search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்ட்"

    • மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார்.
    • அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நயந்தாரா நடித்தார். இந்தி சினிமாவில் நயந்தாராவிர்கு கதாநாயகியாக முதல் படம் இதுவே. இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜவான் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி படத்தில் நடித்தார்.

    நயன்தாரா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என மொழி வேறுபாடின்றி பல முக்கியமான நட்சத்திர பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சித்தார்த் மற்றும் மாதவன் நடித்திருக்கும் டெஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

    அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நயன் தாரா நடிக்கவுள்ளார். இப்படமானது பெண்களை மையமான கதைக்களம் ஆகும். இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    சசிகுமார் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஒரு வித சமூக கிளர்ச்சியை உண்டாக்கும். சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. . நடிகர் சூரி, உன்னி முகுந்தன் மற்றும் சசிக்குமார் இணைந்து கருடன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தககது.

    மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் இருக்கின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘டெஸ்ட்’.
    • இப்படத்தில் பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.

    தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டெஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • நடிகை நயன்தாரா ’டெஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்கிறார்.

    தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.



    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • நயன்தாரா, மாதவன், சித்தார்த் இணைந்து நடிக்கும் படம் டெஸ்ட்.
    • இப்படத்தின் மூலம் பாடகி சக்தி ஸ்ரீ இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    டெஸ்ட்

    டெஸ்ட்

    'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளனர். 


    டெஸ்ட்

    டெஸ்ட்



    அதன்படி இப்படத்தில் என் உச்சி மண்டைல, மக்காயல, அக நக உள்ளிட்ட பல பாடல்களை பாடிய பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
    • இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    டெஸ்ட்

    டெஸ்ட்

    'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி 934 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். #ViratKohli #ICC

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 149, 51 ரன்கள் எடுத்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

    934 புள்ளிகளுடன் கோலி முதலிடமும், 929 புள்ளி என்ற சிறிய வித்தியாசத்துடன் ஸ்மித் இரண்டாம் இடமும், ரூட் 865 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். பந்து வீச்சாளர்களில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 884 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    125 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 
    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு ஐபிஎல் தொடரில் எனது சிறப்பான பங்களிப்பு முக்கிய காரணம் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற, லீட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    லார்ட்ஸ் போட்டியில் 67 ரன்கள் அடித்திருந்த ஜோஸ் பட்லர், லீஸ்ட் போட்டியில் 80 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 2014-க்கு பின்னர் ஒரு முதல்தர சதம் கூட அடிக்காமல் இருந்த பட்லர் பாகிஸ்தான் தொடருக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில், டெஸ்ட் அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்க ஐபிஎல் சீசன் முக்கிய காரணம் என பட்லர் தெரிவித்துள்ளார். ‘இரண்டு வாரங்கள் நான் பங்கேற்ற ஐபிஎல் அதிகமான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்தது. அதிகமான ரசிகர்கள் மத்தியில் ஒரு வெளிநாட்டு வீரர் விளையாடும் போது ஏற்படும் அழுத்தத்தை எதிர்கொண்டேன். அது போன்ற சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொண்டேன்’ என பட்லர் கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த விருத்திமான் சாஹா காயம் காரணமாக விலகியுள்ளதால், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார். #INDvAFG #DineshKarthick
    மும்பை:

    வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. 

    இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் மருத்துவரின் பரிந்துரையின் படி சிகிச்சை பெற்று வரும் சகா, ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் சகா விற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

    மேலும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தொடர்வார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
    ×