search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coriander"

    • நோய் மேலாண்மை குறித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
    • கொத்தமல்லி இலைகள் 24 முதல் 36 மணி நேரத்திற்கு மேல் அழுகிவிடும்.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில் கொத்தமல்லி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் நோய் மேலாண்மை குறித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    நறுமணப்பயிர்களில் கொத்தமல்லி விளைவிக்க ஏற்ற தட்ப வெப்ப நிலை, குடிமங்கலம் வட்டாரத்தில் நிலவுவதால் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.கொத்தமல்லி இலை, வாசனை எண்ணெய் எடுக்கவும், துவையல், சட்னி, சாலட், சூப், ஊறுகாய் தயாரிக்கவும், கொத்தமல்லி தண்டு, விதையும் பயன்படுகிறது.வேளாண் பல்கலைக்கழகம் வாயிலாக கோ - 5 முதல், கோ - 7 வரையிலான ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோ - 5 ரகமானது 35 நாட்களில் கொத்தமல்லி இலை உகந்ததாகவும், ஒரு ஹெக்டருக்கு 4.70 டன் மகசூல் கொடுக்கிறது. மேலும் இந்த ரகம் காரீப் மற்றும் ராபி பருவத்திற்கு ஏற்றதாகும்.கொத்தமல்லி ரகங்கள் கோடை பருவத்தில் இலைக்காகவும், உலர் மற்றும் அதிக வெப்பம் இல்லாத பருவத்தில் விதைக்காகவும் பயிரிடலாம்.பூ பூக்கும் பருவத்திலும் விதை முளைப்பதற்கும் அதிக பட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு ஹெக்டருக்கு இறவை சாகுபடிக்கு 10 - 12 கிலோ விதையும், மானாவாரி சாகுபடிக்கு 20 - 25 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

    நோயைக்கட்டுப்படுத்த டிரைகோடர்மா பூஞ்சானை கொல்லி, ஒரு கிலோவுக்கு 4 கிராம் வீதம் பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் அல்லது டை மெத்தலேட் பயன்படுத்தினால் அசுவினி, மாவுப்பூச்சி, செதில் பூச்சி போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். சாம்பல் நோயை கட்டுப்படுத்த சல்பர் துகள், ஒரு கிலோ அல்லது 250 மில்லி டினோ கேப் என்ற பூஞ்சாண கொல்லியை பயன்படுத்தலாம்.கொத்தமல்லி விதைகள் 100 முதல் 150 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த இடை வெளி கிராமங்களுக்கு கிராமங்கள் வேறு பட்டு இருக்கும்.கொத்தமல்லி இலைகள் 24 முதல் 36 மணி நேரத்திற்கு மேல் அழுகிவிடும். விரைவில் அழுகும் தன்மை உடையதால், குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரத்திற்கு சேமிப்பை நீடிக்கலாம்.விதை சேமிப்பவர்கள் அறுவடை செய்த செடிகளை ஓரிரு நாட்கள் சூரிய ஒளியில் உலர வைத்து, ஈரப்பதம் 18 சதவீதம் வரும் வரை வைத்து விதைகளை பிரித்து 9 சதவீதம் ஈரப்பதம் வரும் வரை காய வைத்து, அதற்கு பின் சேமித்து வைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொத்தமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    • 10 கிலோ ரூ.1000-க்கு கீழ் மார்க்கெட்டில் விலை போகின்றது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் பகுதியில் இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான நகரத்தார் குறிச்சி, அச்சங்குளம், விரதக்குளம், நரியன், பள்ள பச்சேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்தைவிட பருத்தி, மிளகாய், கொத்த மல்லி உள்ளிட்ட விவசாய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின் றனர்.

    கடந்த அக்டோபர், நவம்பர் மாத இறுதியில் கொத்தமல்லி சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர். தற்போது இந்த கிராமங்களில் கொத்தமல்லியை அறுவடை செய்து அதை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு வருடமும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கொத்தமல்லி விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அவை தை மாதம் அறுவடை செய்யப்படும்.

    கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் கொத்த மல்லி விளைச்சல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. அப்போது 10 கிலோ கொத்தமல்லி ரூ.1500 முதல் 2000 வரை விலை போனது.

    இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாததால் கொத்தமல்லி விளைச்சல் குறைந்து விட்டது. கொத்தமல்லி விலையும் குறைந்து 10 கிலோ ரூ.1000-க்கு கீழ் மார்க்கெட்டில் விலை போகின்றது. இதனால் எங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில், 200க்கும் அதிகமான ஏக்கர்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
    • விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தில் சுழற்சி முறையில் பாத்தி அமைத்து கொத்தமல்லி சாகுபடி செய்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில்,சுமார் 200க்கும் அதிகமான ஏக்கர்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. முன்பு மானாவாரி சாகுபடியாக மட்டும் கொத்தமல்லி வடகிழக்கு பருவமழையின் போது சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது கொத்தமல்லி தேவை அதிகரிப்பால் கொத்தமல்லி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது.

    விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தில் சுழற்சி முறையில் பாத்தி அமைத்து கொத்தமல்லி சாகுபடி செய்கின்றனர்.கொத்தமல்லி சாகுபடிக்கு அதிக செலவு பிடிப்பதில்லை.மேலும் திருமண முகூர்த்த காலங்களில் நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால் கொத்தமல்லி சாகுபடி பரப்பு பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் விலை உயர்வால், ஒரு கட்டு கொத்தமல்லி விலை 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில்,கடந்த ஆவணி மாதத்தில் சாகுபடி செய்த கொத்த மல்லி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆவணி, புரட்டாசி மாதங்களில் தொடர் மழை இல்லாததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கட்டு ரூ.5க்கு விலைக்கு விற்பனையாகிறது. சில நேரங்களில் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    ×