search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் 5ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை - பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    திருப்பூரில் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள். 

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் 5ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை - பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • 1அடி முதல் 10 அடி உயரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • விநாயகருக்கு பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து அமைப்புகள்சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டசிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி,விஷ்வ இந்து பரிஷத்,இந்து மக்கள் கட்சி, இந்து முன்னேற்ற கழகம், சிவசேனா என பல்வேறு அமைப்புகள் மற்றும்பொதுமக்கள் சார்பில்,தங்கள் பகுதியில் சிலைகள் பிரதிஷ்டை செய்யஉள்ளனர்.இதில் முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் சிலைகளை இன்றுபிரதிஷ்டை செய்துள்ளனர். வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில், அனுமன் தூக்கிசெல்வது போல், ரத விநாயகர், சிம்ம வாகனம் விநாயகர், யானை வாகனம்,ஆஞ்சநேய விநாயகர்,கருட விநாயகர் என 1அடி முதல் 10 அடிஉயரங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள விநாயகருக்கு பூஜைகள் நடத்தி தினசரி பொதுமக்களுக்கு அன்னதானமும்வழங்கப்படுகிறது.

    பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளவிநாயகர் சிலைகளை கரைக்கமாவட்டம் முழுவதும் 7இடங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.இந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.நாளை, குன்னத்தூர், ஊத்துக்குளி, பொங்கலூர், காங்கயம்,குண்டடம் பகுதியில் வைக்கப்படும் விநாயகர்சிலைகள், 2-ந் தேதி, அவிநாசி, தாராபுரம், வெள்ளகோவில்,பல்லடம்,மூலனூர்,உடுமலை,3-ந்தேதி மடத்துக்குளம், திருப்பூர் மாநகரம்ஆகிய நாட்களில் இந்து முன்னணி சார்பில் விசர்ஜனம்ஊர்வலம் நடக்கிறது.சிலைகளின்பாதுகாப்பு உள்ளிட்டபல்வேறுஅறிவுரைகளை இந்து அமைப்பினருக்குபோலீசார் வழங்கி உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின், விசர்ஜனம்ஊர்வலம் நடப்பதால் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×