search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிர்"

    • ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல்
    • வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் மீட்டனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த வர் லூக்காஸ் (வயது 44). இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவர் வழக்கம்போல் கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். படகை லூக்காஸ் ஓட்டினார்.

    அவருடன் தூத்துக் குடியை சேர்ந்த 2 பேர், கொல்லம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த தலா ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 5 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 3 பேருமாக 13 மீன் பிடித்தொழிலாளர்கள் சென்றனர். இவர்களது விசைப்படகு நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதி 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது.

    அப்போது எதிர்ப்பாரா மல் திடீரென கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் படகு உடைந்து உள்ளே கடல் நீர் புகுந்தது. செய்வதறியாது தவித்த மீனவர்கள் படகில் புகுந்த நீரை இறைத்து வெளியேற்றினர். அப்போதும் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் மீனவர் லூக்காஸ் படகை அருகில் கரை சேர்க்க இயக்கினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் படகு எதிர் திசையில் அடித்து சென்றது. படகை கட்டுப்படுத்த முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.பின்னர் 8 நாட்டிக்கல் தூரம் அடித்து சென்றபின் படகு கட்டுக்குள் வந்தது. அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகை லூக்காஸ் உதவிக்கு அழைத்தார். உதவிக்கு வந்த பைபர் படகில் மீனவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்தனர்.

    நேற்று காலை லூக்காஸ் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்தார். ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். உடனே வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லூக்காஸ் படகு நோக்கி விரைந்து சென்றனர். பல மணிநேரம் சென்ற மேற்படி வள்ளங்கள், விசைப்படகு லூக்காஸ் படகை அடைந்தது. பின்னர் அவர்கள் பைபர் படகில் இருந்த 12 மீனவர்கள், உடைந்த லூக்காஸ் விசைப்படகையும் மீட்டு கரை நோக்கி விரைந்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் மீனவர்கள் அனைவரும் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பத்திரமாக கரை சேர்ந்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • வள்ளம் கவிழ்ந்ததால் இரவு முழுவதும் கடலில் தத்தளித்தோம்
    • கரை திரும்பிய மீனவர்கள் பற்றி உருக்கம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி அருகே உள்ள கீழ கடியபட்டணத்தை சேர்ந்த எட்வின் ஜெனில் (வயது 34) சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் கடந்த 18-ந்தேதி பிற்பகல் கடியபட்டணத்தை சேர்ந்த மீனவர்கள் சார்லஸ் எட்வின் (45), பிரான்சிஸ் (71), ஜோசப் (63), சகாய பெனின் (33) ஆகியோருடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். மறுநாள் இவர்கள் கரை திரும்ப வேண்டும்.

    ஆனால் 3 நாட்கள் ஆகியும் அவர்கள் கரை திரும்ப வில்லை. இதனால் குடும்பத்தினர் பீதி அடைந்த னர்.இது குறித்து குளச்சல் மரைன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்த குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ், மாவட்ட கலெக்டரை சந்தித்து கரை திரும்பாத மீனவர்களை துரிதமாக தேடி கண்டு பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதனிடையே தூத்துக்குடி கோஸ்டல் கார்டு கப்பலும் கன்னியாகுமாரி கடல் பகுதியில் தீவிரமாக தேடி வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மாயமான மீனவர்களை மீட்டு கரை திரும்பி வருவதாக மரைன் போலீசார் தகவல் கிடைத்தது.

    இந்த விசைப்படகு நேற்றிரவு கரை திரும்பியது. மாயமான 5 மீனவர்களும் பத்திரமாக கரை சேர்ந்தனர்.இதற்கிடையே வள்ளம் உரிமையாளர் எட்வின் ஜெனிலுக்கு திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டது.அவர் முட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கடிய பட்டணம் பங்குத்தந்தை பபியான்ஸ் கூறியதாவது:-

    கடந்த 18-ந் தேதி வழக்கம் போல் வள்ளத்தில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். 40 நாட்டிங்கல் தூரத்தில் செல்லும்போது இரவு வேளையில் எதிர் பாராமல் வள்ளம் கவிழ்ந்தது.இதில் அனைவரும் கடலில் விழுந்துள்ளனர்.

    வள்ளத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தும், முடிய வில்லை. இதனால் வள்ள த்தில் இருந்த கயிற்றை பிடித்து தத்தளித்து நின்று உள்ளனர். 24 மணிநேரம் அவர்கள் கடலில் தத்தளித்து உள்ளனர்.

    மறுநாள் வள்ளத்தை நிமிர்த்தி, அதன் மேல் ஏறி உட்கார்ந்து இருந்து உள்ளனர்.அப்போது தான் அழிக்கால் விசைப்படகு அங்கு வந்துள்ளது. அவர்கள் வள்ளத்தில் இருந்த 5 மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்துள்ளனர் என்றார்.

    • போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பஸ் நிலைய ரோட்டில் சிலுவை நகர் அருகே டாஸ்மாக் அரசு மது கடை பக்கம் நடுரோட்டில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கவிழ்ந்து கிடந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்1.45 மணிக்கு அந்த வழியாக வந்த யாரோ சில நபர்கள் பார்த்து இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாரா? அல்லது வேறு ஏதாவது வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தாரா? அல்லது யாராவது சமூக விரோத கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டயருக்கு அடியில் வைத்த கல்லை எடுத்த போது மதில்சுவரில் மோதி உடல் நசுங்கியது
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன் குடியிருப்பை அடுத்த தேங்காய்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 43). டெம்போ டிரைவர்.

    இவர்நேற்றுமாலை சுமார் 3மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் கட்டிடக் கழிவுகளை ஏற்றுவதற்காக தனது டெம்போவை ஓட்டி வந்தார். அங்கு அவர் கட்டிட கழிவுகளை ஏற்றுவதற்காக டெம்போவை சாலை ஓரமாக நிறுத்தி வைத்து இருந்தார். அவர் தனது டெம்போவை நிறுத்தி வைத்திருந்த இடம் பள்ளமாக இருந்ததால் அந்த டெம்போ நகராமல் இருப்பதற்காக டயருக்கு அடியில் டிரைவர் ஜேக்கப் கல்ஒன்றை தடுப்பு கொடுத்து வைத்து உள்ளார்.

    லோடு ஏற்றிய பின்பு டயருக்கு அடியில் வைத்திருந்த கல்லை டிரைவர்ஜேக்கப் அகற்றினார். அப்போது டெம்போ "திடீர்" என்று நகர்ந்து ஜேக்கப்பை அருகில்உள்ள மதில் சுவருடன் சேர்த்து இடித்துள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேக்கப்பை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×