என் மலர்
நீங்கள் தேடியது "statues"
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தில் பழமை வாய்ந்த பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு அறையில் பல கோடி மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி மர்ம மனிதர்கள் சிலர் இந்த கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த 6 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியாகும்.
இந்த கொள்ளை குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் செஞ்சி அருகே அனந்தபுரம் செல்லும் வழியில் அத்தியூர் என்ற காட்டுப்பகுதி உள்ளது. அந்த இடத்துக்கு சுரேஷ் என்பவர் சென்றார். அங்கு சாமி சிலைகள் கிடந்தன. அதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து அனந்தபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் காட்டுப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு 4 ஐம்பொன் சிலைகள் கிடந்தன. அதில் 3 புத்தர் சிலைகளும், ஒரு காமாட்சி அம்மன் சிலைகளும் இருந்தது. போலீசார் அந்த சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிலைகள் பெரும்புகை ஜெயின் கோவிலில் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது. அந்த சிலைகளை காட்டுப்பகுதியில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.
இது தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மாலைமலர் நிருபரிடம் இன்று கூறியதாவது:-
ரன்வீர்ஷாவுக்கு இந்த சிலைகள் யார் மூலமாக எப்படி வந்தது என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் எப்படியும் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கும் என்பதால் முழு அளவில் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.
எங்களது கை காசில் இருந்தே சிலைகளை எடுத்துச் சென்றுள்ளோம். வழக்கு செலவுக்காக முதலில் செலவு செய்து விட்டு பின்னர் எழுதி வாங்கும் நிலை போலீசில் மாற வேண்டும்.
இந்த சிலைகளை ரன் வீர்ஷா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலான சிலைகளை ரன்வீர்ஷா தனது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்துள்ளார்.
சிலைகள் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்த பின்னர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவோம். தவறு செய்தவர்கள் தப்ப முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #IdolWingRaids #PonManickavel