search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vignesh Shivn"

    • நடிகை நயன்தாரா தம்பதியினர் கோவிலில் சென்று தரிசனம் செய்தனர்.
    • சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

    நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இதன் பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதியினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நயன்தாரா தம்பதியினரை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தம்பதியினர் கோவிலில் சென்று தரிசனம் செய்தனர். அங்குள்ள ஆஞ்ச நேயரையும் வழிபட்டனர்.

    பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு வந்தனர். நாகராஜா கோவிலில் பயபக்தியுடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு சென்ற நடிகை நயன்தாரா நெற்றியில் திருநாமம் இட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டார். விக்னேஷ்சிவன் தலையில் தலைப்பாகையுடன் சாமி தரிசனம் செய்தார்.


    தொடர்ந்து இருவரும் பதியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தனர். நயன்தாராவுடன் அங்கிருந்த குழந்தைகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நயன்தாராவை காண பதியின் வெளியே ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து நயன்தாரா கையசைத்தவாறு சென்றார்.

    பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீநாகராஜா, சூரிய பகவான் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் நயன்தாரா தனது குழந்தைகள் பேரில் அர்ச்சனை செய்தார். சாமி தரிசனத்திற்கு வந்த நயன்தாராவிற்கு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வரவேற்பு அளித்தார். பின்னர் கோவில் அலுவலகத்தில் நயன்தாரா பேசிக்கொண்டிருந்தார். பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரத்திற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர்கள் முண்டியடித்து கொண்டு நயன்தாராவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு கோவிலுக்கு வெளியே உள்ள கடைகளுக்கு சென்று பேன்சி பொருட்களை நயன்தாரா வாங்கி சென்றார்.



    • அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
    • இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இவர் தமிழ் இயக்குனரான விக்னேஷ் சிவனை ஜூன் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அழகான இரு ஆண் குழந்தைகள் அக்டோபர் 2022 ஆம் ஆண்டு பிறந்தன. அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டனர். அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் அவர்களின் திரை துறை வாழ்க்கையை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைப்பெறும் நிகழ்வை பற்றியும் புகைப்படங்களை பகிர்ந்து வருவர்.

    அதுப்போல் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா அவரது மகன்களான உயிர் மற்றும் உலகுடன் குழந்தையோடு குழந்தையாய் விளையாடிக்கொண்டு இருக்கிறார். குழந்தையை தோள் மேல் தூக்கி வைத்து விளையாடுவது, மகனை முத்தமிடுவது, கொஞ்சுவது, சிரிப்பது, கைப் பிடித்து நடப்பது என அந்த வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன.

    இந்த வீடியோவை   பார்க்கவே மிகவும் கியூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதான் என்னுடைய உயிர் மற்றும் உலகம் என அந்த வீடியோவில் நயன்தாராவை குறித்து பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • அதற்கு முன் நயன்தாரா நடித்த படம் 'அன்னபூரணி'. இது நயன்தாராவின் 75-வது படமாகும்.

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இதுவே அவர் நடித்த முதல் இந்தி திரைப்படமாகும். படம் 1500 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது.

    அதற்கு முன் நயன்தாரா நடித்த படம் 'அன்னபூரணி'. இது நயன்தாராவின் 75-வது படமாகும். இதனை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கினர். நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்தார்.

    இப்படம் கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். நயன்தாரா ஃபீமேல் செண்டிரிக்காக நடித்த பல படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியை பெற்றவர்.

    சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது " சமூக இழிவுகளை மீறும் அதிகாரம் பெற்ற பெண்களின் கதாப்பாத்திரத்தில் நடிப்பது ஒரு ஆக்கப்பூர்வமான தேர்வு மட்டுமல்ல அவர்களின் குரல்களின் ஒரு பிரதிபலிப்பாகவும், அவர்களுக்கான குரலாகவும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்". என கூறினார்.

    அடுத்ததாக மாதவன் மற்றும் சித்தார்த் நடித்து இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும் மன்னாங்கட்டி சின்ஸ் 1960 படத்திலும் நடித்து வருகிறார்.

    படத்தில் மட்டும் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசாமல், நிஜத்திலும் அவர் செய்து கொண்டு இருக்கிறார்., அவர் சமீபத்தில் அவரின் கணவரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து 9 ஸ்கின் என்ற ஸ்கின்கேர் பிராண்டையும், ஃபெமி 9 சானிட்டரி நேப்கின் பிராண்டையும் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
    • அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    மீண்டும் டிரெண்டாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்தமிழ்திரை உலகில் முன்னணி கதாநாயகியான வலம் வரும் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

    அங்கு மின் விளக்கில் அலங்காரம் செய்யப்பட்ட மரத்தின் கீழ் இருவரும் இணைந்து நின்றபடி எடுத்த புகைப்படம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷிவனுடன் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை குட் டைம்ஸ் என்று பதிவிட்டு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகர்ந்துள்ளார்.

    பிறந்த நாள் நிகழ்ச்சியில், நயன்தாரா குழந்தைகள் கேக் சாப்பிடும் வீடியோவையும் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சர்வதேச அளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர்.
    சர்வதேச அளவில் பிரபலமான 72-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த வருடம் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மொத்தம் 1,845 முழு நீளப் படங்களில் 47 படங்கள் அதிகாரப்பூர்வ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த இறுதிப் பட்டியலில் இந்தியப் படமும் எதுவும் இடம்பெறவில்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி இசையமைத்து வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகிக்கொண்டிருக்கும் `லே மஸ்க்‘ ஆங்கிலப் படத்தில் இருந்து `சென்ட் ஆப் தி சாங்’ என்ற பாடலை வெளியிட கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார்.



    அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் `தர்பார்' படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதுவதாக கூறப்படுகிறது. #Darbar #Rajinikanth
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
    மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் - விக்னேஷ் சிவன் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இவர்களது கூட்டணியில் உருவாகிய பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடைசியாக அனிருத் இசையில் வெளியான பேட்ட படத்தில் விக்னேஷ் சிவன் வரியில் பாடல்கள் இல்லை என்ற குறை இருந்தது. அது தர்பார் படத்தின் மூலம் நினைவாகலாம்.



    தர்பார் படத்தில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ஒரு பாடல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். டி.சந்தானம் கலை பணிகளையும், ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh #VigneshShivn

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது கதாநாயகியை முடிவு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.



    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் கதநாயகியாக அறிமுகமாகும் ராஷ்மிகா இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. படக்குழுவோ திரைக்கதை பணிகள் இன்னும் முடியவில்லை.

    அதன் பின்னர்தான் நாயகி பற்றி அறிவிப்பு வரும் என்கிறது. படம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இதற்கு முன் வேறொரு கதையை அவரிடம் கூறினேன். அப்போது மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நானும் வேறு படங்களில் பிசியாகிவிட்டேன். தற்போது எல்லாம் ஒன்றுசேர்ந்து வந்துள்ளது” என்று கூறியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna

    நானும் ரெளடி தான், கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நயன்தாரா நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்க இருக்கிறார். #VigneshShivn #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் ரிலீசான ‘விஸ்வாசம்’ ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் ரிலீசாக இருக்கிறது. கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.

    இதுதவிர ‘கொலையுதிர் காலம்’, ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்திலும், ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். 



    இந்த படத்துக்கு பிறகு ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்கிறார் நயன்தாரா. நாயகியை மையப்படுத்திய கதையாக உருவாகும் இந்தப் படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VigneshShivn #Nayanthara

    தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, 100 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள மிஸ்டர்.லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌‌ஷன் டிராமா படங்கள் இருக்கின்றன.

    இவை தவிர விஜய் - அட்லி இணையும் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடிக்கிறார். அறிவிப்பு வந்தவை தவிர சுமார் 10 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். எனவே இந்த ஆண்டு நயன்தாரா திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கின்றனர். நயன்தாராவுக்கு இப்போது வயது 34. நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதும் ஒன்றாக வாழ்வதும் எல்லோருக்கும் தெரிந்த செய்தியே.



    எப்போதுதான் இவர்கள் திருமணம் நடக்கும்? என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா மனதிலோ 100 படங்களை தொடுவதை இலக்காக வைத்துள்ளார் என்கிறார்கள். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைந்த பின்னர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாராம். #Nayanthara #VigneshShivn

    நயன்தாரா தனது 34-வது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய நிலையில், நயன்தாராவை சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் என்று நயன்தாரா ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். #Nayanthara #VigneshShivn
    நயன்தாரா நேற்று முன்தினம் தனது 34-வது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் ஸ்பெ‌ஷலாக கேக் ஆர்டர் செய்து வீட்டை அலங்கரித்து அசத்தி உள்ளார். கேக் வெட்டியபோது எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.



    அதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் அவரிடம் ஒரே ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர். ‘எங்கள் தலைவி வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார். செல்லத்தை கைவிட்டுவிடாதீர்கள் விக்னேஷ் சிவன். சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று நயன்தாரா ரசிகர்கள் விக்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் மிரட்டும் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இருக்கும்போது மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது. #Nayanthara #VigneshShivn

    நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் நெருக்கமான இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Nayanthara #VigneshShivn
    நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி பரவுகிறது. இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

    நேற்று பக்திமயமாக இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டனர். இருவரும் ஒரே வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவிட்டு அந்த படத்தை பகிர்ந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

    நயன்தாராவின் அடுத்தடுத்த 2 படங்களான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் இரண்டும் வெற்றி பெற்றிருப்பதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு நயன்தாரா திருமணம் செய்யமாட்டார் என்றும், சம்பளத்தையும் 5 கோடிக்கு ஏற்றிவிட்டதாகவும் தகவல் பரவுகிறது. #Nayanthara #VigneshShivn

    மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது என்று நயன்தாரா நிகழ்ச்சியொன்றில் பேசிய நயன்தாரா தெரிவித்தார். #KolamaavuKokila #CoCo #Nayanthara
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கேற்றாற்போல், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதனை உறுதிப்படுத்தும்படியாக இருக்கிறது. 

    வெளிநாடுகளில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

    மேலும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் சில தகவல்கள் வருகின்றன. ஆனால் அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருவரும் காதலை வளர்த்து வருகிறார்கள். 

    நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக கோலமாவு கோகிலா வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 



    இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார். படத்தில் இடம்பெற்ற பாடலொன்றை விக்னேஷ் சிவனை வைத்து வெளியிட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது, காதல் பற்றிய பேச்சுக்களுக்கு விளக்கம் அளித்தார். 

    அவர் கூறும்போது, “இந்த உலகம் உங்களை பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் ஒரு வாழ்க்கையை வாழ முடியாது” என்றார். #KolamaavuKokila #CoCo #Nayanthara

    ×