search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "criticised"

    • 10 நிமிடத்தில் வீடுகளுக்கு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதே இவர்கள் நோக்கம்.
    • மக்கள் நெருக்கம் மிக்க மும்பையில் இந்த நிறுவனம் தன் சேவையை நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

    மும்பையை தலைமையிடமாகக் கொண்ட "Zepto" நிறுவனம் பால்ய கால நண்பர்களான ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகியோரால் துவங்கப்பட்டது.

    10 நிமிடத்தில் வீடுகளுக்கு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதே இவர்கள் துவங்கிய செப்டோ நிறுவனத்தின் பணி.

    மக்கள் நெருக்கம் மிக்க மும்பையில் இந்த நிறுவனம் தன் சேவையை நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

    செப்டோவில் அவ்வபோது ஆஃபர்களும் அறிவிக்கப்படுவது வாடிக்கை. இதனால், செப்டோவை பின்பற்றி வரும் பயனாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் செப்டோவில் கொத்தமல்லியின் விலை ரூ.100க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    அரியானா மாநிலம் குருகிராமை நகரத்தில் வசிக்கும் நபர் ஒருவர் செப்டோவில் 100 கிராம் கொத்தமல்லி ரூ.131க்கு விற்கப்படுவதை தனது ஃபோனில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

    கடந்த ஜூலை 8ம் தேதி அன்று பகிரப்பட்ட பதிவில், உள்நாட்டில் பெறப்பட்ட மற்றும் பிரீமியம் நறுமண கொத்தமல்லி கட்டுகளின் விலை 100 கிராமுக்கு முறையே ரூ.131 மற்றும் ரூ.141 என விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தது.

    மேலும் அந்த பதிவில், "உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவோம்... அவர்கள் வளர உதவுவோம்" என்று அந்த நபர் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, "மலிவு மற்றும் அணுகல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது," என்று மற்றொரு நபர் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியை கொல்ல சதி நடப்பதாக கூறி பா.ஜ.க. அனுதாபம் தேடுவதாக சரத் பவார் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார். #ModiAssassinationPlot #FadnavisCriticisedPawar
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், பிரதமரை கொல்ல சதி நடப்பதாக கூறி பாஜக அனுதாபம் தேடுகிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களிடையே தற்போது அக்கட்சிக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்து வருவதாகவும், அதன் காரணமாக இத்தகைய கொலை மிரட்டல் கடிதங்களை வைத்து அனுதாபம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் பவார் கூறியிருந்தார்.

    அவரது கருத்துக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பிரதமர் மோடியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்திய போலீசார் திரட்டிய தகவல்களை சரத் பவார் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சியின் தலைவர் அல்ல, நமது நாட்டின் தலைவராக இருக்கிறார். சரத் பவார் இந்த அளவிற்கு இறங்கி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. காவல்துறையிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மை விரைவில் வெளியாகும்’ என பட்னாவிஸ் டுவிட்டரில் கூறியுள்ளார். #ModiAssassinationPlot  #FadnavisCriticisedPawar
    ×