழங்குகள் உள்ள கட்டு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பனங்கிழங்கு விற்பனை செய்யும் பெண் கூறுகையில், இந்த ஆண்டு பனங்கிழங்கு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் தாமதமாக விற்பனைக்கு வந்துள்ளது.

    விளைச்சல் குறைவு காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகமாகி விட்டது. பொங்கல் பண்டிகை என்பதாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்பதாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தொடக்கத்தில் ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையானது தற்போது ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கி விட்டதால் கிழங்கின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்பில்லை என்றார்.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 
    • பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் செட்டிச்சாவடி, கன்னங்குறிச்சி, வீராணம்,

    வலசையூர், ஓமலூர், தீவட்டிப்பட்டி, காடை யாம்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாமந்தி பூக்கள் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடைக்கு செய்யப்படும் பூக்கள் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக

    ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் சாமந்தி பூக்களை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

    • தமிழ்நாட்டில் முதன்முதலாகச் சேலம் பகுதியில் தான் மரவள்ளிக் கிழங்குச் சாகுபடி செய்யப்பட்டது.
    • மரவள்ளிக்–கிழங்குகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்குகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்துக்கும் மரவள்ளிக் கிழங்குக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. தமிழ்நாட்டில் முதன்முதலாகச் சேலம் பகுதியில் தான் மரவள்ளிக் கிழங்குச் சாகுபடி செய்யப்பட்டது.

    மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

    தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ண கிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மரவள்ளிக்–கிழங்குகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்குகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அங்கு மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டு 2 பருவமழையும் நல்ல முறையில் பெய்து, கை கொடுத்துள்ளது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கருக்கு மேல், மரவள்ளிக்–கிழங்குகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடக்கும். இது ஓராண்டு கால பயிராகும். பொதுவாக மரவள்ளிக்கிழங்கு விளைச்சலுக்கு பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படாது. 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினால் போதும். ஒரு ஏக்கருக்கு 5 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.

    தற்சமயம் அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக்–கிழங்குகளை விவசாயிகள் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நடப்பாண்டில் பருவமழை நன்றாக கை கொடுத்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்தாண்டை விட இந்தாண்டு 20 சதவீதம் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே சமயம், கடந்த சில ஆண்டுகளாக மரவள்ளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை. சேகோ ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

    இதனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண, மரவள்ளிக்கிழங்குக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். மேலும் கப்பகிழங்கு (மரவள்ளி), கட்டஞ்சாயா (தேயிலை சுடுநீர்) ஆகியன கேரளா மக்கள் விரும்பி உண்ணும் பண்டமாகும். தமிழக மரவள்ளிக்கிழங்கு சுவை காரணமாக கேரளாவுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து 25 சதவீதம் கிழங்குகள் கேரளாவுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    • 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.
    • முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு தமிழகத்தின் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் கொண்டுவரப்படும்.

    இதே போல் இங்கிருந்தும் வெளி மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். பூக்களின் விலை அவ்வப்போது ஏற்றம் இறக்கத்துடன் காணப்படும்.

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக மல்லிகை பூக்களின் மொட்டுக்கள் கடும் பனியால் செடியிலேயே கருகி உள்ளது. பூக்களின் விளைச்சல் பாதிப்பால் தஞ்சை பூச்சந்தைக்கு பூக்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.

    இது குறித்து வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது, தற்போது கடும் பனி நிலவி வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் நாளை வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது ‌‌ . இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது என்றார்.

    • பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில், 200க்கும் அதிகமான ஏக்கர்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
    • விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தில் சுழற்சி முறையில் பாத்தி அமைத்து கொத்தமல்லி சாகுபடி செய்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில்,சுமார் 200க்கும் அதிகமான ஏக்கர்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. முன்பு மானாவாரி சாகுபடியாக மட்டும் கொத்தமல்லி வடகிழக்கு பருவமழையின் போது சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது கொத்தமல்லி தேவை அதிகரிப்பால் கொத்தமல்லி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது.

    விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தில் சுழற்சி முறையில் பாத்தி அமைத்து கொத்தமல்லி சாகுபடி செய்கின்றனர்.கொத்தமல்லி சாகுபடிக்கு அதிக செலவு பிடிப்பதில்லை.மேலும் திருமண முகூர்த்த காலங்களில் நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால் கொத்தமல்லி சாகுபடி பரப்பு பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் விலை உயர்வால், ஒரு கட்டு கொத்தமல்லி விலை 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில்,கடந்த ஆவணி மாதத்தில் சாகுபடி செய்த கொத்த மல்லி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆவணி, புரட்டாசி மாதங்களில் தொடர் மழை இல்லாததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கட்டு ரூ.5க்கு விலைக்கு விற்பனையாகிறது. சில நேரங்களில் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    • மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.
    • பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கண்டுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய கலாக்காயை சோதனை முறையில் விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டும் நாகை விவசாயிமலையடிவார பகுதிகளில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.

    இவை ஊறுகாய் தயாரிப்ப தற்கும், பேக்கரி களிலும் அதிகமாக பயன்ப டுத்தப்படுகிறது.

    தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கை நல்லூரில் சந்திரபோஸ் என்ற பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து தற்பொழுது கொத்து கொத்தாக அதிக விளைச்சல் கண்டுள்ளது.

    இதை பறித்து பரவை சந்தை நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ கலாக்காய் ரூ.100 முதல் 150 வரை விற்கப்படுகிறது.

    இதை பலரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    இதனால் அதிக லாபம் தருவதாக விவசாயி சந்திரபோஸ் மகிழ்ச்சி தெரிவிக்கின்றார்.

    ×