search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருங்காட்சியகம்"

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார சிறப்பு நடுகற்கள் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உலக மரபு வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சங்ககாலத்தில் இருந்தே வீரச்செயல் செய்தவர்க ளுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால் சங்க காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்கள் அழிந்துபோயின. கி.பி 6-ம் நூற்றாண்டு தொடங்கி 9-ம் நூற்றாண்டு வரை பல்லவர், வாணர் கால நடுகற்கள் நமக்கு கிடைக்கி ன்றன. தர்மபுரி, செங்கம் பகுதிகளில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த வா ணர்க ளின் நடு கற்கள் அதி கம் கிடை க்கி ன்றன.

    9-ம் நூற்றா ண்டுக்கு பின் சோழர்கள், வாண கோவ ரையர்கள், குறுநில நாடுகளில் நடுக ற்கள் கிடைக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் வைக்க ப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்களில் கல்வெட்டுகள் காணப்ப டுகின்றன. மன்னரின் பெயர், ஆட்சி ஆண்டு, வீரச்செயல் செய்த வீரனின் பெயர், தந்தையின் பெயர், ஊர், எதற்காக இற ந்தான் போன்ற விவரங்கள் கல்வெ ட்டில் பொறிக்கப்ப ட்டன.

    தொறுபூசல் எனப்படும் கால்நடைகளை கவர்தல், மீட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. 15-ம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டு வெட்டும் வழக்கம் குறைந்து போனது. இன்றும் கூட சில பிரிவுகளில் இறப்பின்போது கல்லெடுக்கும் வழக்கம் உள்ளது.

    நடுகல்லில் பல வகைகள் உள்ளது. நினைவுக்கல், வீரக்கல், நவகண்டம், அரிக ண்டம், சதிகல், புலிகுத்திப்ப ட்டான் கல், ஆநிரைக்கல் என அமைக்கப்பட்டது. இது மிக பழமையான கி.மு. 4-ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்காப்பியர் இலக்கிய விதிப்படி எழுதப்பட்ட முதல் நடுதல் புள்ளிமான் கோம்பை (தேனி) தாதா பட்டி (திண்டுக்கல்) உள்ளி ட்ட 69 நடுகற்களின் புகைப்ப டங்கள் காட்சி ப்படுத்தப்ப ட்டுள்ளன. இந்த கண்கா ட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறி ப்பிட்ட என்னை கவர்ந்த கல்வெட்டு என்கிற கல்வெட்டின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது.இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    • மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.
    • மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.

    மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் இன்று முதல் பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

    மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள்உள்பட பலர் பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட் கள் உள்ளன. அந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி தற்போது முழுமையான கைராட்டை கண்காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் குடிசைத்தொழிலாக வருமானம் ஈட்டவும், வீட்டில் தங்களது துணி களை நெய்து கொள்ளவும் ஒரு கருவியாகத் திகழ்ந்தது இந்த கைராட்டை ஆகும்.

    நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சி யின் நோக்கமாகும் என்று மாவட்ட அரசு அருங்காட்சி யக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்தார். இந்தக்கண்காட்சியை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள்உள்பட பலர் பார்வையிட்டனர்.

    • சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்
    • கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சிய கத்தில் ஏராளமான அரிய பொருட்கள் உள்ளன. இந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தமாதம் கலைநயம் மிக்க பாரம்பரிய விளக்குகள் கண்காட்சிகள் இடம்பெற்றன.

    கலை ஆர்வம் மிக்க நமது முன்னோர்கள் செம்பிலும், பித்தளையிலும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் வீட்டு உபயோக பொருள்களை வடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக விளக்குகளில் பல்வேறு வகையான விளக்குகளை பயன்படுத்தி உள்ளனர். இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விளக்குகளை பார்ப்பவர்கள் காமாட்சி அம்மன் விளக்கு என்று கூறினர். ஆனால் உண்மையில் இவை கஜ லட்சுமி விளக்குகள் என்று சொல்லப்படுகின்றன.2 யானைகளுக்கு நடுவில் அம்மன் உள்ளது. கஜம் என்பது சமஸ்கிருதத்தில் யானையை குறிக்கும். 19-ம் நூற்றாண்டில் இந்த மாதிரியான விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ள விளக்குகள் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. நமது முன்னோர்கள் பயன்படுத்திய அரும் பொருட்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சியின் நோக்கம் என்று கன்னியாகுமரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
    • பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம் மற்றும் கோபத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் தீன்மூர்த்தி பவன் வளாகத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் உள்ளது.

    இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, தீன்மூர்த்தி பவனில் தங்கியிருந்தார். அவர் மறைந்த பிறகு அங்கு நூலகமும், விடுதலை போராட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு குறித்து அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு நினைவு சின்னமாக மாற்றப்பட்டது.

    இதற்கிடையே நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி கடந்த மாதம் நடந்த அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர், பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில் நேரு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியதாவது:-

    நேருவையும், அவரது பாரம்பரியத்தையும் மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது, அழிப்பது என்ற ஒற்றை புள்ளி நிகழ்ச்சி நிரலை மோடி கொண்டிருக்கிறார்.

    பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம் மற்றும் கோபத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது. நேரு பாரம்பரியத்தை மோடி அரசு அழித்து வருகிறது. இதுவே அவரது அரசின் செயல் திட்டம் ஆகும்.

    சுதந்திர போராட்டத்தில் நேருவின் மாபெரும் பங்களிப்புகள், இந்திய தேசிய அரசின் ஜனநாயக, மதச்சார் பற்ற அரசியல், தாராளவாத அடித்தளங்களை கட்டியெ ழுப்புவதில் அவர் செய்த மகத்தான சாதனைகள் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

    இடைவிடாத தாக்குதல் இருந்த போதிலும் நேருவின் பாரம்பரியம், உலகம் காணும் வகையில் வாழும். அவர் வரும் தலைமுறைகளுக்கும் ஊக்கமளிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் மேம்பாலம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், அருங்காட்சியக ஆணையர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தஞ்சை பெரியகோவிலை கட்டி மாமன்னன் ராசராச சோழன், கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் என பிற்கால சோழர்களின் பங்களிப்பு என தமிழகத்தில் நிலை நாட்டிய பெருமை உண்டு. சோழர்களின் போர் வெற்றி, கோவில் பணிகள், சமுதாய பணிகள், கலைத்திறன் என எல்லாவற்றையும் விளக்கக்கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைய உள்ளது.ஏற்கனவே பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவின்போது சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட காலம் தான் நடைபெற்றது. தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது. பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதாக அருங்காட்சி யகத்திற்கு வந்து பார்ப்பதற்கு சிறந்த இடமாக அமைந்துள்ளது. விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதலின்பேரில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், தஞ்சை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.
    • வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை வழங்கி உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    பெங்களூரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சாஸ்தா ரமேஷ். இவர் தான் வரைந்த இந்திய பாரம்பரிய ஓவியங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜிடம் வழங்கினார். இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    மாணவர் சாஸ்தா ரமேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க வந்தபோது இங்குள்ள சிற்பங்களைப் பார்த்து இதே போன்று பாரம்பரியம் மிக்க ஓவியங்களை வரைய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி, இந்திய பாரம்பரிய ஓவியங்களான 13 வகையான மயில்களை வாட்டர் கலரில் வரைந்து, புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.

    இந்த ஓவியப் புத்தகம் நியூயார்க் நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த 13 வகையான ஓவியங்களில், பல நூறு ஆண்டுகள் பழமையான வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்கி உள்ளார். இதைத் தொடர்ந்து ஓவிய ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்திய பாரம்பரிய ஓவியங்களைப் பற்றியும், வகுப்புகள் எடுக்கவும், இது பற்றிய புத்தகம் எழுதவும் முயற்சி மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பன்னீர்செல்வம், அருங்காட்சியக பணியாளர்கள் பெருமாள், செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் போது 13 வகையான ஓவியங்கள் குறித்து அருங்காட்சியகத்தில் கல்வெட்டு பயிற்சி பெற்று வரும் 3-ம் ஆண்டு வரலாற்று மாணவ, மாணவிகளுக்கு சாஸ்தா ரமேஷ் விளக்கம் அளித்தார்.

    • தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தஞ்சாவூர் பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலம் அருகில் உள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் ஏற்கெனவே தேர்வு செய்து, துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் காண்பித்துள்ளார்.

    இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது என துறைச் செயலர் கூறியதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாநகரில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருப்பது அரிய வாய்ப்பாக இருக்கிறது.

    இந்த இடத்துக்கு வருவதற்கான வழிகள் குறித்து விரிவான ஆய்வு செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.

    ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.

    இதை மேலும் ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்பட்டு, முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று அருங்காட்சியகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அருங்காட்சியகம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகரன், டி. கே. ஜி. நீலமேகம், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தாசில்தார் சக்திவேல், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் முத்துக்குமார், தஞ்சாவூர் அரசு அருங்கா ட்சியம் காப்பாட்சியர் (பொ) சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளவைகள் குறித்து கலெக்டர் எடுத்து கூறினார்.
    • தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம் ஆகியவற்றிலும் ஆய்வு நடத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

    நில அளவீட்டு துறை காட்சியறை, கைவினைப் பொருட்கள் காட்சியறை, ராஜாளி பூங்கா உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தார். அவருக்கு அருங்காட்சி யகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து விதமான அம்சங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் எடுத்துக் கூறினார்.

    மேலும் அருங்காட்சி யத்தை தினமும் வரும் சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் எண்ணிக்கை குறித்தும் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம், தமிழ்நாடு ஓட்டல் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது சுற்றுலா வளர்ச்சி மேலாண் இயக்குனர் கீதா, துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் சக்திவேல், அருங்காட்சியக நிர்வாக அலுவலர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • சிறப்பு சுற்றுலா தலங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் மணிவாசன் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமை ச்சரின் உத்தரவுப்படி, தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்வது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவுக்கிணங்க விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

    மேலும், மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள சிறப்பு சுற்றுலா தலங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் சுற்றுலா துறை ஆணையா் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன், சுற்றுலா அலுவலா் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • பொருநை அருங்காட்சியகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.
    • ஆதிச்சநல்லூரில் உள்ளது உள்ளபடியே 'சைட் மியூசியம்' அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மாநில அரசு சார்பில் அகழாய்வு செய்து கிடைத்த பொருள்களை நெல்லையில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியகம் மூலமாக காட்சிபடுத்த உள்ளனர்.

    ரூ. 33.2 கோடி செலவில்

    இதற்காக ரூ. 33.2 கோடி செலவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கான விழா கடந்த 18- ந்தேதி நடந்தது. இது போலவே மத்திய அரசு தொல்லியல் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி ஈடுபட்டு வருகிறது.இதற்காக இடம் தேர்வு உள்பட பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் பொதுமக்களிடம் இலவசமாக இடத்தினை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து உலகம் முழுவதும் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு வந்து இங்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.

    சைட் மியூசியம்

    மேலும் ஆதிச்சநல்லூர் ஏ, பி, சி சைட் என 3 இடங்களில் அகழாய்வு செய்து அந்த இடங்களில் உள்ளது உள்ளபடியே 'சைட் மியூசியம்' அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. அருங்காட்சியக பணிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.

    இதற்காக மத்திய அமைச்சர் வருகை தரும் இடம், மேலும் மேடை அமையும் இடம், அடிக்கல் நாட்டும் இடம் உள்பட இடங்களை கலெக்டர் பார்வையிட்டார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் விளக்கம் அளித்தார்.

    கலெக்டர் ஆலோசனை

    மேலும் அருங்காட்சியக பணிகள் குறித்தும், தொல்லியல் துறையினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் மேல் கண்ணாடி மூலம் அமைய உள்ள சைட் மியூசியத்தை நேரில் பார்வை யிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் மூலமாக வெளியிடப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட வரலாறு நூலை அருண்ராஜ், கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் நூலின் ஆசிரியரும், தொல்லியல் துறை அலுவலருமான யதீஸ்குமார், தொல்லியல் ஆய்வாளர் அறவாழி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம்  வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 6,7,8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்குஹோமி ஜகாங்கீர் பாபா என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. 

    அதில் முதல் இடத்தை அத்தியூத்து அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஹஸன் அலியும், 2-வது இடத்தை ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி மற்றும் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி லேகா ஸ்ரீ, 3-வது இடத்தை முதலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெயமாலினி ஆகியோர் பெற்றனர்.

    9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இஸ்ரோ - ஐ.எஸ்.ஆர்.ஓ. என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது இதில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர் தனசேகர், விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரீத்தி ஜிந்தா, 3-ம் இடத்தை சித்தார்கோட்டை முகம்மதிய மேல்நிலைப்பள்ளி மாணவி காருண்யா ஆகியோர் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளிக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைத்தனர்.


    ×